SWAMI DESIKAN J K SIVAN

”வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் –

ஆதி சங்கரர் இயற்றிய ஜாக்ரதா ஜாக்ரதா என்ற ஐந்து வைராக்ய பஞ்சக ஸ்லோகங்கள் எழுதியைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் எனும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய ஐந்து வைராக்ய ஸ்லோகங்களையும் அறிவோம்.
இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை ஒரு கை பிடித்துக் கொண்டிருந் தாலும் இன்னொரு கை உடனே இடுப்புக்குத் தாவி வேஷ்டி அவிழ்ந்து விழாமல் பிடித்துக் கொள்கிறதே, அதைப் போல் நண்பன் இருக்கவேண்டும். சொல்லாமலே, கேட்காமலே தனது நண்பனுக்கு உதவி தேவைப் படும் என்று தோன்றினால் ஓடிப்போய் உதவ வேண்டும். அப்படி ஒரு நண்பனை வெகுகாலமாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஸ்வாமி தேசிகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒருவன் கிடைத்திருந்தான். வேதாந்த தேசிகனோடு பால்யத்தில் ஒன்றாக பாடம் கற்றவன். வித்யாரண்யன் என்று பெயர். அவரைப் போல் வேதாந்தியாக பகவத் ஸ்மரணையில் காலம் ஒட்டாமல் மைசூர் மஹாராஜாவிடம் வேலைக்கு போய் ராஜ குருவாக நன்றாக செல்வம் சேர்த்தான். அடாடா நம் நண்பன் தேசிகன் அன்றாடம் உஞ்ச விருத்தி எடுத்து பிழைக்கிறானே, அவனை வரவழைத்து மஹாராஜாவிடம் சிபாரிசு செய்து நல்ல சம்பளத்தில் உத்யோகம் வாங்கித்தர வேண்டும் என்று ராஜாவிடம் பேசி ஒரு வேலை நிச்சயம் பண்ணி விட்டான். அந்த செய்தியை தேசிகருக்கு ஓலைச்சுவடி மூலமாக அனுப்பினான்.

” நண்பா, தேசிகா, நீ அன்றாடம், பொழுது விடிந்து, தெருவெல்லாம் சுற்றி உஞ்சவ்ருத்தி எடுத்து பிழைக்கும் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் வடிகிறது. நான் இங்கே சௌக்யமாக இருக்கிறேன். என்னை ஆஸ்தான வித்வானாக ஆதரிக்கும் விஜயநகர மன்னனிடம் உன்னைப் பற்றி கூறினேன், என்னைவிட பல விஷயங்களில் நீ சாஸ்தி ரங்கள் நன்றாக கற்ற பண்டிதன். சமஸ்தானத் தில் பெரிய பதவி உனக்கு காத்திருக்கிறது. உடனே வா. உனக்கும் இங்கே என் போல் வசதி பெற வழி செய்கி றேன். உடனே வருகிறாயா? ” உண்மையான நண்பன் இப்படி எழுதினான்.

நாமாக இருந்தால் இந்த மாதிரி சிநேகிதனைப் பெற்றதற்கு வானளாவ மகிழ்வோம். ”நீயல்லவோ உயிர் நண்பன்” என்று அடுத்த ரயிலில் மைசூர் சென்று அவன் வீட்டு வாசலில் போய் நிற்போம். ஆனால் தேசிகர்
நம் போல் இல்லையே? நம்மை மாதிரி இருந்தால் இன்றும் உலகம் அவரை நினைவில் வைத்திருக்குமா?.

வித்யாரண்யனுக்கு உடனே பதில் செய்தி 5 சுலோகங்களாக ஓலைச்சுவடியில் எழுதி அனுப்பினார். அவை தான் வைராக்ய பஞ்சகம். அதை அர்த்தத்தோடு அளிக்கிறேன். இவை வித்யாரண்யனுக்கு மட்டும் அல்ல, உலகத்தில் வாழும் நம் எல்லோருக்கும் வாழ்க் கையில் கண்ணைத் திறக்கும் சகதி வாய்ந்தவை.

1. क्षोणी कोण शतांश पालन कला दुर्वार गर्वानल- क्षुभ्यत्क्षुद्र नरेन्द्र चाटु रचना धन्यान् न मन्यामहे ।
देवं सेवितुमेव निश्चिनुमहे योऽसौ दयालुः पुरा दाना मुष्टिमुचे कुचेल मुनये दत्ते स्म वित्तेशताम् ॥ १ ॥

kshoNI koNa shatAmshapAlanakalA durvAra garvAnala kshubhyat kshudra narendra chAtu rachanA dhanyAn na manyAmahe |
devam sevitumeva nischinumahe yosau dayAlu: purA dhAnAmuShTimuche kuchelamunaye dattesma vitteshatAm ||

க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல- க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ 1 ॥

மேலே கண்ட ஸ்லோகத்தின் அர்த்தம் சட்டென்று ஒரே வரியில் புரிய வேண்டுமானால் இவரைப்போலவே இன்னொருவர் எழுதியது தான் சாலப் பொருத்தம். : ”நிதி சால சுகமா” என்று தியாகராஜ சுவாமிகள் தெலுங்கில் பாடியது தான். தஞ்சாவூர் ராஜா ‘என் மேல் பாடு உனக்கு நிறைய பொன் தருகிறேன்’ என்று யானை, குதிரை, பல்லக்கு எல்லாம் அனுப்பினான். ”உன் நிதி எனக்கு வேண்டாமே. ராமனைப் பாடும் அவன் சந்நிதி சுகமொன்றே போதுமே” என்றாரல்லவா. அதே போலவே தியாகராஜருக்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பே சுவாமி தேசிகன் நினைத்திருக்கிறார்.

எந்த ராஜாவும் உலக முழுவதற்கும் நிரந்தரமான ராஜாவாக வாழ்ந்து ஆண்டதில்லை. ஏதோ ஒரு சிறிய பகுதி நிலத்துக்கு அதிபதியாக இருந்தாலே போதும். எனக்கு ஈடு யாரும் இல்லை என்ற கர்வம், இறுமாப்பு. வந்துவிடும். என்னைப் பிறர் புகழவேண்டும் என்று பணத்தை வீசி எறிந்து பல ஏழைக் கவிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், இப்படிப்பட்ட குட்டி ராஜாக்களை கூட சந்திரர்களாக சூரியர்களாக, இந்திரனாக ஏட்டில் பாடி வைத்து நாமும் அவற்றை படிக்கிறோம். வேதாந்த தேசிகர், தியாகையர் போன்றோர் இந்த ரகமான புலவர்களோ கவிஞர்களோ இல்லையே. பரம பாகவதர்கள். பகவானைத் தவிர மற்றெல்லாவற்றையும் தூசாக துச்சமாக மதிப்பவர்கள். நரனைப் பாட விரும்பாமல் நாராயணனைப் பாட முனைந்தவர்கள். அவனுக்கு தெரியுமே எது நமக்கு வேண்டும் என்று அதை நாம் கேட்காமலேயே கொடுப்பவன் என்று நம்பியவர்கள்.
”குசேலர் என்று ஒரு ஏழைப் பிராமணர், அப்பா வித்யா ரண்யா (இது தான் சுவாமி தேசிகன் நண்பன் பெயர்) கிருஷ்ணனின் பால்ய நண்பர், கிருஷ்ணனை பார்க்க த்வாரகை போகிறார். குசேலன் தன்னிட மிருந்த அவல் பொட்டலத்தை கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் கிருஷ்ணன் ஆர்வமோடு அதை அவனிடமிருந்து பறித்து உண்டு அவன் வாயைத் திறந்து எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க எண்ணம் வருவதற்கு முன்னாலேயே குசேலனை குபேரனாக்கினான். இதைப் புரிந்து கொள்.”

2. शिलं किमनलं भवेदनलमौदरं बाधितुं पयः प्रसृति पूरकं किमु न धारकं सारसम् ।
अयत्न मल मल्लकं पथि पटच्चरं कच्चरं भजन्ति विबुधा मुधा ह्यहह कुक्षितः कुक्षितः ॥ २ ॥

silam kimanalam bhavet analam audaram bAdhitum paya:prasruti pUrakam kimu na dhArakam sArasam |
ayatnamalamallakam pathi paTachcharam kachcharam bhajanti vibudhA mudhA hyahaha kukshita: kukshita: || 2

ஶிலம் கிமநலம் ப⁴வேத³நலமௌத³ரம் பா³தி⁴தும் பய: ப்ரஸ்ருʼதி பூரகம் கிமு ந தா⁴ரகம் ஸாரஸம் ।
அயத்ந மல மல்லகம் பதி² படச்சரம் கச்சரம் ப⁴ஜந்தி விபு³தா⁴ முதா⁴ ஹ்யஹஹ குக்ஷித: குக்ஷித: ॥ 2 ॥

”உயிர் வாழ என்ன தேவை, ஒரு கை ஜலம், வயலில் சிதறி இருக்கும் அரிசி மணிகள் சில போதுமே பசியைப் போக்க.ஒரு கிழிசல் துண்டு துணி கோவணமாக கிடைத்தாலே போதுமே மானத்தை மறைக்க. இந்த எளிமை யான தேவை எனக்கும் மற்றவர்க்கு உதவவும் கூட போதுமே” என்கிறார் ஸ்வாமி தேசிகர்.

3. ज्वलतु जलधि क्रोड क्रीडत्कृपीड भव प्रभा- प्रतिभट पटु ज्वाला मालाकुलो जठरानलः ।
तृणमपि वयं सायं सम्फुल्ल मल्लि मतल्लिका परिमलमुचा वाचा याचामहे न महीश्वरान् ॥ ३ ॥

Jvalatu jaladhikroDa krIDat krupIDa bhavaprabhA pratibhaTa paTujvAlAmAlAkulo jaTharAnalaH |
truNamapi vayaM sAyaM sampulla mallimatallikA parimaLamuchA vAchA yAchAmahe na mahIshvarAn || 3

ஜ்வலது ஜலதி⁴ க்ரோட³ க்ரீட³த்க்ருʼபீட³ ப⁴வ ப்ரபா⁴- ப்ரதிப⁴ட படு ஜ்வாலா மாலாகுலோ ஜட²ராநல: ।
த்ருʼணமபி வயம் ஸாயம் ஸம்பு²ல்ல மல்லி மதல்லிகா பரிமளமுசா வாசா யாசாமஹே ந மஹீஶ்வராந் ॥ 3 ॥

”நடு சமுத்ரத்தில் அக்னி ஒரு பெண் ஜீவனாக உருவாகி, மழையாக, அருவிநீராக, சமுத்ரத்தில் சேரும் அதிக பக்ஷ ஜலத்தை ஆவியாக்கி மேலே அனுப்புகிறாள். ஒரு கட்டுப்பாட்டுக்குள் தேவையான அளவு நீரை மட்டுமே சமுத்ரத்தில் விட்டு வைப்பதால், அது கரை தாண்டி வெளியேற வழியேது?
வித்யாரண்யா, சமுத்ரத்தில் மட்டும் அல்ல, நமது வயிற்றிலும் ஒரு அக்னி இருக்கிறதே, ஜாடராக்னி. பசி வந்தபோது உன் வயிற்றுப்பகுதியில் கப கப வென்று சுட்டெரிக்குமே அது. நாம் உண்பதை செரிமானம் (ஜீரணம்) பண்ண அது உதவுவது. அது வளர்ந்து மேலும் மேலும் என்னை பசியால் வாட்டினாலும் நான் என் பசி தீர உணவு தேடி, பொருள் தேடி, ஒருவனிடம் எதையும் யாசகம் கேட்டு கை கூப்பி நிற்கமாட்டேன். என் வாக்கு கேவலம் ஒரு நரனைப் புகழ்ந்து பாட அல்ல. அது சாதாரணமல்ல, மாலையில் மலரும் நறுமண மல்லிகை வாசம் கொண்டது. அந்த மல்லிகையின் நறுமண வாசம் எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உபயோகமாகும். எனவே என் நாக்கில் வாக்கில் உருவா கும் ஸ்லோகங்கள் நாராயணன் ஒருவனுக்கே சொந்தம். நாராயணனைப் பாடாத நாவென்ன நாவே!

4. दुरीश्वर द्वार बहिर्वितर्दिका- दुरासिकायै रचितोऽयमञ्जलिः । यदञ्जनाभं निरपायमस्ति मे धनञ्जय स्यन्दन भूषणं धनम् ॥ ४ ॥
durIshvara dvAra bahirvitardikA durAsikAyai rachitoyama~njali: | yada~njanAbham nirapAyamasti me dhana~njaya syandana bhUShaNam dhanam || 4

து³ரீஶ்வர த்³வார ப³ஹிர்விதர்தி³கா- து³ராஸிகாயை ரசிதோঽயமஞ்ஜலி: । யத³ஞ்ஜநாப⁴ம் நிரபாயமஸ்தி மே
த⁴நஞ்ஜய ஸ்யந்த³ந பூ⁴ஷணம் த⁴நம் ॥ 4 ॥

வித்யாரண்யா, நீ உன் ராஜாவின் தனம் செல்வம் என்று ஏதோ பெரிசாக எனக்கு ஆசை காட்டினாயே, நான் என்னிடம் இருக்கும் தனத்தை, செல்வத்தை பற்றி ஒரு வார்த்தையில் சொல்கிறேன் கேள். என் செல்வம் கரு நீல நிறம், அழியாதது, குறையாதது, அதை நீ பார்த்திருப் பாயே, குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனன் தேரில், அழகு பிம்பமாக அதை ஓட்டுமே அதைத்தான் சொல்கிறேன். இந்த கண்ணன் எனும் குறைவற்ற செல்வம் என்னிடம் இருக்கையில் வேறு எது இதற்கு ஈடாகமுடியும், எனக்கு தேவை, நீயே சொல்? வித்யாரண்யா, கை கூப்பி
வணங்கி ‘ஸாரி’ சொல்கிறேன், நான் எங்கோ எவன் வீட்டு திண்ணை யிலோ கை கூப்பி வணங்கி அவன் ஏதாவது கொடுக்கமாட்டானா என்று ஏங்குபவன் இல்லையே அப்பா.

5. शरीर पतनावधि प्रभु निषेवणापादनात् अबिन्धन धनञ्जय प्रशमदं धनं दन्धनम् । धनञ्जय विवर्धनं धनमुदूढ गोवर्धनं सुसाधनमबाधनं सुमनसां समाराधनम्.
SareerapathanAvadhi prabhu nishEvaNaapAdhanAth abhindhana Dhananjaya praSamadham dhanam dhandhanam
dhananjaya vivardhanam dhanam UdhUDa gOvardhanam susAdhanam aBAdhanam sumansAm samArAdhanam
ஶரீர பதநாவதி⁴ ப்ரபு⁴ நிஷேவணாபாத³நாத் அபி³ந்த⁴ந த⁴நஞ்ஜய ப்ரஶமத³ம் த⁴நம் த³ந்த⁴நம் ।
த⁴நஞ்ஜய விவர்த⁴நம் த⁴நமுதூ³ட⁴ கோ³வர்த⁴நம் ஸுஸாத⁴நமபா³த⁴நம் ஸுமநஸாம் ஸமாராத⁴நம் ॥ 5 ॥

வறுமையால் மதியிழந்து பசிதீர்க்க, ஒளவை சொன்னா ளே ”இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று. ஜாடராக்னிக்கு இரை போட்டு அதை ஜீரண வேலை செய்ய விடுவதற்காக செல்வம் தேட வேண்டுமா? ஒரு கை ஜலம் போதும் என்று சொன்னே னே, பசி தீர்க்க, களைப்பை ப் போக்க. இதை விட்டு, எவனிடமோ பணம் இருக்கிறது என்பதற்காக தன் மானம் விட்டு வணங்கி சிரம் தாழ்த்தி கரம் குவித்து அப்படியாவது இந்த உடலைக் காக்க வேண்டுமா என்ன? நான் சொன்னேனே என்னிடம் இருக்கும் ‘அந்த’ செல்வம் என்ன செய்தது மறந்து விட்டாயா? மன வியாகூலத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனை தேர் தட்டில் மேலே அமர்த்தியது, மழையிலிருந்து மக்களை , மாக்களைக் காக்க கோவர்த்தன மலையை யே தூக்கியது. நல்லோர் மனம் நிறைந்து இருக்கிறது. அதைவிட சரியான பலன் தரும் சாதனம் வேறு எது இருக்கிறது?

6. नास्ति पित्रार्जितं किञ्चिन्न मया किञ्चिदार्जितम् । अस्ति मे हस्ति शैलाग्रे वस्तु पैतामहं धनम् ॥ ६ ॥
நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சிந்ந மயா கிஞ்சிதா³ர்ஜிதம் । அஸ்தி மே ஹஸ்தி ஶைலாக்³ரே வஸ்து பைதாமஹம் த⁴நம் ॥ 6 ॥

”வித்யாரண்யா, கடைசியாக ஒரு வார்த்தை சொல்கி றேன் கேள். எனக்கு பாட்டன் பூட்டன் சொத்து எதுவும் இல்லை. வேண்டவும் வேண்டாம். ஹஸ்தி கிரி மேல் அமர்ந்த ப்ரம்மா எனக்கு நிறைய செல்வம் தந்திருக் கிறான் காஞ்சி அத்தி வரதராஜன் துணை இருக்க வேறு எது வேண்டும்?

சுவாமி தேசிகனின் வைராக்யம் மேலே சொன்ன ஐந்து குட்டி ஸ்லோகங்களிலேயே தெளிவாக புரிகிறதா?
நமக்கு அத்தகைய வைராக்யம் ஒருநாள் வரவேண்டும் என்று அவரையே பிரார்த்திப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *