கொஞ்சூண்டு பெரிய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN
ஞானம் வேறு விஞ்ஞானம் வேறு. ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டு, அதை மனதாலேயே கண்டு களித்து அதோடு இனைந்து ஆத்மாணுவம் பெறுபவன் ஞானி. எதையோ தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று அதைத் தேட முயன்று ஒன்றை ஒருவழியாக கண்டு, அதை பிறர்க்கும் காட்டி பெருமை பெறுபவன் விஞ்ஞானி. விஞ்ஞானி ஞானியாக ஆத்மானுபவம் வேண்டும். ஞானி விஞ்ஞானியாக எளிதில் முடியும். அவனால் எதையும் தேடாமலேயே தெரிந்து கொள்ளமுடியும்.
”வேகம் அடக்கி விளங்கு மெய் ஞானிக்கு யோகம் தான் ஏதுக்கடி – குதம்பாய் யோகம் தான் எதுக்கடி.
நித் திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை ஏதுக்கடி – குதம்பாய் முத் திரை ஏதுக்கடி.”
குதம்பை சித்தரின் வரிகள்.சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந் தத்தை அனுபவித்தனர். உடல் சம்பந்தப்பட்ட விஞ்ஞான அறிவு வாயில் உமிழ் நீர் சுரப்பதை பரிசோதனை செய்து சொல்கிறது. வாய், கன்னம் ,தாடை, போன்ற வாய் பகுதியில் அது எப்படி சுரக்கிறது என்றும் விளக்குகிறது. அதற்கு காரணம் ஒரு சுரப்பி. பிட்யூட்டரி என்று அதற்கு பெயர் என்கிறது. இதெல்லாம் சொல்லாமலேயே, உமிழ்நீர் சுரப்பதை, அறிந்து அதையே உணவாக கொண்டு வாழ்ந்தவர்கள் ஞானிகள். சித்தர்கள் விஞ்ஞானிகள். தேகத்திலிருந்து தானாகவே சுரக்கும் பால் என்று அர்த்தம் த்வனிக்க உமிழ்நீரை காயப்பால் என்று சொல்வார்கள். அது எச்சில் இல்லை. உமிழ்நீர் கழிவுப் பொருளா னால் அன்போது வெளியேற்றப் படவேண்டிய தான் எச்சில். வெட்ட வெளியாகிய சிரசில் ஊறுவது, பசியைப் போக்குவது. ஸஹஸ்ராரத்தில் ஊரும் அம்ருதம் இது என்றும் சொல்லப்படுகிறது. யோகிகள் இதன் மூலம் பலகாலம் ஜீவித்திருந்ததால் அம்ருதம் என்பது சரியே. உமிழ் நீர் தொண்டைப்பகுதி மூலம் உள்ளே இரைப்பைக்கு செல்கிறது. இதை தான் நாம் எச்சிலை முழுங்குவது என்கிறோம்.
ப்ராணாயாமத்தால் பிட்யூட்ரி சுரப்பியை நன்றாகச் சுரக்கச் செய்யமுடியும் என்று கண்டுபிடித்திருக் கிறார்கள்.
ஒளவையாரின் ஒரு வாக்கியம் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது பாருங்கள்:”ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம்.
வாயில் ஊரும் உமிழ்நீரில் ஸ்டார்ச் உள்ளது. நாம் பள்ளியில் படித்தோம் அதை நினைவு கூறுங்கள். தாவரங்கள் சூரிய ஒளியால் தண்ணீர் சக்தியோடு, தம்முடைய உணவை இந்த ஸ்டார்ச் மூலமாக சமையல் செய்து கொள்கிறது. ஒளியும் நீரும் இருந்தால் போதும். ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோ ருமே இப்படி காட்டில் மற்ற செடி கொடி மரங்கள் போலவே தாமும் இப்படி தமக்குள் உணவு தயாரித்து உண்டு வாழ்ந்தவர்கள். உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் என்று மேலே சொன்ன அம்ருதம் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். முன்பு ஒரு முறை எழுதினேன் “மலை மேல் இருப் போர்க்கு மாங்காய் பால் இருக்க தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய்?’ என்ற இதே குதம்பை சித்தர் பாடல் வரிகள். அதை நினைவு கூர்வோம்.
குண்டலினி சக்தியால் ஸஹஸ்ராரத்தில் சுரப்பது தான் அம்ருதம். ஜீவன் சிவனுடன் இணையும்போது உண்டாவது. அது நாக்குக்கு வருகிறது. உமிழ்நீரா கிறது. நிஷ்டையில் சமாதியில் இருப்போர்களுக்கு அது தான் ஜீவன் காக்கும் உணவு. மூச்சை அடக்குபவர்கள். உள்மூச்சு என்னும் வாசியை உபயோகித்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு மூச்சு விட்டால் அதிகம். இப்படி பலகாலம் உயிர் வாழ்பவர்கள் தான் ஜீவன்முக்தர்கள். அம்ருதம் உடலெங்கும் பரவி, மங்காமல், இருப்பதை தான் ”மங்காப் பால்” அதை மாங்காப்பால் என்று படிக்கிறோம். அது இருக்கும்போது வேறென்ன வேண் டும்? அதை தான் நிலைத்து நிற்காத ”தேங்காத பால்” தேங்காப்பால் எதற்கு அவசியம்? என்கிறார்.
இங்கே தேங்காப்பால் என்பது உலக இன்பங்கள்,சுக துக் கங்கள். புலனுணர்வுகள். பேரின்பம் இருக்க சிற்றின்பம் எதற்கு?