KALINGA NARDHAN J K SIVAN

உயிர்ப் பிச்சை – நங்கநல்லூர் J K SIVAN

இயற்கை அழகு கொஞ்சுவது. யானை, நதி, மலை, குரங்கு,கடல் இவற்றையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்க விருப்பம் அதிகமாகிறது. யமுனை நதி ரொம்ப ரொம்ப அழகானவள். வெகு ரம்யமாக காட்சியளிப்பவள். எல்லோரும் சென்று ஆனந்தமாக யமுனையில் மணிக்கணக்காக நீராடுவார்கள்.
கிருஷ்ணன் காலத்தில் ஒரு சமயம் யமுனை அருகே செல்லவே ஆபத்தானதாக இருந்தது. பிருந்தாவனத்தில் எவரும் யமுனையில் சென்று குளிப்பதற்கே பயந்தார்
கள். ஏனென்றால் அதில் ஒரு பெரிய விஷ நாகம் குடி கொண்டிருந்தது. பல மைல் தூரத்திற்கு அதன் விஷம் நதியில் பரவி கலந்து இருந்ததால் பறவைகளோ விலங்குகளோ நீர் அருந்திய மறுகணமே உயிரி ழந்தன. செடி கொடிகள் கூட அங்கு வளர முடிய வில்லை. ஒரே ஒரு வயதான கடம்ப மரம் மட்டும் இப்பவோ நாளைக்கோ என்று கரையோரத்தில் இருந்ததால் உயிர் பிழைத்து காலம் தள்ளி வந்தது. கிருஷ்ணனின் நண்பர்கள் யமுனையில் விளையாட முடியாமல் வருந்தினார்கள். யமுனையை ஆக்கிரமித்த அந்த கொடிய நாகத்தின் பெயர் காளீயன். அவனுக்
கும் கருடனுக்கும் நீண்ட காலமாக பகை. ஒருவர் ஒருவர் கொல்ல பல முயற்சிகள் பல. கருடனை எதிர்த்து வெல்ல முடியாத நிலை காளீயனுக்கு. ஆகவே உயிர் தப்பவே முயற்சித்து ஓடி ஒளிவான். ஆனால் கருடனோ அவனை துரத்திக் கொண்டே இருந்தான். கடைசியில் காளீயன் பிருந்தாவனம் வந்து யமுனை நதிக்குள் ஒளிந்து கொண்டான். அவனுக்கு ரொம்ப நிம்மதி. ஏனென்றால் கருடன் தான் பிருந்தா வனத்துக்கு வரமுடியாதே. யாரோ ஒரு ரிஷி அவனுக்கு சாபமிட்டிருந்தார்.
” நீ பிருந்தாவனம் பக்கம் காலை வைத்தால் உனக்கு மரணம்” என்று.
காளீயனது கொடிய விஷத்தால் யமுனை நதி பல மைல் தூரத்துக்கு கொடிய விஷ நீராக மாறியிருந்தது என்று தான் மேலே சொல்லிவிட்டேன்.
கிருஷ்ணன் யோசித்தான். ஓருநாள் கிருஷ்ணன் தனது நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த பொது கடம்ப மரத்தருகே ஓடி வந்தனர். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து தூரத்தில் சென்று ஆழமான அந்த நீரில் மறைந்தது.
“கிருஷ்ணா, இப்போ என்னடா செய்றது பந்து நதிக்குள் விழுந்துவிட்டதே”.
பையன்கள் மனமொடிந்தனர்
“நாம் திரும்பி செல்வோம்” என்று சொன்ன நண்பர்களை லட்சியம் செய்யாமல் கிருஷ்ணன் விடு விடுவென்று கடம்ப மரத்தில் ஏறினான். அதன் ஒரு நீண்ட கிளை நதியை நோக்கி வளைந்திருந்தது அதன் மேல் தாவி அமர்ந்து கொண்டு அங்கிருந்த வாறே ஒரு ஜம்ப் பண்ணி நீருக்குள் ஆழமான பகுதிக்குள் குதித்து விட்டான்
“கிருஷ்ணா அது விஷம் நிறைந்த தண்ணீர். அதற்குள் ஒரு பெரிய பாம்பு வேறு இருக்கிறது. பந்து வேண்டாம் நீ வெளியே வந்து விடு சீக்கிரம்” என்று நண்பர்கள் கத்தினார்கள்.
கிருஷ்ணன் லக்ஷியம் பண்ணவில்லை. காளீயனுக்கு
ரொம்ப சந்தோஷம்
”இன்று நமக்கு நல்ல வேட்டை ஒரு குண்டு பையன் கிடைத்து விட்டான் தின்பதற்கு”
காளிங்கனுக்கு பல தலைகள். கோபத்தோடு படமெடுத்தவாறு விஷத்தை கக்கிக் கொண்டு காளிங்கன் யமுனையில் குதித்த கிருஷ்ணனைச் சுற்றிக் கொண்டான். கிருஷ்ணன் இதை எதிர்பார்த் தான். ஆகவே தனது உடலை மிக பெரிதாக மாற்றி கொண்டான். வேகமாக தாண்டி காளிங்கன் தலையில் போய் நின்று கொண்டான். காளீயனால் கிருஷ்ணனை கட்டி நொறுக்க முடியவில்லை. ரொம்ப கோபத்துடன் சீறினான். இதற்குள் கரையில் சிறுவர்களின் கூக்குரல் கேட்டு ஊரே திரண்டது.
“கிருஷ்ணா வந்து விடு. நீரை குடிக்காதே விஷம். ”
என்று எல்லோரும் அலறினார்கள். கிருஷ்ணனின் மரணம் நிச்சயம் என்று எல்லோரும் பயந்து இறைவ
னை வேண்டினார்கள். காளீயனது விஷம் மேலே படாமல் கிருஷ்ணன் ஒரே தாவு தாவி காளீ யனின் 110 தலைகளின் மேல் ஏறி நின்று கொண்டான். தனது உடலை உலகை காட்டிலும் அதிக எடை யுடையதாக மாற்றிக் கொண்டான். காளிங்கன் தலைகள் மேல் மாறி மாறி தாவித் தாவி குதித்து நர்த்தனமாடினான். இதிலும் அவனுக்கு ஒரு விளையாட்டு!!
இடுப்பிலிருந்து அவனது புல்லாங்குழல் எப்போதோ
உதட்டுக்கு சென்று விட்டது. கால் நடனமாடுவதற் கேற்ப இசை குழலிலிருந்து பிறந்தது.
கிருஷ்ணன் காலடியிலிருந்து வந்த பலமான “மிதி” காளீயனது மண்டைகளை உடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக காளிங்கன் ரத்தம் கக்கி செத்துக் கொண்டிருந்தான். கதறினான். அவனது எண்ணற்ற மனைவிகள் இதற்குள் வந்து விட்டனர். கை கூப்பி கண்ணனை வேண்டினார்கள்.
”எங்கள் கணவனுக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்” என்று அழுது கிருஷ்ணனைத் தொழுதார்கள் கிருஷ்ணன் காளீயன் மேல் கருணை காட்டினான்
“இனி இங்கிருக்கும் வரை யார் கண்ணிலும் பட மாட்டேன். ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டேன். நான் இருக்கும் இடமே தெரியாதபடி நல்ல பிள்ளை யாக நடப்பேன் என்னைக் கொல்லாதே”
என்று காளீயன் கிருஷ்ணன் அருமை பெருமையை உணர்ந்து வணங்கி சரணாகதியானான். திருந்திய
காளீயனால் இனி அவனால் யாருக்கும் பயமில்லை என்று தெரிந்த பின் கண்ணன் அவன் தலையிலிருந்து ஒரு தாவு தாவி கடம்ப மரத்தின் தாழ்ந்த கிளைக்கு வந்தான். கடம்ப மரத்துக்கோ பரம சந்தோஷம் இத்தனை அதிசயத்தையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த கிழ மரம் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் துளிர்த்தது. கண்ணன் காலடி அதன் மேல் பட்டதும் பூத்து குலுங்கியது. அவன் காளீயன் தலை மேல் நர்த்தனம் ஆடியபோது காற்றில் தானும் ஆடி அத்தனை பூக்களையும் பூ மழையாக அவன் தலை உடல் மேலெல்லாம் சொரிந்ததல்லவா?
“காளீயா, இந்த இடத்தை விட்டு வெளியேறு உயிர் பிழைத்துக் கொள்” என்று கிருஷ்ணன் போட்ட உயிர் பிச்சையுடன் காளீயன் யமுனையை விட்டு வெளியேறினான்.
அவன் வேறு இடத்துக்கு சென்றான். சிலர் அது பிஜி தீவுக்கு அருகே என்கிறார்கள். நாம் ஏன் அங்கெல்லாம் போகப் போகிறோம். நமக்கு கிருஷ்ணன் துணை இங்கிருக்கும்போது அங்கெல்லாம் போய் ஏன் வீண் ரிஸ்க். காளிங்க தரிசனம் பிஜி தீவில் வேண்டாமே. பிரிந்தாவனமே போதுமே. யமுனை நதிக்கரையில் கடம்ப மரம் இன்னும் இருக்கிறது. காளிங்கன் சிலை இன்னும் இருக்கிறது.நான் நேரில் தரிசனம் செய்து வாங்கினேன். கிருஷ்ணன் காலடியால் மீண்டும் புனித மான நதியாக மிளிரும் யமுனா நதியில் அமிழ்ந்து ஸ்நானம் செய்துவிட்டு பிருந்தாவன நந்த குமாரனை மனதார போற்றுவோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *