MAHA SANI PRADHOSHAM – J K SIVAN

மஹா சனி  ப்ரதோஷம்  ‘ .    நங்கநல்லூர்   J K  SIVAN

பாற்கடலில் தேவர்களும்  அசுரர்களும்  மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி கடைந்து அமுதம் தேடும்போது முதலில்  கொடிய ஹாலஹால  விஷம் வெளிப்பட்டது.  எவராலும் அதை தொட முடியாது, ஆகவே. பரமேஸ்வரன் தானே  அதை எடுத்து உண்டு அதை  நெஞ்சிலே நிறுத்திக் கொண்டதால் நீலகண்டன் என்று பெயர்.  ஹாலாஹல விஷத்தின் கடுமையை தாங்கிக்கொண்டு  சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக் கிழமை திரயோதசி திதி தினம். எனவே சனிக்கிழமை களில் வரும் திரயோதசி திதிக்கு மஹா  பிரதோஷம் என்று பெயர் உண்டானது.   ப்ரதோஷம் என்றால் பாவங்களை நீக்குவது என்று பொருள்

இன்று ஜூலை 15, 2023.  சனி பிரதோஷம். சர்வ பாவ விமோசனம்  அருளும் நாள்.  நந்திதேவருக்கு  விமரிசை யாக அபிஷேகம் நடைபெறுவதைக் காணும்போது மனது இனிக்கும்,  பாவமெல்லாமும்பறந்தோடும்.
 சனியின் மோசமான தாக்கத்தை போக்க, பக்தர்கள் சனி பிரதோஷத்தன்று விரதம் அனுசரித்து, பகலில் சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை,

திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம். முக்தி நிச்சயம்    

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித் தார் என்பதால்  குருவாரம் வியாழக்கிழமை யில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமி ருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தை யும் யோகத்தையும் தந்தருளும்.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது. இதை மஹா  பிரதோஷம் என்பார் கள். 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  

பிரதோஷ கால அபிஷேகத்தின் போது கீழ்க்கண்ட வற்றைக் கொண்ட சிவபெருமான் பலன் தருவதாகக் கருதப்படுகிறது.

பால் நீண்ட ஆயுளைத் தரும்.
நெய் மோட்ச நிலையைத் தரும்.
தயிர் நல்ல குழந்தைகளைத் தரும்.
தேன் இனிமையான குரல் கொடுக்கிறது.
அரிசி பொடி கடன்களில் இருந்து விடுபடுகிறது.
கரும்பு சாறு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
பஞ்சாம்ருதம் செல்வத்தைத் தரும்.
எலுமிச்சை மரண பயத்தை நீக்குகிறது.
சர்க்கரை பகையை நீக்கும்.
தேங்காய் மகிழ்ச்சியைத் தருகிறது.
சமைத்த அரிசி கம்பீரமான வாழ்க்கையை அளிக்கிறது.
சந்தனம் லட்சுமியின் அருளைத் தரும்.

பிரதோஷ வேளை  மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை.  சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. அதிலும் சனிப்பிரதோஷ வேளையில் நாம் சிவபெருமானை தரிசனம் செய்தாலே நமக்கு நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள். சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

துன்பங்களால் வாழ்வில் திகைத்துப்போய் சோர்ந்து நிற்கும் அன்பர்களுக்கு சனிப்பிரதோஷம் ஓர் அருமருந்து. இந்த வாழ்க்கைதான் பாற்கடல். அதில் அமுதல் என்பது நாம் அனைவரும் விரும்பும் மகிழ்ச்சி. ஆனால் வாழ்க்கையில் நம் முயற்சிகளுக்குப் பலன்காகக் கிடைப்பது விடம் என்னும் துன்பம். அதற்கு அஞ்சி நாம் கண்ட இடங்களுக்கும் ஓடுவதைவிட சிவன் சந்நிதிக்குச் செல்வதே சரியான தீர்வு. காரணம் அவரே நம் துன்பம் என்னும் விடத்தை விழுங்கி மகிழ்ச்சி என்னும் அமிழ்தத்தை அருள்வார். அதுவும் சனிக்கிழமை பிரதோஷ தினத்தில் சென்று வழிபாடு செய்தால் நம் பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ப்ரதோஷ காலத்தில் எப்படி ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்?  பிரதோஷ பிரார்த்தனை முதலில்  நந்திக்கு செலுத்தி எதிரே கடிகார திசையில் சென்று சண்டீஸ் வரரை வணங்குங்கள். இப்போது கடிகார திசையில்  வந்தவழியே மீண்டும்  நந்தியி டம் டம் வந்து நமஸ்கரித்து  அபிஷேக ஜலம் விழும் கோமுகி வரை கடிகார திசையில்  செல்லவேண்டும்.. பின்னர் எதிர் கடிகார திசையில் திரும்பி நந்திக்கு மீண்டும் வணக்கம் செலுத்தி சண்டிஷரை நோக்கி செல்லவும். அங்கிருந்து நந்தியை வழிபடாமல் கடிகார திசையில் திரும்பி கோமுகியை அடையுங்கள். இறுதியாக அங்கிருந்து எதிரெதிர் திசையில் திரும்பி ரிஷபத்திற்கு வணக்கம் செலுத்தி சண்டீஸ்வரரைத் தொடர்ந்து நந்திக்கு திரும்பி, புனித காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளி வழியாக சிவலிங்கத்தை (பலிபீடத்தில்) வணங்குங்கள். இது ஒரு பிரதக்ஷிணம்.   இந்த மாதிரி மூன்று முறை பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். பிரதக்ஷிணம் செய்வதன் மூலம். நாம் சென்ற ப்ரதக்ஷிணம் பிறை சந்திரன் உருவத்தில் இருப்பதால்  சோம சூத்ரப் ப்ரதக்ஷிணம்  எனப்படும். சோமன் என்றால் சந்திரன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *