ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து  மூவர்  –    நங்கநல்லூர்   J K   SIVAN

ஐயடிகள் காடவர்கோன் நாயனர்

இப்படி  ஒருவருக்கு  பெயர்  இருந்தால்,அவசரத்துக்கு அவரை கூப்பிடமுடியாது  ஐயா  என்று வேண்டுமானால்  கூப்பிட்டு பார்க்கலாம்.
காடவர் என்பது பல்லவ ராஜாக்களின்  ஒரு குலத்தின்  பெயர்  என்பதால்  இந்த  நாயனார்  ஒரு பல்லவ ராஜா என்று அறிகிறோம்.  ஒரு நல்ல ராஜா.  மக்கள்  நலனை மனதில் கொண்டு  நீதியும் நெறிமுறையும், உலகில் புகழ் நிலவ
அரசு புரிந்த பல்லவர்.   நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் பாதுகாத்தவர்.அதோடு  சிறந்த சிவபக்தி வேறு. சிவபக்தர்களைக் கண்டால் ஓடிச் சென்று உபசரித்து  அவர்களை வணங்குபவர்.
தனது  மூத்த  மகன்  தக்க வயது அடைந்தது  ஆட்சி பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு  இந்த நாயனார்  சிவத்தொண்டில் முழுமையாக ஈடுபட்டவர். பல்லவ சரித்ரத்தில்  நாம் படிக்கும் பெயர்களான சிம்ம விஷ்ணு ,பீமவர்மன் ஆகியோர்  இந்த நாயனாரின்  புதல்வர்கள்.
பல சிவஸ்தலங்களுக்கு  யாத்திரை என்று  சிவதரிசனம்  பெற்றவர். இந்த ராஜா கவிஞர் வேறே.  ஆகியால் வெண்பாக்களை இயற்றி  பல சிவஸ்தலங்களில் சிவனைப் பாடியவர். எத்தனையோ  பாடி இருந்தாலும் நமக்கு கிடைத்தது  24 மட்டுமே  என்கிறார்கள். சமஸ்க்ரிதத்திலும் வல்லவர். ஸ்தோத்திரங்கள் இயற்றியவர்.
தத்வ ஞானியாக  விளங்கிய இந்த  நாயனாருடைய  வெண்பா பாடல்கள்   க்ஷேத்ரத் திருவெண்பா எனத் தொகுக்கப் பட்டுள்ளது.
தனது பாடல்கள்  மூலம்,  துறவியாக  வாழ்ந்த  இந்த  நாயனார்,  வாழ்க்கை நிலையாமையை உணர்த்திஉள்ளார்.
 சுந்தர மூர்த்தி  நாயனார்  தனது  திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` என இவரைப் பற்றி  சொல்லியிருக்கிறார்.
ஒரு ஆச்சர்யமான சேதி .காஞ்சிபுரம்  கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனின்  தந்தை முதலாம் பரமேசுவரவர்ம  பல்லவன்  தான் இந்த  ஐயடிகள் காடவர்கோன்  என்று  சில  தமிழறிஞர்கள்  கூறுவது படிக்கவே  சந்தோஷமாக  இருக்கிறது.

 முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில்   ஒரு பெரிய  யுத்தம்  நடந்தது. பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய ராஜா  இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தமிழ் நாட்டிற்கு  படையெடுத்து வந்துவிட்டான்.  அவனை எதிர்த்தவர்  இந்த நாயனார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில்   தான்  இந்த பெரிய  போர்  நடைபெற்றது.  அதில் வித்ரமாதித்தன்  தோற்றான்.   பரமேசுவரவர்மன் என்கிற  இந்த  நாயனார் சாளுக்கியனை   வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு சொல்கிறது .
 பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் என  இந்த  நாயனார்   பெயர் சூட்டினார் . அங்கே  பரமேசுவரக்ரஹம்  என்ற   சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமை  இந்த  நாயனாருக்கு உண்டு.

மாமல்லபுரத்தில் நரசிம்மவர்மன் காலத்திய கல்வெட்டு   இந்த நாயனார்  சமஸ்க்ரிதம், தமிழ்  இரண்டிலுமே சிறந்த பாண்டித்யம் உள்ளவர்  என்று சொல்கிறது. ஒருமனிதன்  ராஜாவாகவும், கவிஞனாகவும், சிறந்த சிவபக்தனாகவும்
 இருப்பது  ஆச்சர்யம்.  குடிமக்கள் அன்போடு  இந்த ராஜாவை   `ஐயடிகள்` எனப் போற்றியது  பொருத்தமானது தான். சமஸ்க்ரிதத்தில்  இவரை   சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாதசிம்ஹா.  ”பஞ்ச பாத ” என்பது தான்  ”ஐ  அடிகள்”.
இன்றும்  எல்லா சிவாலயங்களிலும்  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐவரும் ஒருவராக நின்றுகொண்டிருக்கிறாரே. நாம் அவரை கண்டுபிடித்து வணங்கவேண்டாமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *