திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2
#நங்கநல்லூர் J_K_SIVAN

சனிக்கிழமை  என்றால்  சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே  திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான்.

 சனிக்கிழமைக்கும்  ஸ்ரீனிவாசனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?  
இதற்கு பதில் சொல்லுமுன் ஒரு விஷயம் மனதில் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும்.  பகவானைப்பற்றி , மஹான்களைப் பற்றி நிறைய  வாட்ஸாப் , முகநூல்  யூட்யூப் ஆகிய மீடியாக்களில்  விஷயங்கள் வருகிறதே அவை முற்றிலும்  நிஜமா பொய்யா? ஏதோ விறுவிறுப்பாக  இருக்கட்டுமே  என்று எவரோ செய்கிற  சில்மிஷமா?  அப்படிச்  செய்வதால்  பக்தர்கள் அதை உண்மையென்று நம்பிவிடுகிறார்களே.  இல்லாததை இருந்ததாக, இருப்பதாக  காட்டுவது அபச்சாரம் இல்லையா? அதுவும்  கடவுளிடம், மஹான்களிடமா  இப்படி  போக்கிரித்தனமாக விளையாடுவது?  ஆகவே  சில நேரங்களில் நாம் எங்கோ படித்ததை பிறருக்கு

சொல்லும் போது நாமும் அந்த தப்பு செய்கிறோமோ என்று ஒரு நெருடல்.  சொல்லும் விஷயம் உண்மையா நிஜமா என்று அறிந்துகொள்ள  முடியாத நிலை. ஒவ்வொன்றுக்கும்  மூலம்,  ஆதாரம் தேடிக் கொண்டிருந் தால் எதையும் சொல்ல முடியாது, எழுத முடியாது. பேசாமல்  மெரினாவில் போய் உட்கார்ந்து  கடல் அலையை எண்ணலாம்.  இதை மனதில் வாங்கிக்கொண்டு மேலே படிப்பதை தொடர்வோம்.

 
ஒரு  சனிக்கிழமை அன்று தான்  திருப்பதி திருமலை வேங்கடாத்ரி மலையில்  ஸ்ரீனிவாசன் தோன்றி
னாராம். மஹா விஷ்ணு  அதே மாதிரி  ஒரு சனிக்கிழமை அன்று தான் வெங்கடேசனாக அவதரித்தாராம்.. மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்து  ஸ்ரீ தரனானதும்  ஒரு சனிக்கிழமை அன்று தானாம்.  பத்மாவதியோடு ஸ்ரீனிவாசனுக்கு கல்யாணமும் ஒரு சனிக்கிழமை  அன்று  தானாம்.  நாம்  சனிக்கிழமை கல்யாணம் செய்துகொள்வதில்லை.  மார்கழியைப் போலவே  அதையும்  பரமனுக்கே  அளித்து விட்டோம்..  வெங்கடாத்ரி மலையில் ஒரு சனிக்கிழமை அன்று தான்  வேங்கடேஸ்வரன்  சிலையை பக்தர்கள் கண்டார்களாம்.  ஒரு சனிக்கிழமை அன்று தான் ”ஓங்” காரம் உதித்ததாம்.  சனிக்கிழமைக்கு ஸ்திர வாரம் என்று பெயர்.  எந்த காரியம் துவங்கினாலும் பலமாக  ஸ்திரமாக  நடுவில்   நிற்காமல், தொய்ந்து  உறுதியாக நிற்கும் என்று ஐதீகம்.  சனீஸ்வரனின்  பிடிப்பு,.தொந்தரைகள் இருந்தால் சனிக்கிழமை   சனி பகவானை வேண்டினால் விலகும்  என்கிறோம். ஆனால் ”வேங்கடேசா , உன் பக்தர்கள்  சனிக்கிழமை உன்னை வழிபட்டால் அன்று நான் அவர்கள் பக்கமே  போகமாட்டேன்”   என்று சனி பகவான் ஸ்ரீனிவாசனிடம்  வாக்களித்ததாக ஒரு ஐதீகம்.
 
சனிக்கிழமை  லீவ், விடுமுறை  நாளாக இருப்பதால்  பாலாஜி கோவில் தரிசனம் செய்ய  பஸ், காரில், ரயிலில் செல்கிறார்கள் என்பது கண்கூடாக  நாம் அறிவது ஸ்ரீனிவாசனுக்கும் சனிக்கிழமைக்கும் உள்ள சம்பந்தம். 
 
திருப்பதி ஸ்ரீனிவாசன் சம்பந்தப்பட்டது எல்லாமே  பெரிசு தான். அவன் ”பெரும்  ஆள்” பெருமாள் இல்லையா?  திருப்பதி ஸ்ரீனிவாசன் ஆலய  சமையல் கூடம் படா  சைஸ்.  ரொம்ப பெரிசு. பொங்கல், தயிர்சாதம்,  புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம் , லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும்  குண்டான்   குண்டானாக  பெரிய பாத்திரங்களில் நிறைய  பெரிய அளவில் தயார் ஆகி  விநியோகம் ஆகிறது.  இது எங்கும் காணமுடியாத  அதிசயம்.
 

ஏழுமலையான் இவ்வளவு பணக்காரனாக இருக்கிறானே என்றாலும் அனுதினமும்  ஒரு புது  சட்டி பானை வாங்கி அதில்  வெறும்  தயிர்சாதம்  தான் அவனுக்கு நைவேத்தியம். அவன் நமக்கு  பிரசாதமாக தருவதோ  நெய்,  முந்திரி  மணக்கும்  பொங்கல், லட்டு போன்ற பலவித பக்ஷணங்கள்.   அவனுக்கு எந்த நைவேத்யமும்  குலசேகரப்படியைத் தாண்டகூடாது.  வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்….  மூச்ச்… எதுவும் குலசேகரப் படியைத் தாண்டி  உள்ளே  செல்லாது. ஸ்ரீனிவாசனுக்கு  நைவேத்யம் செய்யப்பட்ட  மண் சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு வாழ்நாளில் என்றாவது  ஒருநாள் கிடைத்தாலே அது அவன்  செய்த  பாக்யம். நமக்கு எப்போது கொடுப்பினையோ?

உயரமாக  நிற்கும்  ஸ்ரீனிவாசனுக்கு  21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரம் தான்  தினமும்  ஆடை, வஸ்திரம்.    இதை எந்த கடையிலும்  வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். போதுமா?  இது ஒரு அதிசயம்.


உள்சாத்து வஸ்திரம்  என்று ஒரு ஸ்ரீனிவாசனின் உள்ளாடை.  இதை  வேங்கடேசனுக்கு  சாற்றுவ
தற்கு
பக்தர்கள்  ஒரு செட் வாங்கி  அணிவிக்க இருபதாயிரம் ரூபாய் காணிக்கை  கட்டவேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாற்றுவதற்கு  ஏற்றுக்கொள்ளப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாற்றுவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். உலகத்தில் வேறெங்கும் கேள்விப்படாத அதிசயம். அவன் பக்தர்கள் அவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பது பேரதிசயம். 

இன்னொரு விஷயம்.  பக்தர்கள்  சாற்றும்  மேலே சொன்ன  வஸ்திரங்கள் தவிர  ஆந்திர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் வருஷத்துக்கு   இரண்டு  தடவை.
ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள்  இன்று பணம் காட்டினால் அபிஷேகம்  காண  குறைந்தது  மூன்று வருஷம்  காத்திருந்தால்  அவர்கள் முறை வரும்.  இந்த அதிசயத்தோடு நிறுத்திவிட்டு  மற்ற அதிசயங்கள் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *