கர்மா — நங்கநல்லூர் J K SIVAN
என் ஆன்மீக கட்டுரைகளில் அடிக்கடி இந்த வார்த்தை வருகிறதாம். பலரால் இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஆகவே பெரிய ஆன்மீக ஆத்ம ஞான விஷயங்களை எழுதும்போது நடுநடுவே இந்த LKG விஷயமும் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அது தப்பில்லை. ரொம்ப அவசியம். கர்மா மூன்று வகைப்படும்.
சஞ்சித கர்மா: மொத்தமாக நல்லது கெட்டது நாம் புரிந்த செய்கைகள் எல்லாமே சேர்ந்த மொத்த கர்மா. பெரிய மூட்டை. பல ஜன்மாக்களில் நாம் சேர்த்து வைத்த பொக்கிஷம்!
ப்ராரப்த கர்மா என்று அடிக்கடி சொல்கிறவர்களை அப்படி என்றால் என்ன என்று கேட்டால் அது என்ன வென்றே சரியாக சொல்லத் தெரியவில்லை என்கிறார்கள். முன் செய்த வினையில் கொஞ்சம் தான் இது. மேலே சொன்ன சஞ்சிதத்தில் இருந்து இந்த பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய பாகத்தின் ‘பயன்’ ‘பலன்’ தான் ப்ராரப்த கர்மா. முன்பு செய்த வினையின் பலனாக இந்த பிறவியில் நாம் தப்பாமல் அனுபவிக்கவேண்டியது. அதை எதாலும் எவராலும் தவிர்க்க முடியாது.அனுபவித்தே ஆக வேண்டும். முன் செய்த வினையின் பலனாக தான் நாம் இப்போது பூமியில் பிறவி எடுத்துள்ளோம். மனிதர்களாக பிறந்த நாம் அதிர்ஷ்டசாலிகள். ஏதோ கொஞ்சம் நல்ல கர்மாக் கள் செய்ததின் பலன் இது. தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே. முன் செய்த காரியங் களின் பலன் தான் இப் பிறவியில் அனுபவிப் பது. மேலே சொன்னது தான் திரும்ப சொல்கிறேன். சஞ்சித கர்மா என்பது இதுவரை எடுத்த பிறவிகளில் செய்த மொத்த கர்ம பலன். இந்த பிறவியில் நாம் அனுபவிப்பது அதில் இந்த பிறவிக்கான கட்டாயமான பாகம். சஞ்சித கர்மா 500kg என்றால் ஏதோ ஒரு 20kg என்று ஒரு சிறு பாகம் இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டியுது என்று எடுத் துக் கொள்வோம். உதாரணத்துக்காக சொன்னது. அந்த அளவை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டாம். ஒவ்வொரு பிறவியிலும் நமக்கு அனுபவிக்க கர்ம பலன் தரப்படுகிறது. அதை தான் ப்ராரப்த கர்மா என்கி றோம். அதாவது இந்த ஜன்மாவில் அனுபவிக்க வேண் டிய பங்கு, போர்ஷன். பாகம். வினை விதைத்தவன் வினை அறுப்பது. தினை விதைத்தவன் தினை அறுப்பது இது தான். ஜனனம் மரணம் ரெண்டுமே நமது ப்ராரப்த கர்மாவுக்கு ஏற்ப தான் நிகழ்கிறது.
ஆகாமி, க்ரியமாண கர்மா: நாம் இப்போது இந்தப் பிறவியில் ஒவ்வொரு வினாடியும் செய்யும் காரியங் களின் பலன். இதன் பலனை பின்னால் அப்புறம் தான் ப்ராரப்தமாக அனுபவிக்க வேண்டி வரும். இதுவே நம் குணத்தை, நமது விருப் பத்தை, செய்யும் விதத்தைப் பொறுத்தது, வெளிப்படுவது. நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் சஞ்சிதத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியுமே. ஆகவே இந்த பிறவியில் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம்.
ப்ராரப்த கர்மாவை ஆத்ம ஞானத்தால், பகவானிடம் சரணடைவதன் மூலம், குறைத்துக் கொள்ள வழி உண்டு என்கிறார்கள் மஹான்கள்.கர்மாக்கள் எண்ணற்ற ஆயிரம் பிறவிகளில் நாம் செய்த காரியங்கள். அவற்றில் நல்லவையும் உண்டு கெட்டவையும் உண்டு. கெட்டது தான் தான் ஜாஸ்தி. அது எல்லாம் ஒன்றாக சேர்ந்தது தான் சஞ்சித கர்மா. புருஷார்த்தம் எனப்ப டுவது நாம் மனம் வாக்கு காயம் மூன்றினாலும் ஒன்று பட்டு இறைவனை நாடுவது. ஆத்மாவைத் தேடுவது. அதன் மூலம் கர்ம பலனைக் குறைத்துக் கொள்ள லாம். மார்க்கண்டேயன் தனது மரணத்தை அப்படித் தான் போக்கிக் கொண்டான். பகவானிடம் பரிபூர்ண, தீவிர ஈடுபாடு இருந்தால் தான் ப்ராரப்த கர்மாவைக் கட்டுப்படுத்த, அழிக்க முடியும்.
தேகத்துக்கும் ஆத்மாவுக்கும் அகம்பாவம் தடையாக இருக்கிறது. ”நான் ” எனது” என்பவை எல்லாம் வளர் வது இவற்றால் தான். கர்மாவுக்கு மூல காரணம் இவை. கிருஷ்ணன் தான் டாக்டர். அவனால் இந்த தீராத வியாதியை குணப்படுத்த முடி யும். அவனே கீதை யில் சொல்கிறானே:
”உன் எல்லா பாபமும் இனிமேல் என்னுடையது நீ கவலைப்படாதே ”
‘अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: || 66||ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi:
பாரதம் படித்த பல பேர் ”பாண்டவர்கள் தான் கிருஷ்ணன் தோழர்கள் ஆச்சே, பிறகு ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள்? என்று நினைக்கிறார்கள்.
”யார் சொன்னது பாண்டவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று? அவர்கள் செய்தது அனைத்தும் கிருஷ்ணனின் வேலையைத் தானே. கொடியவர்களை அழிக்க தானே அவர்களும் முயன்றார்கள். கிருஷ்ணன் உதவியோடு வெற்றி பெற்றார்கள்”
மூகர் என்பவரால் பேச முடியவில்லை, குமரகுருபரர் ஐந்து ஆறு வயது வரை பேசவில்லை பகவானை வேண் டிக் கொண்டு அவன் பூர்வ ஜென்ம கர்மாவினால் ஊமையான அவர்களது பாபத்தை நீக்கி பேசவைத் தானே. இது ப்ராரப்தத்தை அவன் அழிப்பவன் என்று நமக்கு உணர்த்தவில்லையா? ப்ராரப்தம் என்பதின் அர்த்தம்: ”ப்ரா ” : முந்தைய. ”அப்தம்”: வருஷங்கள், காலம், பிறவிகள். கர்மா: செய்கைகள்.
கிருஷ்ணனையே சதா நினைத்து வேண்டுபவன், கிருஷ்ணனாகவே ஆகிவிடுகிறான். அப்புறம் பாபம் எப்படி நெருங்கும்?நமது திருவள்ளுவரும் பெரிய ப்ரம்ம ஞானி அல்லவா? அவர் கர்மாவை ஊழ்வினை என்று விளக்குகிறார்.
”வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது”. ‘
இப்படி நான் சொல்லும் வழியில் நீ நடந்தால் ஊழ் வினையின் பயனை அகற்றலாம். இல்லா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுப விக்கமுடியாது” கைக்கெட்டியது வாய்க்கெட்டாது. எல்லாம் கர்மபலன்.
”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்”
கர்மா சக்தி வாய்ந்தது. இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந் தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்ப தால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக் கின்றன? என்கிறார்.வள்ளுவர்.
நாயன்மார் தேவாரத்தில் ”அவனருளால் அவன் தாள் வணங்கி….” என்று சொல்வது இதைத்தான். அவனல் லால் ஒரு அணுவும் அசையாது.