ராமாயண ரஹஸ்யம் நங்கநல்லூர் J K SIVAN
மனிதன் இறைவன் கொடுத்த பஞ்ச பூதங்களை தவறாக உபயோகித்து கொடுமைகளை புரிந்தால், ஒரு அளவுக்கு தான் இயற்கையோ இறைவனோ பொறுத்துவிட்டு தண்டனை வழங்குவது தான் நாம் அனுபவிக்கும் இயற்கையின் உற்பாதங்கள்.புயல், சுனாமி,கடும் வெய்யில் , கனத்த பேய்மழை, போன்ற இயற்கையின் சீற்றம்..
ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் 25 அரண்மனைகள், 4 லக்ஷம் தெருக்கள் பாரத தேசத்தின் கிழக்கு கரையில் தூத்துக்குடி முதல் மன்னார் வளைகுடா வரை இருந்தன. ராவணனின் அக்ரமத்தால் இயற்கை மூலம் ஒரு தண்டனை கிடைத்தது. அதாவது, கடல் அத்தனையும் மூழ்கடித்துவிட்டது என்று படித்தேன். குமரி கண்டம், லெமூரியா, அப்படி தான் கடல் அடியில் மறைந்தது போல் இருக்கிறது.
நான் சொல்வதெல்லாம் என் கற்பனையோ, கப்ஸாவோ, இல்லை. பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துகள் சில. கஷ்டப்பட்டு என்னவெல்லாமோ எங்கெல்லாமோ தேடி அலைந்து, கடைசியில் ராவணன் ,கருப்பு நிறத்தவன், தமிழன், சோழ வமிசம், தமிழ் ஸமஸ்க்ரிதம் பேசுபவன். அவன் முன்னோர்கள் விந்தியமலைக்கு வடக்கே வாழ்ந்தவர்கள், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு, தெற்கே தமிழகம் வந்தவர்கள். அப்போதைய தமிழகம் இப்போதைய மேற்கு லங்கை, மடகாஸ்கர், மேற்கு ஆஃப்ரிக்கா வரை பரந்திருந்தது என்கிறார். ராமனுக்கும் தமிழ் தெரியும் என்கிறார்கள்.
வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா , கோசல ராஜ்யத்தில், சரயு நதிக்கரை நகரம் என்கிறார். ராஜா மனு தான் முதலில் அதை நிர்மாணித்தவர் என்கிறார். 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகல விஸ்தீரணம். அநேக தெருக்கள், கோட்டை அதை பாதுக்காக்க அகழி. செல்வச் செழிப்பான ஊர்.
மனிதனின் வளர்ச்சி பரிணாமத்தை உணர்த்துவது தான் மஹா விஷ்ணுவின் தசாவதாரம். பிரளயத்தில் ஆரம்பித்தது மச்சாவதாரம், மீன். நீரில் மட்டுமே உயிர்வாழும் ஜீவன்.அப்புறம் கூர்மாவதாரம் ஆமை . நீரிலும் நிலத்திலும் வாழும் ஜீவன்.அப்புறம் வராஹம். பன்றி. பாலூட்டி வளர்க்கும் ஜீவன். பிறகு வாமனாவதாரம். குள்ள மனிதன்.நான்கு கால்களிலிருந்து இரு கால்கள் இரு கைகளோடு முது நிமிர்ந்து இரு கால்களில் நடப்பவன். நரசிம்மவதாரத்தில் மனிதன் பாதி மிருகம் பாதி கைகளில் கால்களை விட பலம் கூட. பரசுராமன் அவதாரத்தில் ஆயுதங்கள் மனிதன் ஆயுதங்கள் உண்டாக்கி உபயோகிக்க அறிந்ததை .உணர்த்தும் அவதாரம்.ராமாவதாரம் மனிதனின் உயரிய பண்புகளை,சித்தரிக்கும், மற்றும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை பிரயோகிக்கும் தன்மையை, குரங்குகளை விட உயர்ந்த மனிதனின் நிலையை வெளிப்படுத்தும் அவதாரம். கிருஷ்ணாவதாரம், ஆறறிவு படைத்த மனிதனின் உயர்வை, ஞானத்தில் உயர்வை, சித்தரிக்கும் அவதாரம்.பலராமன், மனிதனின் தேகம், மனம் இவற்றின் பலத்தின் வளர்ச்சியை சித்தரிக்கும் அவதாரம்.கல்கி என்பது மனிதனின் அடுத்த வளர்ச்சியை, எப்படியிருக்கும், என்னவென்று தெரியாத எதிர்பார்ப்பின் அவதாரம். இது தான் விஞ்ஞானத்தின் மனித குல பரிணாம வளர்ச்சி விளக்கம். டார்வின் எங்கோ ஒரு தீவில் அமர்ந்து கண்டுபிடித்து உலகறிந்த போற்றும் விஷயம் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே நமது புராணங்கள், இதிகாசங்களில் மேலே சொன்ன அவதாரங்களாக காட்டியிருப்பதை உணர்ந்து பெருமைப்படுகிறோம்.