சிவவாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN
ஞானம். தெளிவு.
”மரணமே ஓடி வா. வா சீக்கிரம்… என்னை எடுத்துக் கொண்டு போ….” இப்படிப்பட்ட டயலாக் சினிமா, டிராமாவில் தான் வரும். உண்மையில் எல்லோருக்கும் நீண்ட நாள் இந்த உலகத்தில் எப்படியாவது கஷ்டப்பட்டுக்கொண்டு வாழவேண்டும் என்று தான் விருப்பம்.
யாருக்குமே பிடிக்காத, வரக்கூடாத அந்திம நேரம் நெருங்கி வந்து விட்டது. உடலும் ஜீவனும் இத்தனை நாளாக ஒன்றாக இருந்தவை இப்போது ஒன்றை விட்டு மற்றொன்று பிரியப்போகும் அறிகுறிகள் தோன்றி விட்டன. வேர்த்து கொட்டுகிறது. மேலே காற்றாடி வேகமாக சுத்தினாலும், உடல் தொப்பமாக ஆகிவிட்டது. மரண பயம். மூச்சு ஏதோ ஐந்து கிலோ ஓடினவன் மாதிரி, பெட்டி படுக்கையுடன் ரயிலுடன் ஓடி அதை கோட்டை விட்டவன் மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறதே. இந்த நேரத்தில் நீ கற்ற வேத சாஸ்திரங்கள் நினைவுக்கு வந்து அதனால் டக்கென்று இதெல்லாம் நின்று விடுமா?
சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டிலுமாவது உள்ளே புகுந்து ஆன்மாவாக உள்ள அவனை நோக்கி னேனா?
இந்த புஸ்தக மூட்டைகள் ஏன் என்னிடம் இத்தனை நாள்?
என்னை வாட்டும் நோய்கள் என்னை ஆட்கொள்ள இடம் கொடுத்தது யார்?
என்னை நான் உணர்ந்திருந்தால் சத்தியத்தை உணர்ந்
து முத்தி நிலையில் இருந்திருப்பேனே . அங்கே உடல் எது?அதில் நோய் தான் ஏது?
இந்த கேள்விகள் நான் கேட்கவில்லை. உரத்த குரலில் மனதில் அர்த்தம் வாங்காமல் மனப்பாடம் மட்டும் செய்து இப்படி உரத்த குரலில் எல்லோரும் மெச்ச வேத சாஸ்திரங்கள் ஒப்பிக்கும் சட்டநாத பட்டரைப் பார்த்து பளிச்சென்று கேட்ட கேள்விகள்.
கேட்டவர் யார்?
சிவ வாக்கியர். என்ன தைரியம்!
”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே.”
”இது ஸ்வயம்பு ஸார் !. எத்தனை ஆயிரம் வருஷம் என்று யாருக்குமே தெரியாது. இதோ இந்த விக்ரஹம் விஜயாலய சோழன் கொள்ளு தாத்தாவான ஒரு சோழன் கனவில் வந்து அவன் ஸ்தபதியை கூட்டி வந்து பண்ணி யது. அந்த கல் கூட எங்கோ வடக்கே இருந்த ஒரு மலையின் கல். ரொம்ப சக்தி வாய்ந்த லிங்கம். பழமனாதி. வரப் ப்ரஸாதி” என்று சொல்கிறீர்களே. அதற்கு என்னென்னமோ பேர் உங்கள் மனதில் தோன்றும் பெயர்களை யெல்லாம் வைத்து விடுகிறீர்களே!
ஐயன்மீர், உங்களின் அறியாமையை என்ன சொல் வேன். அதனால் தானே இப்படி யெல்லாம் அருவமான ஒன்றுக்கு ,உருவம். பெயரில்லாததற்கு இத்தனை பெயர்கள் !ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த உல கைப் படைத்த ஏதோ ஒன்று இருக்கிறது. பரம சக்தி. எல்லாவற்றையும் செய்ய வல்லது; உலகை யும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தான் படைத்த வஸ்துவை அறியாமல், அழியாமல் வைத்திருக் கவும் காப்பாற்றவும் வல்லது. அதுமட்டுமல்ல; .அழிக் கவும் செய்கிறது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் வெளியே கல்லில் மட்டுமா காண முடியும்? உங்கள் நெஞ்சினில் என்றுமே உணர முடியும். மனதில் மட்டுமே அந்த மஹா சக்தியை உணர முடியும் என்று ஒரு உயர்ந்த உண்மையை உரைக்கிறார் சிவவாக்கியர். இது நாத்திகப் பேச்சு அல்ல. அது விவரம் முற்றும் தெரிந்த சித்தன் போச்சு. எங்கும் நிறை பரம் பொரு ளை ஒரு உருவம் மூலம் வழி படுவது இரண்டாம் பக்ஷம். அது தேவை இல்லை என்று அவருக்கு தோன்றி இருக்கலாம். அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
ஐயா, சிவவாக்கியரே, உங்கள் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டால் உங்களை ஏன் இப்படி உட்கார்ந்து படிக்கப்போகிறோம்?. எங்களுக்கு கடவுளை, எங்க ளுக்கு பிடித்த, தெரிந்த இந்த நிலையில் தான் உணர முடியும். நாங்கள் ஏழையாக இருந்து விட்டு போகி றோமே. கொஞ்சம் நீங்கள் . அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ளுங்கள். உங்கள் லெவெலுக்கு வந்தபிறகு கை கோர்த்துக் கொண்டு பேசலாம். படித்து விட்டு, சம்பா திக்க அமெரிக்கா போக பிள்ளைகளை தயார் செய்ய வே நேரம் போதவில்லை. போன பிள்ளைகள் திரும்ப வரப்போவதில்லை என்று உணராத ஜென்மங்கள்…
கடைசி காலத்தில் இங்கே தான் ஒரு அனாதை இல்லத் தில், எவ்வளவு தான் பணம் கொட்டி கொடுத்தால் அது அனாதை இல்லம் தானே. கடைசியில் இழுத்துப்போட்டு எரிக்கக் கூட பிள்ளைகள் இப்போதே பணம் கட்டிவிடு வார்களே. வாய்க்கரிசி கூட யாரோ போடும் நிலை எங்கோ ஒரு நாலு சுவற்றுக்குள் நடந்தால் அது அனாதை இல்லம் தானே…!
” பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே”
நம்மிடையே வெகு காலமாக உள்ள சில பழக்கங்கள் சிவவாக்கியருக்கு மூடப் பழக்கங்களாக தோன்றி இருக்கலாமோ? நாம் படிப்பது அவரது எழுத்து வன்மை யை ரசிக்க, அவரது உயர்ந்த ஆன்மீக தத்துவத்தை உணர்ந்து கொள்ள மட்டுமே.
நம்மை அவர் நிலைக்கு கொண்டு செல்ல தேவையான சாதனங்களை தாம் நாம் பின்பற்றுகிறோம். ஒரே நாள் ராத்திரியில் நாம் ரிஷியாக முடியாது. இந்த பாடலில் பூசை எதற்கு. கண்ணால் காண முடியாத அந்த எங்கும் நிறைந்த பரமாத்வை கண்டதுண்டா?
உன்னுள்ளே இருப்பவனுக்கு எப்படி பூசை, என்ன பூசை பண்ணுவாய்?
ஆதி அந்தமில்லாத அருட்பெரும் ஜோதிக்கு எது பூசை, எப்படி பூசை, அதை என்ன வென்று சொல்லி கூப்பிட்டு பூசை பண்ணுவாய்?
என்ற கேள்விகளை சரமாரியாக எழுப்புகிற சிவ வாக்கி யர் ஒரு போதும் சாமி இல்லை என்று சொல்லவில்லை என்பது நன்றாக கவனம் இருக்கட்டும். இந்த சிவஞானி நாத்திகன் இல்லை. பரம ப்ரம்ம ஞானி.