RASA AASWAADHA THARANGINI (RASANISHYANDHINI) J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்க நல் லூர் J K SIVAN
ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி.
எங்காவது இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா? ஒரு ராஜ சபையில் எங்கு பார்த்தாலும் அசையாத கண்மூடாத கற்சிலைகள் நிரம்பி இருக்குமா? ஆம் இது நிகழ்ந்தது தசரதன் அரசவையில். அயோத்தியில் தசரத மஹாரா ஜா அரண்மனையில் இத்தனை கற் சிலைகளா? வாஸ்தவம். விஸ்வாமித்ரர் ராமனின் குணாதிசயங்களை ஒவ்வொன்றாக தசரதனுக்கு விளக்கி ”தசரதா நீ நினைப்பது போல், உன் போல் ஒரு மானுடன் அல்ல உன் மகன் ராமன் என்று உணர்த்துவதை செவி மடுத்த அத்தனை பேரும் ஆச்சர்யத்தில் மூழ்கி கற்சிலைகளாகாமல் வேறு எப்படி இருக்க முடியும்?. ஒன்றா இரண்டா நூறு உதாரணங்கள் அல்லவா கொடுக்கிறார் விஸ்வாமித்ர மகரிஷி. தனது மகன் சிறிய பாலகன், அவனால் எப்படி ராக்ஷஸர்களுடன் மோதி வெற்றி பெறமுடியும். அவன் உயிருக்கே அல்லவா ஆபத்தாகிவிடும். தவம் செயது பெற்ற மகனை இழக்க எப்படி தசரதன் துணிவான்? இந்த நிலையில் தான் ராமன் யார் என்று நூறு உதாரணங்களுடன் விஷ்வாமித்ரர் தசரதனுக்கு அங்கு அரசவையில் இருந்த அனைவருக்கும் உபதேசிக்கிறார்.
अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् । वसिष्ठोऽपि महातेजाः ये चेमे तपसि स्थिताः ॥
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் வசிஷ்டோ அபி மஹாதேஜா: ஏ சேமே தபசி ஸ்திதா:
”தசரதா, நீ அறியாத ராமனை நான் அறிவேன், அவன் மஹாத்மா, ஆனந்தத்தை வாரி வழங்கும் ஸ்வரூபத்தை கொண்டவன். அவன் வீரம் சாமான்யமானது அல்ல. துஷ்ட நிக்ரஹம் செய்வதற்கே இங்கு அவதரித்தவன். காக்கும் கரங்கள் கொண்ட அவனுக்கு எவரை அழிக்க வேண்டும் என்று தெரியும். கொடுத்த வாக்கை மீறாதவன் ராமன். ‘
‘சந்திரனின் ஒளி சந்திரனை நீங்கலாம், ஹிமாலய மலை பனியை இழக்கலாம். கடல் கரையை கடக்கலாம், என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு ஒரு இம்மியும் மீறமாட்டேன்.”என்று சொன்னவன் ராமன். என் உயிரையே திரணமாக்கி தியாகம் செய்வேன். நான் கொடுத்த வாக்கு எக்காரணம் கொண்டும் மாறாது. மீறாது’ என்றவன் ராமன்.
தசரதா, ராமனைப் பற்றி நான் சொன்னதெல்லாம் உனக்கு ஏற்றுக்கொள்ளமுடியாமல் ”அவர்கள் சிறுவர்கள், பாலகர்கள், எப்படி ராக்ஷஸர்களை சமாளிக்க இந்த ரிஷியோடு அனுப்புவது என்று சஞ்சலம் மனதில் ஏற்பட்டால் இதோ நிற்கும் வசிஷ்டரை, உன் குல குருவை கேள்..ஒருவேளை ஒரு ரிஷி இன்னொரு ரிஷியை விட்டுக் கொடுக்கமாட்டார் என்று எண்ணினால் புரிந்துகொள். எங்காவது துளியாவது அசத்தியம், பொய் இருந்தால் ஒரு ரிஷியின் தவ வலிமை, சக்தி, அவன் இதுகாறும் பெற்ற புண்ய பழங்கள் அவனை விட்டு நீங்கும். வசிஷ்டர் உண்மைக்கு மாறாமல் பேசமாட்டார். கேள் அவரை. ராமன் மஹிமை அவன் யார் என்று அவர் அறிவார். அப்புறம் என்னோடு ராம லக்ஷ்மணர்களை அனுப்பு.”
தசரதனுக்கு உலகமே இருண்டது. ஏதோ சினிமா பார்க்க அழைத்து போகட்டுமா? என்று கேட்பது போலல்லவா கேட்கிறார் இந்த கோபக்கார ரிஷி. கொடிய ராக்ஷஸர்கள் உலவும் அரண்யத்தில் ரிஷிகள் தவத்தை கலைக்க கோபமாக வரும் பலமிகுந்த ராக்ஷஸர்களை சிறுவன் ராமன் தம்பி லக்ஷ்மணனோடு சேர்ந்து எதிர்த்து தடுக்கவேண்டுமாம்…..!!
ராமனோ பதினாறு வயது நிரம்பாத போர் அனுபவம் பெறாத பாலகன்…. தவமிருந்து பெற்ற பிள்ளை… கேட்பவரோ தவ சிரேஷ்டர். அவருடன் ராமனை அனுப்பவோ தசரதனுக்கு துளியும் நெஞ்சில் எண்ணமில்லை. வேறு யாராவதாக இருந்தால் அவர் தலை சீவப்பட்டு கோட்டை வாசலில் சிதறி இருக்கும். என்ன செய்வது?
பரிதாபமாக கன்று தாய்ப்பசுவை நோக்குவது போல் தசரதன் வசிஷ்ட மஹரிஷியை கண்கலங்க பார்க்கிறான். விஸ்வாமித்திரரின் தவ வலிமை, அவரது ஞானம் சகலமும் அறிந்தவர் வசிஷ்டர்.
தசரதா, மஹா யோகீஸ்வரர் விஸ்வாமித்ர மகரிஷி. தலைசிறந்த தவயோகி. மஹா வீரர். சக்தி ஸ்வரூபம். அவரை விட சிறந்த பாதுகாப்பு உன் மக்கள் ராம லக்ஷ்மணர்களுக்கு எங்கும் கிடைக்காது. மறு யோசனை இல்லாமல் அவர்களை மஹரிஷியோடு அனுப்பு. இதனால் அவர்களுக்கு சிறந்த ஞானம், பலம், சக்தி, பெருமை கிட்டப்போகிறது. அரிய சந்தர்ப்பம் இது நழுவ விடாதே.
1. इमं श्रीरामभद्रम् अस्मत्पुत्र इति त्वम्; अयं जगत्पितेत्यहं वेद्मि।
இமம் ஸ்ரீ ராம பத்ரம் அஸ்மத் புத்ர இதித்வம் : அயம் ஜகத்பிதே த்யஹம் வேத்மி.
”தசரதா, ”என்” மகன் என்று நீ அறியும் உன் மகனாக கருதும் இந்த ராமன் யார் தெரியுமா? அவன் யாருடைய ”மகனும்” இல்லை. இந்த பிரபஞ்சத்துக்கே ”அப்பன்” என்பது எனக்கு தெரியும்.
2. अयं बाल इति त्वम् अयं वृद्धः इत्यहं वेद्मि।
அயம் பாலா இதித்வம் அயம் வ்ருத்த: இத்யஹம் வேத்மி:
நீ அவனை ” சிறு வயது” குழந்தையாக, சிறுவனாக பார்க்கிறாய். எனக்கு அவன் காலமே காணமுடியாத அனாதி பரமன் என்று தெரியும். அவனுக்கு வயதெது? வயதேது?”
3. अयं मत्तपसा जनित इति त्वम् अयं सर्वेषां देवर्षीणां तपसा जनित इत्यहम् ।
அயம் மத்யஸா ஜனித இதித்வம் அயம் ஸர்வேஷாம் தேவர்ஷிணாம் தபஸா ஜனித இத்யஹம் ”
என் பிரார்த்தனையால், யோகத்தால், வேண்டுதலால் , விரதத்தால் பிறந்த மகன் என் மகன் ராமன் என்று நினைக்கிறாய், தசரதா, எனக்கு அவன் இந்திராதி தேவர்களின் பிரார்த்தனையால் , அவர்கள் தவத்தால், மஹான்கள், யோகிகள் வேண்டுதலால் உனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்று காரணார்த்தமாக தீர்மானித்து ஜனித்தவன் என்பது தெரியும்.
4. . अयं कौसल्यास्तनरसवर्धित इति त्वम्; अयं । सकलयज्ञहव्यकव्यैर्वर्धित इत्यहम् ।
அயம் கௌசல்யா ஸ்தன ரசவர்த்தித இதித்வம் : அயம் சகலயஞ ஹவ்ய கவ்யை வர்தித்த இத்யஹம்
”ஏதோ கௌசலையிடம் பால் குடித்து, போஷாக்குடன் உணவளிக்கப்பட்டு வளர்ந்தவன் ராமன் என்று நீ நினைக்கிறாய். எண்ணற்ற முன்னோர்கள் விரதமிருந்து தவப்பயனாக, தேவர்களின் யாக பலனாக, விரத பயனாக பிறந்தவன் ராமன் என்பது எனக்கு தெரியும்.
5. अयं कौसल्याकुक्षौ कश्चित्कालं स्थित इति त्वम् अस्य कुक्षी सर्व जगत् सदा वर्तत इत्यहम् ।
அயம் கௌசல்யா குக்ஷோவ் கஸ்ச்சித் காலம் ஸ்தித இதித்வம் அஸ்ய குக்ஷி ஸர்வ ஜகத் சதா வர்தத இத்யஹம்.
”கோசலையின் மணி வயிற்றில் ராமன் பிறந்ததாக நீ எண்ணுகிறாய். அவள் கருவில் அவள் சுமந்தது இந்த பிரபஞ்ச ஜீவன்களை எல்லாம் ” என்று நீ அறிவாயா ?
பருத்தியூர் பெரியவா ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளை சுந்தரராமமூர்த்தி புத்தகத்தில் மேற்கொண்டு அனுபவிப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *