PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை  216-230

216.  அஞ்ஞானத்தை  அகற்றிய  மஹான்கள் அடிக்கடி  சொல்வதென்ன?
மனதை ஒரு போதும் பிரம்மத்தை  தேடுவதிலிருந்து விலக்காதே. மனதை ஹ்ருதயத்தில்  வேறெதற்கும் இடம் கொடுக்காதே.

217.  செல்வம் லட்சுமி கடாக்ஷம்  இருப்பவன் புகழப்படு வதற்கு  என்ன  காரணம்.?
பிறர்  நலம்  கருதுவது. செல்வத்தை  தன்னலம் கருதா மல்  தாராளமாக  இல்லாதவர்க்கு வழங்குவது. 

218.  சான்றோர்  எவனை மதிப்பார்கள்?இயற்கையாகவே  பணிவும்  எளிமையும் கொண்டவர் களை. 

218.  சான்றோர்  இதயத்தை கவர்வது எது?
கல்வி தாகம்.  கற்றது கைம்மண்  அளவு என்ற  ஞானம். 

219.யாரை  துன்பம் இடர்  நெருங்காது.?
மூத்தோர், பெரியோர், சான்றோர்  குரு, சொல்லை மீறாதவன். புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்ப வனுக்கு துன்பம் எங்கிருந்து வரும்?

220, நல்லவர்கள்   எதை நினைக்கக்கூடாது ,பேசக் கூடாது?
பிறர் குறைகளை, தப்பான, தீமை பயக்கும் சொற்களை,
பொய்யை  பேசமாட்டார்கள். 

221. நல்ல  குணத்தை எது அழிக்கிறது ?
பேராசை. 

221. உயிரை விட  மேலானது எது என்பார்கள்?ஒவ்வொருவருக்கும்  உண்டான ஸ்வதர்மம், கடமை, பாரம்பரியமாக வரும் நற்  செய்கைகள், நல்லோர் நட்பு. 

222.  எதைப்  போற்றி பாதுகாக்க வேண்டும்?
நற்பெயர், அன்பும் பண்பும் உள்ள மனையாள்,குடும்பம்,
பக்தி தோய்ந்த  கருணை  உள்ளம். . 

223. வாழையடி வாழையாக வளரும் விருக்ஷம் எது?பாத்திரமறிந்து  பிக்ஷை எடுப்பது, இருப்பதில் முடிந்த தை மற்றவர்க்கு அளிப்பது. 

224.  எது பயத்தை போக்குவது
எதிலும் பற்றில்லாமல் இருப்பது.

225.பயத்தை எது அளிக்கிறது?
சேர்த்து வைத்த  செல்வம். சொத்து, பணம். 

226.பகவானுக்கு  பிடித்தவன் யார்?
பிறருக்கு இன்னா செய்யாதவன், கவலைகள் இல்லாத வன், தன்னலமற்றவன். 

227.  தெய்வீக சக்தி எங்கிருந்து பெறமுடிகிறது?இறைவன் பற்றிய  விடாத  சிந்தனை, தியானம். 

228.  எதை புத்திசாலித்தனம் என்பார்கள் ?
பெரியோர், பெற்றோர், ஆச்சார்யர்கள், குரு  ஆகியோ ருக் கு  சேவை செய்வது. அவர்கள் ஆசி பெறுவது. 

229. ,மூத்தோர் யார்?
கடமை உணர்ச்சி, தொண்டு மனப்பான்மை, உண்மை பேசும்  பழக்கமுடையவர்கள். 

230. எல்லா சந்தோஷங்களிலும்  முதன்மையானது எது ?கடின உழைப்பு தரும்  தகுதி. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *