பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN
என்றும்  உள்ளவர்.
நூறு வருஷம்  அவர்  இருந்தபோது எந்த படாடோபமும் இல்லை, எளிமையான  சந்நியாசி. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் பேசலாம். அவர் மௌன விரதத்தில் இல்லையென்றால் பேசுவார்.  எல்லோருமே அவருடன் பேச விரும்பினால் எப்படி எல்லோரிடமும் பேசமுடியும் என்ற ஒரே  தடங்கல் தான்.  நூறு வயது கிழவர். அவரது கடைசி நாள்  8.1.1994  சனிக்கிழமை  மத்தியானம் 2.58  த்வாதசி திதி   மஹா பெரியவாவை  இனிமேல் சமாதியில் தான் தான்  தரிசிக்கலாம்.  பரணீதரன்  ஆனந்த விகடனில் எழுதியது நினைவுக்கு வருகிறது.
பெற்ற  தாயை இழந்தது போல் பக்தர்கள்  கதறினார்கள்.
”அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…”இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?’பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே..பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே.தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே”
இதைப்போல இன்னும் எவ்வளவோ கதறல்கள், எண்ணற்றவர்களின்  எத்தனை எத்தனையோ குமுறல்கள்.  சொல்லி மாளாது..ஒரு ஆறு வயசு  குழந்தையின்  அழுகையை சமாதானப்படுத்த முடியவில்லை. அவள் கேள்விக்கு என்ன பதில்?
 ”எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?

1/1/1994  அன்று  புது வருஷம் என்பதால் உடம்பு முடியாமல்  10 நிமிஷம்   மஹா பெரியவா  தரிசனம்தந்தார். டாக்டர்கள் பக்கத்திலேயே  இருந்து வைத்தியம் பண்ணினார்கள்.
8/1/94  கொஞ்சம்  உடம்பு  தேவலை.  ஓஹோ விளக்கு அணையும் முன்பு ப்ரகாசமோ?  ஈச்சங்குடியில் அவர் அம்மா பிறந்த வீட்டை வாங்கி, பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைக்க  அப்பா அம்மா படங்கள்  தயாரிக்கப்பட்டு  அதைக் கொண்டு வந்து அவரிடம் காட்டினார்கள். பேசாமல் கொஞ்சம் நேரம் அதைப்  பார்த்துக்கொண்டே இருந்தார்.  ”அம்மா அப்பா இருங்கோ …சத்தே நேரத்தில் நானும் உங்ககிட்டே வந்துடறேன்….”என்று மெளனமாக  சொன்னாரோ?
 ‘பாலு,  நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’  மெதுவாக கேட்டார்.
 எதுக்கு  ஏன்  திடீர்னு  கலவை ஞாபகம்?  அங்கே தானே திடீரென்று ஒருநாள்  சன்யாசியானார்  13 வயசில்…. அந்த  நினைவா?
ஒரு  பக்தர் வந்து  நின்று வணங்கினார்.  உற்று பார்த்துவிட்டு   ‘சௌக்கியமா இருக்கேளா?’ உரத்த குரலில் கேட்டார்.
‘அட,  பெரியவாளுக்கு பழைய குரல் வந்துடுத்தே… ஆச்சரியபட்டார்   பக்தர்  திருக்களாவூர் ராமமூர்த்தி.
‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’  என்றார் . ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்”.– வேதபுரி
வழக்கம்போல  பிக்ஷையை ஏற்றுக்கொண்டார்.படுக்க வைத்தார்கள்.மணி  2.58  அனாயாசமாக  விண்ணேகினார்.

16.1.2023 நண்பன்  ராஜகோபாலன் அழைத்துப் போனான்.  காஞ்சியில் மெழுகு வடிவத்தில்  கண்ணாடிப்  பெட்டியில் அவரைப் பார்த்தேன். ”என்னடா பார்க்கிறே?”” அடேயப்பா  29வருஷம் 8 நாளா ஆய்விட்டது  பெரியவா.நீங்க மறைஞ்சு ””பைத்த்யம்…  நா  எங்கேயும் போகலே   இங்கேயே தான் எப்போவும் இருக்கேன்””ஆம்   வாஸ்தவம்  இதோ  என்னுடன் பேசுகிறாரே.. இப்படித்தான் எண்ணற்ற  அவர் பக்தர்கள் மனதில் என்றும் மஹா பெரியவா கோயில் கொண்டிருக்கிறார். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *