ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN இசைஞானியார் நாயனார்

இசைஞானி  யார்தெரியுமா?  நிறைய  கைகள்  இந்த கேள்வியைக் கேட்டதும்  உயர்ந்தன.  ஒருவர்  எழுந்து பதில் சொன்னார்.”இளைய ராஜா”உட்காரப்பா. அவர்  அறுபத்து மூவரில் ஒருவரைக் கேட்கிறேன்.  நீ  யாரோ ஒருவரைச் சொல்கிறாயே  என்கிறார்  பேசுபவர்.உண்மையில்  எனக்கு  கூட இசைஞானியார்  வேறு யார் என்று. இதை எழுதும்போது தெரிந்து கொண்டு உங்களுக்கும் சொல்கிறேன். சிறந்த சிவ பக்தர்கள் அறுபத்து மூன்று பேரை சிலையாக  கோவில்களில் வைத்திருக்கிறோம்.  அவர்களில் மூன்று பேர்கள் பெண்கள். அவர்களில் ஒருவர்  இசைஞானியார்.இசை ஞானம் உடையவர்களைத்தான்  நாம்  இசை ஞானிகள் என்கிறோம்.இந்த  பெண் நாயனார்  சுந்தரமூர்த்தி நாயனாரின் அம்மா. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றதற்காகவே, , சைவநெறியில் சுந்தரரை வளர்த்து  தானும் அந்த  சிவ  சிந்தனையில் நின்றதற்காகவும்  இவரும் ஒரு நாயனார்.  சடைய நாயனாருடைய மனைவி தான்  இசைஞானி  யாரென்பவர். அந்த பெண்மணியின் அப்பா திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியார்.   கௌதம கோத்திரம் . திருவாரூரில் உள்ள தியாகராஜனின்  மீது  அளவிலா பக்தி கொண்டவர். இசைஞானியாருக்கு  கல்யாண வயது வந்ததும்  ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்.  அறுபத்து  நாயனார்களில் சடைய நாயனாரும்  ஒருவர்.  சுந்தரர் அவர்  அம்மா,அப்பா  என்று ஒரு  குடும்பமே சிலையாக  சிவாலயங்களில்  இருப்பது ரொம்ப அதிசயம் அபூர்வம்.  வேறு  எந்த குடும்பத்துக்கும்   இந்த பெருமை கிட்டவில்லையே.
இசைஞானியார்  “கமலாபுரம்” என்று ஒரு காலத்தில்  பெயர்  பெற்ற திருவாரூரை சேர்ந்தவர். 7ம் நூற்றாண்டில் பிறந்தவர்.  திருமுனைப்பாடி இராஜ்யத்தில்  உள்ள திருநாவலூரில் வாழ்ந்தவர். ஆதி சைவ  பிராமண  அர்ச்சகர் குடும்பத்தை சேர்ந்தவர்.  பிழை சுந்தரனை   ராஜா  நரசிங்க முனையரையருக்கு  தத்தெடுப்பதற்காக கொடுத்தவர்கள். இசை ஞானியாரின் ஒரே  ஆபரணம் விபூதி.   திருவாரூர் தியாகராஜர் பிரம்மாண்ட  ஆலயத்தில்   இரண்டாவது ப்ராஹாரத்தின் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இசைஞானியரைப்  பற்றி சொல்கிறது.  ”ஆளுடைய நம்பியின் தாயார் இசைஞானியார் –  கல்வெட்டின் சமஸ்கிருத பகுதி கல்வெட்டு நகரமான கமலாபுரத்தில் பிறந்தார். இசைஞானியார் ஞானசிவர்ச்சாரியாரின் குடும்பத்தில் பிறந்தார், அவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் மற்றும் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்தவர்  கௌதம மகரிஷி முனிவரின் பரம்பரை. திருவாரூர்  சோழர்கள் தலைநகரமாக  இறுதிருக்கிறது.
 சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம், திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய  இல்லத்தில் இசைஞானியார் நாயனார் சிலையைப் பார்க்கலாம்.“இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்.” – திருத்தொண்டத் தொகை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *