THREE DAYS WITH ELDER BROTHER J K SIVAN

மூன்று நாள் அனுபவம். நங்கநல்லூர் J K SIVAN
சமீபத்திய மார்கழி மகா உத்சவத்தில் சங்கீத அலைகள் அனைவரையும் ஆனந்த கடலில் ஒவ்வொரு நாளும் மூழ்க வைக்கும்போது நானும் சுகமாக அதில் திளைத்துக் கொண்டிருபதில் என்ன ஆச்சர்யம்.
ம்யூசிக் அகாடெமியில் ஒரு இளைஞன் அற்புதமாக பாடிய நிகழ்ச்சி ஒன்றை அனுபவிக்க நங்கநல்லூரில் இருந்து சென்றேன். நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி முன்பாக சென்றதால் மியூசிக் அகாடெமி உள்ள TTK தெருவிற்கு எதிரே தெய்வசிகாமணி தெருவுக்கு என்னை அறியாமல் கால் இழுத்துச் சென்றது. அங்கே ‘பிரியமஹால்’ என்ற அடுக்குமாடி கட்டிடத் தில் என் ‘ப்ரியமான ‘ நண்பர் ராதா கிருஷ்ணன் வசிக்கிறார். அற்புதமான மனிதர். ஸ்ரீ க்ரிஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட் நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கு கொள்பவர். அவரைத் தரிசித்து வரலாம் என்று அவர் இல்லத்துக்குச் சென்றேன். பம்பாயிலும் சென்னை யிலும் தெற்கே திருச்சி மற்றும் பல மாவட்டங்களிலும் கொடிகட்டிப் பறந்த பிரபல பரம்பரை வக்கீல்.
”சிவன், நான் 10ம் தேதி ஸ்ரீரங்கம் போகப் போகிறேன் நீயும் வருகிறாயா, ரங்கன் அருகில் நின்று தரிசனம் செய்ய ஏற்பாடு பண்ணி இருக்கிறது ? என்கிறார்.
நான் மார்கழி முழுதும் அரங்கனை, ஆண்டாளைப் பற்றி எழுதுபவன் அரங்க தரிசனம் வேண்டாமென்றா சொல்வேன்?
சரி என்று சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்று திரும்பி ம்யூசிக் அகாடெமி சென்றேன் . என் ஒன்று
விட்ட தம்பியின் பேரன் ஆதித்ய நாராயணன் கச்சேரி யை அனுபவித்து விட்டு நங்கநல்லூர் திரும்பி னேன்.
இக்காலத்து சில இளைஞர்கள், இளைஞிகள் மிக அற்புதமாக வளரும் மஹா வித்வான்களாக உருவெடு த்து வருகிறார்கள். மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் பல ராகங்களில் என்னை மறந்து நாத உபாசனையில் ஸ்வர்கத்தில் இருந்தேன்.
ஜனவரி 9 அன்று வக்கீல் அண்ணா போன் பண்ணி னார்.
”சிவன் நாளைக்கு காலையில் தயாராக இருங்கோ. காரில் உங்களுக்காக காத்திருப்பேன்” என்றார்.
10ம் தேதி காலை காரில் திருச்சி புறப்பட்டோம். வக்கீல் அண்ணாவுக்கு பிறந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கம்பரசம்பேட்டை கிராமம். அவர் மனைவியின் ஊர் அருகிலுள்ள அல்லூர் கிராமம். அந்த கால சம்ப்ரதா யம் என்னவென்றால் இந்த ரெண்டு ஊருக்குள் தான் பெண் பிள்ளை சம்பந்தம் பண்ணுவார்கள். கட்டுப் பாடான அக்ராஹாரங்கள் .
இந்த ரெண்டு கிராமங்களையும் இந்த முறை தான் முதல் தடவையாக சென்று பார்த்தேன். அருமையான ஊர்கள். கொஞ்சம் அதைப்பற்றி அப்புறம் சொல்கி றேன்.
இப்போது 11ம் தேதி விசேஷத்தை பற்றி மட்டும் சொல்கி றேன். வக்கீல் அண்ணாவுக்கு அன்று 89 முடிந்து 90வது ஜென்ம நக்ஷத்ர பிறந்தநாள். அமாவாசை. அன்று மூல நக்ஷத்ரம் ஹனுமத் ஜெயந்தி வேறு சேர்ந்து கொண்டு சிறப்பாக எங்கும் கொண்டாடப்பட்ட நாள். ரங்கனின் தரிசனம் ஒரு ஸ்பெஷல் அயிட்டம்.
இத்தனையும் ஒன்று சேர்ந்த அந்த தினம் ஒரு ஆனந்த மான நாள் அல்லவா? அந்த வைவபத்தில் சில விஷயங் களை ஒன்று ஒன்றாக சொல்கிறேன்.
முதலில் ஹனுமத் ஜெயந்தி பற்றி மட்டும் சொல்கி றேன். நீளம் கருதி அதை தனியாக அடுத்த பதிவில் இடுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *