மஹா பாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J K SIVAN
கண்ணா போகாதே
வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. துரியோதனாதியர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தனர். ஹஸ்தினாபுரத்தில் தர்மன் கௌரவ -பாண்டவ வம்ச சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும் தான தர்மங்கள் கணக்கின்றி வழங்கப்பட்டது. மக்கள் எல்லோருக்கும் ஆனந்தம். மஹா பாரத யுத்தம் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டதே. இன்னும் அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மெதுவாக அங்கு நுழைந்தான் கிருஷ்ணன்.அவனை பாண்டவர்கள் கட்டி தழுவினர். நன்றிப் பெருக்கில் வார்த்தைகள் எவருக்கும் வரவே இல்லை. பாண்டவ சைனியத்தில் பங்கு கொண்ட அரசர்கள் எல்லோரும் விருந்தாளிகளாக சிலகாலம் இருந்து ஒவ்வொருவராக விடைபெற்று தத்தம் ஊர் போய் சேர்ந்தார்கள்.
கிருஷ்ணன் த்வாரகைக்கு திரும்ப ஆயத்தமானான். பாண்டவர்கள் அவனுக்கு பிரியா விடை கொடுத்தனர். அரண்மனையில் அந்தப்புரத்தில், திரௌபதி குந்தி அனைவரிடமும் விடை பெற சென்றான் கண்ணன். குந்தியை சந்தித்தபோது
“அத்தை, நான் போய்ட்டு வரேன் ”
“எங்கு போகிறாய் கிருஷ்ணா ?”
“ஏன், என் ஊருக்கு தான், வேறெங்கு போவேன் ?”
“கண்ணா! நீ எங்களை விட்டு செல்கிறாயா ?”
“அத்தை, என்ன இப்படிப் பேசுகிறாய், நான் எனது ஊர் துவாரகைக்கு திரும்ப வேண்டாமா,?”
“எதற்காக?”
“எனக்கு அங்கும் கடமை இருக்கிறதல்லவா, அத்தை?”
”நீ அவசியம் போகவேண்டுமா?”
”ஆமாம் அத்தை”
“கண்ணா,” உணர்ச்சி பொங்கி, நா தழுதழுக்க ஒரு சோகம் பொதிந்த குரல் அடிவயிற்றிலிருந்து எழுந்தது குந்திக்கு. குந்தி தடாலென்று கீழே விழுந்தாள் .அவள் கண்கள் குளமாயின. அவளைத் தூக்கி நிறுத்தி ஆச்வாசபடுத்தினான் கண்ணன்
“ஏன் அத்தை அழுகிறாய். எல்லோரும் சந்தோஷமாயிருக்க நீ மட்டும் ஏன் அழுகிறாய்? உன் பிள்ளைகள் தான் மூன்று உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாத சக்ரவர்த்திகள் ஆகிவிட்டார்களே ,, நீ ஹஸ்தினா புரத்துக்கு ராஜ மாதா! சந்தோஷத்தில் மிதக்கவேண்டிய உனக்கு எதற்கு துக்கம்?”
“ஊர் உலகுக்கு நீ சொல்லும் சந்தோஷம் இருக்கலாம். ஆனால் எனக்கு, நீ எங்களை பிரிகிறாய் என்ற எண்ணமே தாங்க முடியாத துக்கம் தருகிறது கண்ணா”
“என்ன அத்தை இது. உன் பேச்சு விந்தையாக உள்ளது”!
“ஆம், கிருஷ்ணா, ஆம் . என் மக்கள் மட்டுமல்ல நானும் என்றும் இதுவரை உன் குடை நிழலில் இருந்தோம். அதுவே முழு சந்தோஷத்தை தந்தது. எத்தனை சோதனைகள், எத்தனை துன்பங்கள், எத்தனை எதிர்ப்புகள், மனிதர்களால் தாங்க முடியாத கஷ்டங்களை நீ யல்லவோ எங்களது சுமை தாங்கியாய் இருந்து தாயினும் மேலாக காத்தவன். உன்னைப் பிரிய என்னால் என்றுமே முடியாது.””போதும் அத்தை நிறுத்து இப்போதுள்ள சந்தோஷ சுக நிலைமையை யோசி”
கண்ணா ! உனக்குத் தெரியாதா? இத்தனை துன்பம் வந்தபோது நான் யாரை நினைத்தேன் உன்னையல்லவா. நீயன்றோ அவற்றை போக்கினவன்? மறந்துவிட்டாயா?”
“அத்தை, நீ ஏதேதோ பேசுகிறாய். என் மீது உள்ள பாசத்தினால் இதெல்லாம் உனக்கு தோன்றுகிறதோ என நினைக்கிறேன்”
“கண்ணா, நீ கண்டிப்பாக த்வாரகை போகவேண்டுமா சொல் ?”
“இதில் என்ன சந்தேகம் அத்தை?”.
“அப்படியானால் கட்டாயம் நீ எனக்கு ஒரு வரம் கொடேன்!”
“இன்னுமா வரம்”
“ஆமப்பா, என்னை, இந்த குந்தி அத்தையை, எப்போதும் துன்பப் படுவளாகவே ஆக்கிவிடு”
“ஏன்?”
“நான் ஒன்றன் பின் ஒன்றாக எப்போதும் துன்பத்தையே அனுபவிக்கும்போது உன்னை இடை விடாது நினைப்பதே எனக்கு பழக்கமாகி விட்டது. அப்போது எல்லாம் தான் நீ என்னிடம் இருந்தாய். ஆகவே எனக்கு துன்பத்தையே அளிப்பாயாக.”
கண்ணன் சிரித்து விடைபெற்றான்.
துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் அதற்கு காரணமான கிருஷ்ணனையே நினைப்போமே.தினான் கண்ணன்
“ஏன் அத்தை அழுகிறாய். எல்லோரும் சந்தோஷமாயிருக்க நீ மட்டும் ஏன் அழுகிறாய்? உன் பிள்ளைகள் தான் மூன்று உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாத சக்ரவர்த்திகள் ஆகிவிட்டார்களே ,, நீ ஹஸ்தினா புரத்துக்கு ராஜ மாதா! சந்தோஷத்தில் மிதக்கவேண்டிய உனக்கு எதற்கு துக்கம்?”
“ஊர் உலகுக்கு நீ சொல்லும் சந்தோஷம் இருக்கலாம். எனக்கு, நீ எங்களை பிரிகிறாய் என்ற எண்ணமே தாங்க முடியாத துக்கம் தருகிறது கண்ணா”
“என்ன அத்தை இது. உன் பேச்சு விந்தையாக உள்ளது”!
“ஆம், கிருஷ்ணா, ஆம்” . என் மக்கள் மட்டுமல்ல நானும் என்றும் இதுவரை உன் குடை நிழலில் இருந்தோம். அதுவே முழு சந்தோஷத்தை தந்தது. எத்தனை சோதனைகள், எத்தனை துன்பங்கள், எத்தனை எதிர்ப்புகள், மனிதர்களால் தாங்க முடியாத கஷ்டங்களை நீ யல்லவோ எங்களது சுமை தாங்கியாய் இருந்து தாயினும் மேலாக காத்தவன். உன்னைப் பிரிய என்னால் என்றுமே முடியாது.”
கண்ணா ! உனக்குத் தெரியாதா? இத்தனை துன்பம் வந்தபோது நான் யாரை நினைத்தேன் உன்னையல்லவா. நீயன்றோ அவற்றை போக்கினவன்? மறந்துவிட்டாயா?”
“அத்தை, நீ ஏதேதோ பேசுகிறாய். என் மீது உள்ள பாசத்தினால் இதெல்லாம் உனக்கு தோன்றுகிறதோ என நினைக்கிறேன்”
“கண்ணா, நீ கண்டிப்பாக த்வாரகை போகவேண்டும் அல்லவா ?”
“இதில் என்ன சந்தேகம் அத்தை?”.
“எனக்கு ஒரு வரம் கொடேன்!”
“இன்னுமா வரம்”
“ஆமப்பா, என்னை, இந்த குந்தி அத்தையை, எப்போதும் துன்பப் படுவளாகவே ஆக்கிவிடு”
“ஏன்?”
“நான் ஒன்றன் பின் ஒன்றாக எப்போதும் துன்பத்தையே அனுபவிக்கும்போது உன்னை இடை விடாது நினைப்பதே எனக்கு பழக்கமாகி விட்டது. அப்போது எல்லாம் தான் நீ என்னிடம் இருந்தாய். ஆகவே எனக்கு துன்பத்தையே அளிப்பாயாக.”
கண்ணன் சிரித்து விடைபெற்றான்.
துன்பத்தில் மட்டுமல்ல இன்பத்திலும் அதற்கு காரணமான கிருஷ்ணனையே நினைப்போமே.