RASA AASWAADHA THARANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி
—- .நங்கநல்லூர் J K SIVAN
6. अयं भूलोकं पालयितुमुत्पन्न इति त्वम्; अयं सर्वान लोकान पालयितुमवतीर्ण इत्यहम्।”
அயம் பூலோகம் பாலயிது முத்பன்ன இதித்வம்; அயம் ஸர்வான் லோகான் பாலயிது மவதீர்ண இத்யஹம் ”
‘தசரதா, நீ அயோத்தி மன்னன். உன் காலத்திற்குப் பிறகு இந்த ராஜ்யத்தை உன் மகன் ராமன் ஆளுவதற்காக பிறந்தவன் என்று தான் நினைக்கிறாய். அது ரொம்ப குறுகிய எண்ணம். ராமனைப் பற்றிய உண்மையை நான் அறிந்தவன். நீ அறி யமாட்டாய்.
உன் மகனாக அவதரித்த ராமன் என்னைப் பொறுத்தவரை, இந்த மூவுலகையும் பிரபஞ்சத்தையும் அதன் அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆளுமையில் கொண்டவன். அதை ரக்ஷிப்பதற்காகவே தோன்றியவன். ”.
7. अयं सर्वान् वेदान् जानातीति त्वम्; इमं सर्वे वेदाः न जानन्तीत्यहम्।
அயம் சர்வான் வேதான் ஜானாதீதி த்வம்
தசரதன் அரண்மனையில் எல்லோரும் வாயைப் பிளந்தவாறு விஸ்வாமித்ரர் கூறுவதை ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். வசிஷ்டர் தசரதன் அருகே நின்று கொண்டு விஸ்வாமித்ரர் சொல்வதை கூர்ந்து கவனிக்கிறார்.
”தசரதா, உன்னை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ராமன் என் மகன், வேதம் எல்லாம் கற்றவன் என்று பெருமைப்படுகிறாய். அப்பனே, அனைத்து வேதங்களும் ராமனை இன்னும் முழுமையாக புரிந்து தெரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தெரியும், உனக்குத் தெரியாது.
8. ब्रह्मसृष्टी अयमेक इति त्वम् अस्य सृष्टौ ब्रह्माप्येक इत्यहम्।
ப்ரம்ம ஸ்ருஷ்டி அயமேக இதித்தவம் ஆசிய ஸ்ருஷ்டௌ ப்ரம்மாப்யேக இத்யஹம்
தசரதா, நீ நினைப்பது போல் உன் மகன் ராமன் படைக்கும் தெய்வம் பிரமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவன் அல்ல. எனக்கு மிக நன்றாகவே தெரியும் அந்த ப்ரம்மதேவனே காக்கும் கடவுளான ராமனின் எண்ணற்ற படைப்புகளில் ஒருவனாக உருவானவன். அது உனக்குத் தெரியாது. சகல ஜீவராசிகளுக்கும் காரண கர்த்தா ராமனாக இருக்கும் பரந்தாமன் தான்.
9. अस्मदाधारोऽयमिति त्वम् एतदाधारा ब्रह्माण्ड कोटय इत्यहम् ।
அஸ்மாதாதாரோஅயமிதித்வம் ஏததாதாரா பிரம்மாண்ட கோடய இத்யஹம்.
நீ நினைப்பது போல் உன்னை தனது தந்தை என்ற உறவால் உன்னை, உன் குடும்பத்தை மட்டும் காப்பதற்கு பிறந்தவன் அல்ல ராமன். அவன் இந்த பிரபஞ்சத்தையே காத்தருள்பவன் என்பதை நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.
10. अयमस्मदादिवत् श्रीकाम इति त्वम् सा श्रीरपि सन्ततमेतत्कामेत्यहम् ।
அயமஸ்மதா தீவத் ஸ்ரீ காம இதித்வம் சா ஸ்ரீ ரபி சந்ததமேதத் காமேத்யஹம்
தசரதா, உன் மகன் ராமன் நீ நினைப்பது போல் பல ராஜாக்களை வென்று செல்வத்தை தேடிச் சேர்ப்பவன் அல்ல. சங்கநிதி பத்மநிதி முதலான அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியே சதா சர்வகாலமும் தேடும் ”ஸ்ரீ” நிவாஸன் உன் மகன் ராமன் என நான் அறிவேன். நீ அறியாதவன்.
ரஸ நிஷ்யந்தினி” என்ற ராமாவதார 100 காரணங்களை ”அஹம் வேத்மி” என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ரொம்ப அற்புதமாக ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் இயற்றி உபன்யாசங்கள் செய்திருக்கிறார். அதை தான் என் நண்பர் ஸ்ரீ சுந்தரராமமூர்த்தி ஆங்கிலத்தில் ”ரஸ ஆஸ்வாத தரங்கிணி” என்ற புத்தகத்தில் விரிவரிக்கிறார்.
தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *