CHANDHOKYA UPANISHAD – J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
2, ராஜாவின் கேள்வி
சாந்தோக்ய உபநிஷதத்தில் பஞ்சாக்னி வித்யா என்று அடிக்கடி வருமே அது என்ன? ஜனன மரணத்தைப் பற்றிய விஷயம் தெளிவு படுத்தப்படுகிறது. நமது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இதற்கெல்லாம் காரணம். ஏன் எதற்கு எப்படி, பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் எனும் காரணம் எவருக்கும் தெரியாது. நமது துயரங்களுக்கு எது காரணம் என்று உபநிஷதம் சொல்கிறது.
ஒரு கதையோடு ஆரம்பிக்கிறது இந்த உபநிஷத்.
ஒரு வேத பாடம் கற்கும் மாணவன் ஸ்வேதகேது. உத்தாலக ரிஷி மகன். நன்றாக கற்று தேர்ந்தவன். பல இடங்களுக்கு சென்று தர்க்க விவாதங்கள் எல்லாம் புரிந்து வென்று தனது கல்வியறிவை பறைசாற்றியவன். பல ராஜாக்கள் அரண்மனை களில் சென்று விருது பரிசு வாங்கியவன். ஒருநாள் ப்ரவாஹன ஜைவாளி என்கிற ராஜாவின் அரண்மனைக்கு செல்கிறான். ராஜா அவனை வரவேற்று உபசரித்து விசாரிக்கிறான்:
”வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் கற்றுக்கொண்டி ருக்கிறாயா?”முழுமையாக கற்றவனா?உங்கப்பா தான் உனக்கு உபதேசம் செய்தவரா?”
ஆமாம் ராஜா, என் கல்வி முடிந்துவிட்டது.”
”நல்லது. நீ சகல கலைகளையும் கற்றவன் என்பதால் என் சில கேள்விகள் சந்தேகங்களை கேட்கிறேன். விளக்குகிறாயா?”
”சரி மஹாராஜா”
ராஜா ஐந்து கேள்விகள் கேட்டான்
.1. இந்த உலகத்திலிருந்து இறந்தவர்கள் எங்கே போகிறார்கள்?
”இது எனக்கு தெரியாதே ராஜா”
‘2. சரியப்பா, ரெண்டாவது சந்தேகமாவது தீர்த்துவை. எங்கிருந்து ஜனங்கள் இந்த உலகத்தில் வந்து பிறக்கி றார்கள்? இதற்காவது விடை சொல்லேன்?”
”அடாடா, மஹாராஜா, நீங்கள் கேட்கும் இந்த கேள்விக் கும் எனக்கு சரியான பதில் தெரியாதே எப்படி சொல்வேன்?”
3. ஓ அப்படியா, இறந்தவுடன் ஜீவன் ஏதேதோ வழியில் செல்கிறதாமே தேவயானம், பித்ருயானம் என்று. அந்த வழிகள் என்ன,? ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமுண் டான வித்யாசம் என்ன, எதற்கு அந்த வேறுபாடு?. அதுவாவது தெரியுமா?”
”ராஜா, இதெல்லாம் கேட்கவே புதிதாக இருக்கிறதே , நான் எப்படி பதில் சொல்லி விளக்கமுடியும்?
4. ” மேலே உள்ள உலகத்தில் ஏன் நம் உலகம் மாதிரி அத்தனை கும்பல் கூட்டம் இல்லையாமே ?
எவ்வளவு பேர் போனாலும் தாராளமாக உலவுகிறார் களாமே. எதனால் அங்கே கும்பல் இல்லை?
என்ன காரணம்?”
”மஹாராஜா, சுத்தமாக எனக்கு இது ஒன்றுமே தெரி யாது”
5. ஐந்து வித சமர்ப்பணங்கள் உண்டாமே. அது என்ன? ஐந்தாவது திரவ பதார்த்தமான சமர்ப்பணம் தான் மனுஷ்ய உருவமாகிறதாமே? அதையாவது சொல்லேன் ?”
”அப்படியா, மஹாராஜா நான் கேள்விப்பட்டதே இல்லை யே இதை”என்று வாயைப் பிளந்தான் ஸ்வேதகேது.
”என்னடா நீ நன்றாக கற்றவன், எல்லாம் தெரியும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டு வந்தாய், உனக்கு நான் கேட்டது எதுவுமே தெரியவில்லை.ஐந்தே ஐந்து கேள்விகள் தான் கேட்டேன். ஐந்திற்கும் பதில் கிடை யாது உன்னிடம். உன் கல்விக்கு அர்த்தமே இல்லை யே? எப்படி உன் அப்பா உனக்கு வேத சாஸ்தி ரம் கற்று தந்தவர் இதெல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை? ”
ஸ்வேத கேதுவுக்கு அவமானமாக போய்விட்டது. தான் ஒரு கற்றறிந்த பண்டிதன் என்று அல்லவோ தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். நேராக உத்தால கரிடம் ஓடினான்.
”அப்பா என்னப்பா இது ? எனக்கு எல்லாம் கற்றுத் தந்துவிட்டேன். இனி உனக்கு கற்கவேண்டியது எதுவுமில்லை என்று சொன்னாய், நானும் நம்பி எல்லா இடமும் போய் நான் ஒரு பெரிய கற்றறிந்த பண்டிதன் என்று பறை சாற்றினேன். இந்த ராஜா கேட்ட எதுவுமே எனக்கு தெரியவில்லையே? ஏன் எனக்கு அதெல்லாம் சொல்லித் தரவில்லை?
ராஜா கேட்ட கேள்விகளை ரிஷி கேட்டார்.
”ஸ்வேதகேது, நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் எனக்கே தெரியாதபோது உனக்கெப்படி நான் கற்பித்திருக்க முடியும்? நாம் ரெண்டு பேருமே அந்த ராஜாவிடம் போய் அவர் சிஷ்யனாக இருந்து கல்வி கற்போம்.’
”’நான் வரமாட்டேன். எனக்கு அந்த ராஜா முகத்தை பார்க்க கூட வெட்கமாக இருக்கிறது. நீயே போ” என்றான் ஸ்வேதகேது.
ரிஷி ராஜாவிடம் போனார், உபசரித்தான், மறுநாள் அரண்மனையில் சபையில் ராஜா பேசினான்:
”ரிஷியே, உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன். இந்த உலகத்தில் உள்ளது, பணம் காசு, உங்கள் வாழ்வுக்கு சுகமாக எது வேண்டுமோ, அதை கேளுங்கோ, தருகிறேன். நீங்கள் கேட்பது, இந்த உலகத்திற்கும் மனிதர்களுக்கும் உபயோகமான பொருளாக, சம்பந்தம் கொண்டதாக இருக்கவேண்டும், ”
”மஹாராஜா, பகவான் கிருபையால், எனக்கு எல்லாமே இருக்கிறது. இந்த உலக சம்பந்தமானது எதுவுமே வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு தேவையானது நீங்கள் என் மகன் ஸ்வேத கேதுவிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில். அதை ப் பெறுவதற்காக தான் நான் உங்களை அடைந்தேன். செல்வத்துக்கு, பரிசுக்கு அல்ல. ”
ராஜா யோசித்தான். மகரிஷி ”சிறிது காலம் என்னோடு இந்த அரண்மனையில் இருங்கள்” என்றதும் ரிஷி ஒரு வருஷ காலம் அரண்மனையில் தங்கி இருந்தார்.
”மகரிஷி, நீங்கள் கேட்கும் விஷயம் ரஹஸ்யமானது. க்ஷத்ரியர்களுக்கு மட்டும் உரித்தானது. வெளியே எவருக்கும் இதுவரை போகவில்லை. நீங்கள் எப்போது க்ஷத்ரியனான என் சிஷ்யன் என்பதால் உங்களுக்கு உபதேசிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மகரிஷிக்கு ராஜா என்ன விடை கொடுத்தார் என்று அடுத்த பதிவில் அறிவோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *