வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
வாழ்க்கையை  ஒரு வட்டத்துக்குள் தான்  வாழ்கிறோம்  என்பது உண்மையா  இல்லையா என்று யோசித்துப் பார்த்தது உண்டா?.  வாருங்கள் சேர்ந்து யோசிப்போம்.
சில விஷயங்கள்  இளம்  வயதில் நிகழ்ந்தவை மீண்டும்  வயதான பிறகும்  அப்படியே  மறுபடியும் நடக்கிறது. யாரோ ஒருவர் இதைப் பற்றி ஒரு லிஸ்ட் போட்டிருப்பதை இன்று பார்த்தேன்.  அவர் சொல்வது அப்பட்டமான உண்மை என்று புலப்படுகிறது. எங்கே  அது என்ன என்று பார்ப்போம்.
3-4  வயதில்  பழைய காலத்தில் டயப்பர்  DIAPER   கட்டும்  வழக்கமில்லை,   துணியை குழந்தை ஈரப்படுத்தினால் வேறு துணி சுற்றுவார்கள், அல்லது டிராயர்  போட்டுவிடுவார்கள். எப்போது குழந்தை  அதை மறுபடியும் ஈரமாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.  குழந்தை  டிராயரில்  ஒன்றுக்கு போகாமல் ஈரமாக்காமல்  இருந்தால் வெற்றி.
13-15 வயதில்  நமக்கு நாமே  வேண்டியதை செய்து சாப்பிட பழகினார்கள்.  12 வயதில் கல்யாணமாகி பெண்கள்  மாமனார் வீட்டில் 10 – 12 உருப்படிகளுக்கு   சமைக்க வேண்டியிருந்தது.  என் தாயார் அப்படி  பழக்கமானவள் தான்.  புகையும்  கட்டை விறகு அடுப்பு.  அப்படி தானே சமையல் செய்வது  வெற்றியாக கருதப்பட்டது.
16-17 வயதில்  நண்பர்களை சேகரித்துக் கொண்டோம்.  பெரிய வெற்றி.

18-20 வயதில்  மோட்டார்  இரு சக்கர வாகனங்கள் ஓட்ட  நமக்கே  லைசன்ஸ்  கிடைத்தது  பெரிய வெற்றி.
22-26 வயதில் காதல் மொட்டு மலர்ந்தது.  ஆஹா  எவ்வளவு பெரிய வெற்றி.
45-50 வயதில்  நிறைய  சம்பாதித்து சேர்த்து வைத்தோம் என்பதே பெரிய வெற்றி தான். வீடு வாசல் பணம். கார்.
55-60 வயதில்   நண்பர் உறவுகள் சூழ்ந்து கொண்டாலே  வெற்றி.
70-75 வயதில்  அட நமக்கு மீண்டும் மோட்டார் துவிச்சக்கர வண்டி ஓட்ட  லைசன்ஸ் கிடைத்ததே பெரிய வெற்றி
76-80  அடடே  நம்மையும் தேடி  நாலு  நண்பர்கள் வருகிறார்களே,  நல்ல விஷயம். பெரிய வெற்றி தான்.

82-85  அடேடே  நம்மாலும்  நமக்கு வேண்டிய  சமையல் செய்து கொள்ள முடிகிறதே.    ஹிமாலய வெற்றி தான்.
90+   உள்ளாடை  ஈரமாகவில்லை.  கழற்றி விட்டு  பாத்ரூம் கதவை சார்த்திக் கொள்வதே மிகப்பெரிய வெற்றி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *