நாம் இந்நாட்டு மன்னர்கள் #நங்கநல்லூர்_J_K_SIVAN
இதை நேற்றே சொல்லவேண்டும் என்று எண்ணம் இருந்தது, வெளியே சென்றுவிட்டேன், உட்கார்ந்து எழுத நேரமில்லாமல் போய்விட்டது.
இப்போதுள்ள தலைமுறைக்கு அவ்வளவாக தெரி யாதோ, ஞாபகம் இருக்காதோ தெரியவில்லை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் நமக்கு சுதந்திரம் வந்ததோ, நாம் குடியரசானதோ சுத்தமாக தெரியவே தெரியாது. சுதந்திரம் என்றால் என்ன, குடியரசு தினம் என்றால் என்ன? இதுவே புதிர். ரெண்டாம் உலக மஹா யுத்தத் தில் பிரிட்டன் ஜெர்மன் பிடியில் சிக்காமல் தலை தப்பியது தம்பிரான் புண்யம் என்று தவித்தது. அந்த நேரத்தில் காந்தியின் வசம் இந்த தேசமே பக்க பலமாக நின்று நாடு முழுதும் எங்கும் சுதந்திர போராட் டம் நடக்கும்போது இனி நாம் இங்கிருப்பது சாத்திய மில்லை, இந்த இந்திய சுதந்திர பூதம் நம்மை விட்டால் போதும் என்று பிரிட்டனுக்கு தெரிந்து விட்டது.
இத்தனை நூற்றாண்டுகளாக இங்கிருந்து கொள்ளை யடித்த செல்வங்கள் இந்த நாட்டை விட்டு போக பிரிட் டனுக்கு மனதில்லை. வேறு வழியில்லையே. ஒரு பக்கம் நேதாஜி, ஒரு பக்கம் காந்திஜி தேச விடுதலைக்கு போராடும்போது, ஐரோப்பா முழுதும் சூறாவளியாக ஹிட்லர் பரவி வரும்போது, அதிகநாள் நமக்கில்லை என்று பிரிட்டனுக்கு புரிந்துவிட்டது.
பிசாசு போகுமுன் ஏதாவது ஒரு தொந்தவாறு செய்து விட்டு மரக்கிளையை முறித்துவிட்டு போகுமே அது போல் இந்த பாரத தேசத்துக்கு சுதந்திரம் வழங்க வேண்டு மானால் பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று ஆதரித்து நாட்டை இரு பக்கமும் துண்டாடி விட்டு சென்றது பிரிட்டன். ஷோலே என்ற படத்தில் சஞ்சீவ் குமார் ரெண்டு கைகளும் வெட்டப்பட்டு நிற்பாரே அது மாதிரி இந்தியா இரு பக்கமும் வெட்டப் பட்டு நின்றது. பிரித்தாளும் கொள்கைக்கு பேர் போனவர்கள் வெள்ளைக்காரர்கள் இல்லையா!
வளமிக்க பஞ்சாப், வங்காளம் இரு துண்டாகியது. ரத்த வெள்ளத்தில் நாடு தத்தளிக்க நள்ளிரவில் சுதந்
திரம்… 1857ல் சிப்பாய் கலக்கம் முதல் ஆரம்பித்த சுதந்திரம் தாகம் தண்ணீரை விட நிறைய ஹிந்துக்
களின் ரத்தத்தை நிறைய குடித்துவிட்டது.
சரி எப்படியோ சுதந்திரம் வந்ததே நாமெல்லாரும் இந்நாட்டு மன்னராகிவிட்டோம் என்று கனவு காணவேண்டாம்..
1947ல் நமது நாடு சுதந்திரமடைந்தபோது நாம் ஒரு இந்தியா இல்லை. 500க்கு மேற்பட்ட குட்டி குட்டி ராஜ்ஜியங்கள் கொண்ட இந்தியாக்கள். ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஒருவித கெடுபிடி, கட்டாயம், ஜாதி, மத மொழி பிரச்னை…. அத்தனையும் ஒன்றாக சேருமா? ஒன்று சேர்ந்த அன்பு உண்டாகுமா? ஒரே நாடாக முடியுமா? முடியும் முடித்துக் காட்டுகிறேன் என்று இந்தியாவின் இரும்பு மனிதன் சர்தார் வல்லபாய் படேல் முனைந்தார். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பிரயாசைப் பட்டு இந்திய ராஜ்ஜியங்கள் ஒருங்கிணைந்தன. மக்க ளால் தேர்ந்தெடுக்க்கப்பட்ட அரசு தலைவர்கள் உருவானார்கள் அது தான் குடியரசு தினம் 26.1.1950. அன்றிலிருந்து 73 வருஷங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாம் வளர்ந்து முன்னேறி தவறுகளை திருத்திக் கொண்டு வாழ்கிறோம். நமக்கு இனி சுபிக்ஷம். காரணம் நாம் அனைவரும் ஒரே குலம், ஒரே குடும்பம்