நான் உன் மடியிலே தூங்கறேன் —
இன்று அம்பாளுக்குகந்த தை வெள்ளிக்கிழமை.அநேக இல்லங்களில் மா விளக்கு, வெல்ல கொழக் கட்டை
நைவேத்தியம். அம்பாள் என்றால் சக்தி. உலகத்தில் சக்தியில்லாமல் எதுவும் நடக்காது. நமக்கு சக்தி கொடுப்பவளும் அவளே. அதற்கு முன் ஒரு கேள்வி.
கேள்வி 1 : பிரம்மஸ்ரீ தாடப்பள்ளி ராகவ நாராயண சாஸ்திரி என்கிற சந்தோளு சாஸ்திரிகளை – சக்தி உபாசகரை யாருக்காவது தெரியுமா? நூற்றில் ஒருத்தருக்கு தெரிந்தால் அதிசயம்.
கேள்வி 2 : சென்னைக்கு அருகே நெமிலி எனும் ஊரில் (வேலூரில் இருந்து 55 கி. காஞ்சியிலிருந்து 25 கிமீ, அரக்கோணத்திலிருந்து 16 கிமீ.) ஒரு அழகிய சிறு பாலா சுண்டுவிரல் உயரத்தில் தங்கத்தில்இருக்கி றாளே, அங்கே சாக்லேட் நெய்வேத்யம் பண்ணி பிரசாதமாக தருவார்களே அது தெரியுமா?
அவள் இருப்பது பெரிய ராஜகோபுர ஆலயம் அல்ல. ஒரு வீட்டில். தரிசிக்காதவர்களே நேரம் கிடைக்கா விட்டாலும் தேடி பெற்றுக்கொண்டு நெமிலிக்கு ஓடுங்கள்.
இப்போது கேள்வி 1க்கும் 2க்கும் சம்பந்தமான விஷயம். அது தான் தாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ ராகவ நாராயண சாஸ்திரிகளுக்கு பாலாம்பிகை திரிபுரசுந்தரி அனுக்ர ஹம் செய்த லீலை:!! அம்பாளுக்கு பல பெயர் பல உருவங்கள். அதில் அநேகருக்கு கண் கண்ட விருந்தாக, கை கண்ட ஒளஷதமாக இருப்பவள் பாலா திருபுரேஸ் வரி.பாலா திரிபுர சுந்தரி.
மேலே சொன்ன சாஸ்திரிகள் ஒரு தெலுங்கர். நவராத்ரி ஸமயம் . பூஜா கார்யங்கள் விடுவிடுவென்று நடக் கிறது. சாஸ்திரிகளோ பாலாவின் விக்ரஹத்தை, அவள் திவ்ய சுந்தர முகத்தை பார்த்துக்கொண்டு நிர்விகல்ப ஸமாதி நிலையிலிருந்தார்!! ஆயிரம் சிஷ்யர்கள் இருந்தாலும் ஸ்ரீ சக்ர பூஜை சாஸ்திரி களுக்கு தன் கையால் செய்தால் தான் திருப்தி. ஆவரண பூஜை பண்ணும் நேரம் நெருங்கிவிட்டதே, இந்த மனுஷர் இன்னும் கண் திறக்கவில்லையே.. அசையவே இல்லையே . அவரை எப்படி எழுப்புவது ? அவர் இந்த உலகத்திலேயே இல்லை. நவராத்ரி, பூஜை எல்லாம் மறந்து போய்விட்டதோ? சிஷ்யர்களுக்கு கவலை, தயக்கம். அப்போது வாசலில் ஏதோ சத்தம். சென்று பார்த்தால் ஒரு ஒன்பது வயசு பெண் பச்சை பட்டு பாவாடையோடு. அலங்காரத்தோடு நிற்கி றாள்.
”எவரம்மா நுவு?!*யாரம்மா நீ)
நா பேரு “ஞானப்ரஸன்னா..!! (என் பெரு ஞானப்ரஸன்னா ) அந்தாருக்கு “பாலா” னி செப்பத்தானே தெலிசிந்தி!! –(பாலா என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும்). மாயம்மா பேரு கூட “லலிதா..!! அந்தரிக்கி காமாக்ஷீ அட்லானே தெலுசு..!! (எங்கம்மா லலிதா எல்லோ ருக்கும் காமாக்ஷி என்றால் தான் தெரியும்)
”என்ன வேணும் உனக்கு?’
‘ஒண்ணும் எனக்கு வேண்டாம். எங்கம்மா தாத்தாவுக்கு இந்த ப்ரஸாதம் கொண்டு போய் குடுன்னு அனுப்பிச்சா . கொடுக்க வந்தேன்”’
‘ சரி கொடு!! நான் கொடுத்துடறேன்” சிஷ்யர் கை நீட்ட கொடுக்க மறுத்தாள் .
”இது தாத்தா கையிலதான் தரணும்!”
பெண் தானாகவே வீட்டுக்குள் விடுவிடுவென்று நுழைந்தது . சாஸ்திரிகளோ கண் மூடி தேவித்யா னத்தில் இருந்தார்!! ”தாத்தா..தாத்தா”தூங்கறியா !! என்று அங்குமிங்கும் பார்த்தது.
” ஓஹோ!! தாத்தா நீ இன்னும் நவராத்ரி பூஜை பண்ண லயோ!! சரி வா இன்னைக்கு நாம பண்ணுவோம்!!
சாஸ்திரிகளின் கையை பிடித்து பூஜா மண்டம் வரை இழுத்துச் சென்றது.சாஸ்திரிகளுக்கு த்யானம் கலைந்து சிறுமியின் பின்னாலே சென்று பூஜாமண்டபத்தில் அமர்ந்தார்.
”தாத்தா..!! நீ பூஜை பண்ணு. நான் உனக்கு உதவி பண்றேன்”
பூஜா புஷ்பங்களிலிருந்து “விசேஷ அர்க்ய அம்ருதம்’ சரி செய்வது வரை அத்தனை வேலையையும் அச்சிறுமி ஒருவளே செய்வதை பார்த்து சிஷ்யர்கள் தூர நின்று ஆச்சர்யமாக பர்த்தார்கள். ப்ரதமாவரணம் துவங்கி நவமாவரணம் வரை முடிந்தது. அடுத்து கன்யா, ஸுவாஸிநீ பூஜை.ஒரு மாமி தனது பெண் குழந்தையை அழைத்து வரேன் என்று சொல்லி யிருந்தவளைக் காணோம்.நேரமாகிறதே .வாசலில் போய் பார்த்துகவலையோடு காத்திருந்தார்கள் சிஷ்யர்கள். அந்த பெண் பேசியது:
”நீங்க தேடறது எங்க அம்மாவை தான். நான் தான் அந்த லலிதா மாமி பொண்ணு. நான் ஆத்துல பூஜை பண்ணிட்டு ரேன் நீ போய் தாத்தாக்கு ஒத்தாசை பண்ணுனு என்னை அனுப்பினா!!பூஜை தொடர்ந்தது. அந்த சிறுமி பாலாவுக்கே விசேஷமாக கன்யா பூஜை நடந்தது!! சாஸ்திரிகளுக்கு பரமானந்தம். ‘
‘ சரி தாத்தா..!! எல்லாம் நன்னா பண்ணிட்டீள் . நேக்கு தூக்கம் வர்றது. உங்க மடியில கொஞ்சம் படுத்துக் கட்டுமா?
” வாடீ என் தங்கமே”.
அணைத்து மடியில் தூங்க வைத்து சாஸ்திரிகள் தானும் தூங்கிபோனார்!!
இன்னும் ஸுவாஸிநீ பூஜை ஆகலையே!! சிஷ்யர் ஒருவர் சொன்னபோது தான் சாஸ்திரிகளுக்கு ப்ரக்ஞை வந்தது. எங்கே மடியில் படுத்திருந்த சிறுமி?
நல்லவேளை அன்று சுவாசினி பூஜைக்கு அழைத்தி ருந்த மாமியும் பெண்ணும் வந்தாயிற்று!! அது தான் அவர்கள் அழைத்த மாமி, அவள் பெண்
.”க்ஷமிக்கனும் மாமா..!! ஆத்து பூஜையில கொஞ்சம்
நாழியாயிடுத்து..!! முடிஞ்ச கையோடு இதோ நானும் குழந்தையும் வந்துட்டோம். !! பூஜையை ஆரம்பிங்கோ ”
””ஏம்மா நீ தான் உன் கொழந்தையை அனுப்பினியே. அடடா எவ்வளவு விவரம் தெரிந்த குழந்தை. மடமட வென்று அவளே நேக்கு அத்தனை ஒத்தாசையும் பண்ணா. கன்யா பூஜையும் வாங்கிண்டு என் மடில தானே தூங்கினா. பூஜை முடிஞ்சுடுத்தே. எங்கே அவோ?!
”நீங்க என்ன சொல்றேள் மாமா? நானும் என் பெண் ணும் இப்போ தானே வர்றோம்!!
”அவ இத்தனை நாழி என்னோட தான் இருந்தா?
சாஸ்திரிகளுக்கு பொறி தட்டியது.. ‘அப்போ இங்கே வந்து என்னோடு பூஜை பண்ணினது, கன்யா பூஜை வாங்கிண்டு என் மடிலே தூங்கினது…! அம்பா..!! என் தங்கமே..!! பாலா த்ரிபுரஸுந்தரீ!! அழகு பொம்மை யே!!! கண்களில் ப்ரவாஹத்தோடு பாலாம்பிகையின் விக்ரஹத்தை கட்டி அணைத்துக்கொண்டார் சாஸ்தி ரிகள்!!
ஸ்ரீ சாஸ்திரிகள் 1896 முதல் 1990 வரை ஜீவித்தவர். அவர் தஹன அக்னி யில் பாலா வெளிப்பட்டாள் என்று பிரசித்தம். ஒரு போட்டோ பார்த்தேன்.
Om Sri Nemili Balambigha Thiruvadigal saranam 🙏