HUMAN BODY J K SIVAN

ஆச்சர்யமான  உடம்பு  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

இந்த பிரபஞ்சத்தில்  பகவான் படைத்த  ஜீவராசிகளின் மிக  உன்னதமான  உயர்ந்த பிறவி மானிடராக  பிறத்தல்.  இதில் ஒன்றில் தான் நாம்  நம்மைப் படைத்த   கடவுளையே  போற்றவும்  தூற்றவும்முடியும், அவர் சிலையை  வடிக்கவும் உடைக்கவும்  முடியும், அவர் கோவிலை  கட்டவோ  இடிக்கவோ  முடியும், அதில் உள்ள பொருள்களை,  பணத்தை பாதுக்காகவோ கொள்ளையடிக்கவோ, திருடவோ  கூட முடிகிறது.  மொத்தத்தில்  சிவாஜி மஹாராஜாவாகவோ  ஒளரங்கசீப்பாகவோ நாம் இருக்க காரணம்  பகவான் நமக்குக் கொடுத்த  பேசும் சக்தி, சிந்திக்கும் திறன், எண்ணத்தை செயலாக்கும்  வசதி.  காசை கண்டுபிடிக்கும் மூளை,  அதை அபகரிக்கும்  திறமை, அதால் வரும் துன்பங்களை நாம் நிச்சயம் அனுபவித்தே  தீரவேண்டும்.  வினை விதைத்து விட்டு தினை அறுக்கவா முடியும்?

நமது உடம்பு  பல ரஹஸ்யங்கள் கொண்ட அற்புத  அமைப்பு. சிலவற்றை ஏற்கனவே  சொல்லி இருக்கி றேன், மேலும் சில தகவல்கள் இதோ.

மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.   இதை  சின்னது  என்று நினைக்க வேண்டாம்.  இதனால்  நாம் இழைக்கும் தீங்கு பல மைல்கள்  நீளமானது. ஆழமானது. நாவினால் சுட்ட வடு  ஆறுவதே இல்லை..

நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும்போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.  நல்லவேளை நாம் காற்றை காசு கொடுத்து வாங்கவேண்டிய  அவசியம் இல்லாமல் வைத்திருக்கிறான் நம்மைப் படைத்தவன். இல்லாவிட்டால்  காற்றைக் கூட பிடித்து  அடைத்து கடையில் வாங்கி  சுவாசிக்க வேண்டி இருக்கும்.  ஏற்கனவே  ஆக்சிஜன் எனும் பிராணவாயு சிலிண்டரில் அடைக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் காசு கொடுத்து ஸ்வாசிக்கிறோம். 

நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.. ஆல்கஹால்  கருவாடு சமாச்சா ரங்கள்  சாப்பிடாவிட்டாலும் ஊறுகாய் நிறைய சாப்பிடுவதை இனியாவது குறைத்துக் கொள்ள வேண்டும்.

 பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000  ஆயிர  அணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.  அதனால் தான் கொலையாளிகள், குற்றவாளிகள்  ஆண்களில்  அதிகம் இருக்கிறார்களோ ?  என்ன சொன்னாலும் பெண்க ளின் மூளை அபாரமாக வேலை செய்யும்.

முடிவெடுப்பதில் பெண்களை ஆண்கள் என்றும்  வெல்லமுடியாது. பிடிவாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கே  கூடாது  என்று பாடியவன் எவ்வளவு அனுபவஸ்தனோ?  யாருக்குத் தெரியும்?

நூறு கிலோவுக்கு மேல்  கூட  எடையுடன் நாம்  பருத்த, பெரிய  உடல்களை கொண்டவர்க ளாக இருக்கிறோம்.   நமது  மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.  நாம் வளர வளர  அதுவும் வளர்கிறதே.

 நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.  ”தலையை அடகு வைத்தாவது” என்று  சொல்கிறோம், பேசுகி றோம்  ஆனால்  எங்கேயும் தலையை அடகு வைக்கும் கடை இதுவரை கண்ணில் படவே இல்லை.  அவசரத் துக்கு பணம் கொஞ்சம் சம்பாதிக்க வழியில்லையே. ”தலையாலே  தண்ணி குடிக்கவும்” இன்னும்  கற்றுக் கொள்ளவில்லை 

 மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும். எவ்வளவு சக்தி வாய்ந்தது நமது மூளை. அது அத்தனையையும் நல்ல வழியில் எல்லோ ரும் செலுத்தினால் இந்த உலகம் எவ்வளவு பெரிய  ஸ்வர்கமாக இருக்கும் என்று யோசித்து பார்த்தால் ஆனந்தமாக இருக்கிறது. 

 நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க  நம் கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது. 

 குரங்குகள்  PICK  POCKET  அடிக்க முடியாது. பிளேடு BLADE வைத்து  பையை கிழித்து  திருட தெரியாது. இடது கை  கட்டைவிரல் தான்  அரிசி பருப்பு சர்க்கரை வாங்க  ரேஷன் கடைகளில் ரேகை வைக்க உதவுகிறது. பொய்  பத்திரங்கள்  கூட  பதிவு செய்ய முடிகிறது.

சொக்காய்  கசங்கி இருந்தால்  இஸ்திரி  பெட்டி  தேய்த்து சுருக்கம் எடுத்து  மடிப்பாக உடுத்த முடியும். ஆனால் கண்டிப்பாக  மூளையில் சுருக்கங்கள் அவசியம். மடிப்பு மடிப்பாக நமக்கு  மூளை இருக்கிறது,    நிறைய மடிப்பு இருந்தால்  மூளையின் அது அறிவு  அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது என்று கண்டுபிடித் திருக்கிறார்கள். 

 மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும். பரிசோதனை செய்து  பார்க்க வேண்டாம். 

பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது. என்று சொல்கி றார்களே  இது இதை படிக்கும் வரை நமக்கு தெரியுமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *