PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN 
 
யமன் வரமாட்டான்  போ.
 
மஹா  பெரியவா பற்றிய  அற்புத  அதிசய விஷயங்கள்  அநேகமாக சதா சர்வ காலமும் அவரோடு நிழலாக எ இருந்த  அணுக்க தொண்டர்கள்  நிதர்சனமாக  பார்த்த உண்மைகள்.  மற்றவை பக்தர்கள் நேரிடையாக அனுபவித்ததை. சில பக்தர்கள் தங்கள் விஷயங்களை வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டவர்கள்.அவர்களால் நமக்கு  எத்தனையோ அற்புதங்களை அறியமுடியாமல் போய்விட்டது.  எல்லாம் ஈஸ்வரன் சித்தம். எது தெரியவேண்டுமா அது தெரிகிறதே.  இந்த சமாச்சாரம்  நான் சொல்லப்போவது  மஹா பெரியவா அணுக்கத்தொண்டர்   ராயவரம் பாலு மூலம் வெளிவந்தது. 

நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரா  அதிஷ்டானத்துக்கு,  மஹா பெரியவா  ஒரு தவறை தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள்,  சதாசிவப் பிரும்மேந்திராவிடம்   மஹா  பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும், மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரா  பெயரைச் சொன்னாலும், கேட்டாலுமே  அப்படியே  வெண்ணெய் மாதிரி உருகிப் போய்விடுவார்.

நெரூரில் அதிஷ்டானத்தில்   பெரியவா ஜபம் செய்ய உட்கார்ந்த போது  அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவுக்குப் போய் நின்று கொண்டார்கள்.   பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ  மாற்றவர்கள்  யாரும் பார்க்கக்கூடாது என்பது,ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லை களுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அல்லவா அவை.

இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்  பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின் விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்க முடியும்? குருடாகிப்போய்விடமாட்டோமா?   

 அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக வந்தார் ரங்கசாமி  என்ற  ஒரு பக்தர். 

“பெரியவாளை உடனே அர்ஜண்டா  நான்  தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்”.   வெடவெடவென்று  அவசரமாக  ஏதோ கவலை அவரைத் தின்று கொண்டிருக்க, , மனம் திறந்து தொண்டர்களிடம்  கெஞ்சினார்.

“சுவாமி, பெரியவா, கதவை சார்த்திக்  கொண்டு அதிஷ்டானத்துக்குள்  உட்கார்ந்து கொண்டு  ஜபம் செய்றா.  இப்போ  நாங்களே   யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவாள் தானாகவே வெளியே வந்தவுடன் முதன் முதலாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதுக்கு ஏற்பாடு போன்றோம். கொஞ்சம் பொறுங்கோ”


ரங்கசாமி லேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!.  அணுக்கத் தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார். உள்ளே  ஏதோ  ஒரு பிளான்  ஓடிக்கொண்டிருந்தது.
தொண்டர்களின் சுதந்திரமான வாய்வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கண்ணிமைக்கும் பொழுதில்,  கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம்,  ரங்கசாமி  ஒரே ஓட்டமாக ஓடி   மூடி இருந்த  அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்!   ரங்கசாமியின் இந்தத் தடாலடிச் செயலோ திட்டமோ,  யாரும் எதிர்பார்க்காதது. ஆகவே   என்ன நடக்கப்போகிறதோ  என்று எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள்.ஆச்சர்யமாக  அப்போது  அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறி யாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது.

“நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் பண்ண  வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வர மாட்டான் ,திரும்பிப் போங்கோ”  யாரிடம்  பெரியவா இதை சொல்கிறார்…. அடுத்த நிமிஷமே  

ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக்  கொண்டு விட்டார்கள். ரங்கசாமி அப்போது  ஒரு கதையே சொன்னார்.


அவருடைய  ரொம்ப நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி.   பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்  தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்” என்று  கை  விரித்து விட்டார்கள்.  ஜோசியர், “உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணுங்கோ” என்றார். உடனே போய்,  அப்போது அங்கே இருந்தவர்களிலே   யாரோ ஒருவர்  பக்கத்திலே  நெரூரில  பெரியவா இருக்கா. அவர்கிட்டே  சொல்லிட்டு   பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லபடியாயிடும் ” என்று  ஆலோசனை; சொன்னார்.   இன்னொரு வயதான பாட்டி ஒருத்தரும் , “ ஆமாம் பெரியவா, இதோ பக்கத்திலேயே  நெரூர்லே தானே இருக்கார்.  ஓடிப்போய்  அவா கிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா” என்று அழுத்தமாக சொன்னாள் .  எனவே தான் 
 ரங்கசாமி  சிட்டாக  பறந்து வந்திருக்கிறார். 
அவருடைய அதிர்ஷ்டம்  பேசும் தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது!
ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி உறவினர், படுக்கையில் உட்கார்ந்து புன்முறுவலித் துக்  கொண்டிருந்தார்.
“ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!” என்று கூட சொல்லலாம். 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *