AASIRVAADHAM J K SIVAN

ஆசீர்வாதம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

 யாராவது நம்மை வாழ்த்தும்போதோஅல்லது நாம் யாரையாவது வாழ்த்திஆசிர்வதிக்கும்போதோ, ”நூறாண்டு வாழ்க” என்கிறோம்.  நூறு என்பது ஒரு மனிதனுக்கான  ரொம்ப நீண்ட  ஆயுட் காலமாக இப்போது   கலியுகத்தில் நினைக்கிறோம்.  இதற்கு முந்திய யுகங்களில் செஞ்சரி CENTURY  போட்டவர்கள் ரொம்ப பேர் இருந்திருக் கிறார்கள்யுகங்கள் மாறும்போது மனிதர்களின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறதுகலியுகத்தின் கடைசியில் 20 வயசு என்பதே மனிதனுக்கு  தீர்க்காயுசாக இருக்கும் என்று சுக ப்ரஹ்ம  ரிஷி பரிக்ஷித்துக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது.  நினைத்துப் பார்க்கும்போதே  இருபது வயது வாழ்வதே  தொண்டு கிழ வயசா? நாம் இப்போது அதை அல்பாயுசு என்றல்லவோ கருதுகிறோம்.

எங்கள் காலத்தில், அதாவது 75-80  வருஷங்கள் முன்பு   லெட்டர் எழுதும்போது கூட   சிவி.  சிவன்  என்று தான் என்  பெயரை குறிப்பிடுவார்கள்எல்லோரையும் சிரஞ்சீவி என்று சொல்வது வழக்கமாக இருந்ததுசிரஞ்சீவி என்றால்  அமரன் , மரணற்றவன் என்று அர்த்தம்.  கல்யாண பத்திரிகைகளில்ஆயுஷ் ஹோமஉபநயன பத்திரிகைகளில் கூட  சிவி . என்ற அடைமொழி இருக்கும்.  பெண்களை சௌபாக்யவதி என்று தான் குறிப்பிடுவார்கள்.  சௌ. ராஜலக்ஷ்மி,  சௌ.சுப்புலக்ஷ்மி என்று  தான்  பெண்கள் பெயர்களை எழுதுவார்கள்.  பெரியவர்களை  நமஸ்காரம் பண்ணும்போது ”சிரஞ்சீவியா இரு”  என்பார்கள்இப்போது இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகவோமொத்தமாகவோ  காணோம்.

ஒரு ஸ்லோகம்   நமக்கெல்லாம் பரிச்சயமானது.  ஆசீர்வாத மந்திரம்எல்லா  விசேஷங்களிலும்வாத்யார் சொல்லி அக்ஷதை போட்டு ஆசிர்வதிப்பது.  நிறைய பேர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லைஆகவே அர்த்தம் முழுமையாகவோகொஞ்சமோதெரியாது.

 மந்திர ஸ்லோகம் ரெண்டு வரி தான்.

रोचनो रोचमानः शोभनो शोभमानः कल्याणः |शतमानम भवति शतायुः पुरुषः शतेन्द्रिय आयुष्येवेन्द्रियेः प्रतितिष्ठति ||

rOchanO rOchamAnaH, sObhanaH sObhamAnaH kaLyANaH |shathamAnam bhavathi shathAyuH purushaH shatEndriya AyushyEvEndriyE prathitishtathi ||

ரோசனோ ரோசமானஹசோபனா  சோபமானஹகல்யாணஹ சதமானம் பவதி சதாயுஹ்  புருஷஹ்  ஸதேந்திரிய  ஆயுஷ் ஏவேந்தரிய  ப்ரதிதிஷ்டதி  

என்ன அர்த்தம்?

தேக ஆரோக்கியத்தோடு நூறு வருஷம்உன் கடமைகளை விடாது செய்து கொண்டு  மனம் வாக்கு காயம் எல்லாம் நன்றாக செயற்பட  , அழகுடன்ஒளிவீசியபடிதர்மங்கள் செய்தபடி நீடூழி  வாழ்க

இந்த உடல் எடுத்ததேஇறைவன் அதை கொடுத்ததேபிறர்க்கு உதவஉபயோகமாக இருக்கபிறர் என்று சொல்லும்போது சகல ஜீவராசிகளையும் சேர்த்துஇதம் சரீரம் பரோப காரம் இது தான்..

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *