ARUPATHTHU MOOVAR – NARASINGA MUNAIYARAIYAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K   SIVAN நரசிங்க  முனையரைய  நாயனார்
இப்படி  ஒரு  நாயனார்  இருப்பது முதலில் தெரியாது. இன்னொரு விஷயம். அவர்  நம்பி ஆரூரர்  எனப்படும்  சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்பு தந்தை என்பது.   சுந்தரர் வரலாறு படித்த போது  இப்படி ஒரு விஷயம் எனக்கு கண்ணில்  படவில்லை.  காதிலும் இதுவரை விழவில்லை.     

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்  என்றாலே சிறந்த சிவபக்தர் என்று சொல்லாமலேயே நாம்   அறிவோம்.  நாயனார்   பட்டை பட்டையாக  விபூதி பூசிக்கொண்டு  யார் வந்தாலும் தடால் என்று காலடியில் விழுந்து வணங்குபவர்.அரையர் என்றாலே  ஏதோ ஒரு குறுநில மன்னர் என்று தெரியும்.  பெரிய பழுவேட்டரையர், சின்ன பழு வேட்டரையர் என்று சோழநாட்டில் சக்தி வாய்ந்த  குட்டி சமஸ்தானாதிபதிகள் இருந்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வனில் பலமுறை படித்தது  நினைவிருக்கும்.  இந்த நாயனார் அப்படி ஒரு குட்டி குறுநில மன்னர்.
நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திரு முனைப்பாடி நாடு என்பது ஒரு பெருமை வாய்ந்த பகுதி. அதற்கு ஒருகாலத்தில் ராஜா வாக இருந்தவர் இந்த  நரசிங்க முனையரைய நாயனார்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருகோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற அரசனுக்கு ஒளவையார் திருமணம் செய்து வைத்ததாகவும், தெய்வீகனின் வழித்தோன்றலில் வந்தவர் நரசிங்க முனையரைய நாயனார் என்றும்சொல்கிறார்கள்.  தனது ராஜ்யத்தில் இருந்த சிவாலயங்களை நன்றாக  பாதுகாத்து பராமரித்தவர். ராஜாக்கள் எல்லோருமே  கத்திச்சண்டை குதிரை ஏற்றம், யானையேற்றம் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர்கள். நரசிங்க முனையரையர்  ஒரு சிறந்த வீரர். இல்லாவிட்டால் ராஜாவாகி  இருக்க முடியுமா?
திருவாதிரை நாட்களில்  எல்லா  சிவபக்தர்களுக்கும்  அடியார்களுக்கும்   உணவும் உடையும் அளிப்பார். கையில்  நூறு பொற் காசுகள் வேறு கொடுப்பார்.  கூட்டம் அவரைத்தேடி வருமா வராதா?  ஒரு திருவாதிரை அன்று வந்த பக்தர்களுக்கு நடுவே  ஒரு  தொழுநோயாளி. அருவருப்பாக  காட்சி தந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் நெற்றியில் பட்டையாக விபூதி.   அந்த வியாதியஸ்தரைக் கண்டதும் மற்ற பக்தர்கள் ஒதுங்கி தூரமாக  நின்றார்கள். நரசிங்க முனையரையர் கண்ணில் அந்த வியாதியஸ்தர் பட்டதும் ஓடிவந்தார். அவரை அணைத்துக்கொண்டு வணங்கி அவர் காலில்  விழுந்தார். எல்லோரையும் விட  அன்று அந்த வியாதியஸ்த  அஃதற்குக்கு ரெட்டை மடங்கு உபச்சாரம். நூறுக்கு பதில் இருநூறு பொற்காசுகள். சிவபக்தர்களிடையே  ஏழை பணக்காரன், வாலிபன் வயோதிகம், ஆண்  பெண்,உயர்ந்த  ஜாதி தாழ்ந்த ஜாதி,  அழகன், கோரமானவன்  என்ற பாகுபாடு வித்யாசம் இல்லாத  சிவபக்தர். .திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார். திருநீறு அணியும் சிவனடியார்களுக்கு விரும்பிய‌தைக் கொடுத்து, வழிபாடு செய்து பெரும் பொருள் கொடுத்தமையால் அவரை நாடி வரும் அடியார்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாட்டின் போது, வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தொழுநோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் வெண்ணீறு அணிந்து இருந்தார்.   அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார். அதனைக் கண்ட நரசிங்க முனையரையர், ‘எத்தன்மையானாராலும், திருநீறு அணிந்திருந்தால் அவர்களை இகழக் கூடாது’ என்று கூறியவாறு அவரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார்.

ஒருமுறை நரசிங்க முனையரையர் திருநாவலூர் வீதியில் செல்லும்போது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுந்தரரைக் கண்டார். சுந்தரரை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.
சுந்தரரின் தந்தையான சடையனாரைச் சந்தித்து தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் நரசிங்க முனையரையர். சடையனாரும் நரசிங்கரின் விருப்பத்திற்கு உடன்பட்டு சுந்தரரை தத்துக் கொடுத்தார்.
சுந்தரர் தம்முடைய திருமணப் பருவம் வரை நரசிங்க முனையரையரின் வளர்ப்பில் திருநாவலூரில் இருந்து பின்னர் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராக அருளப்பட்டார்.
நரசிங்க முனையரைய நாயனார் குருபூசை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *