பேசும் தெய்வம். நங்கநல்லூர் J K SIVAN
ராணியும் சன்யாசியும் –
ஆண்டி முதல் அரசன் வரை மிகுந்த பக்தியோடு, பெருமையோடு, சந்தோஷத்தோடு சந்தித்த ஒரு எளிய சந்நியாசி என்று கேட்டால் நமது தமிழகத்தில் L K G படிக்கும் சின்ன குழந்தை கூட உம்மாச்சி தாத்தா என்று சொல்லிவிடும்.
ஒருமுறை சுவீடன் நாட்டு ராணி, மேன்மை தங்கிய ராஜ மாதா ஹெல்லெனிஸ் ஃப்ரெடரிகா தமிழகம் வந்தார். வரும்போதே பக்கா பிளான் போட்டுக் கொண்டு தான் வந்திருக்கிறார். யார் யாரை சந்திக்க வேண்டும், எதெல்லாம் பார்க்கவேண்டும், எங்கெல்லாம் போகவேண்டும் என்று திட்டவட்டமாக ப்ரோக்ராம் பண்ணி இருக்கிறாள் ராணி. அவள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமானவர் மஹாபெரியவா. அவள் மனதில் ஏதோ ஒரு எண்ணம். ஏதோ ஒரு தாபமோ, குறையோ என்னவோ. மஹா பெரியவாளை சந்திக்க ஒரு முக்கியமான காரணத்துக்காக வேண்டுகோளுக்காக அவர் தரிசனம் செய்ய வருகிறார்.
உலகத்தின் பல பகுதிகளிலும் இன்று இந்துக்கள் வாழுகிறார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் சுலபமாகச் சொல்லிப் பயன் அடைவதற்காக ராஜமாதா பெரியவாளிடம் இரண்டு சுலோகங்களைக் கேட்டுப் பெறுகிறார். மஹா பெரியவா அனைவருக்கும் எளிதில் வாயில் நுழையக் கூடியதாக இருக்கட்டும் என்று கொஞ்சம் ஸ்லோகங்களை எளிமையாக்கி உபதேசிக்கிறார்.
“ய சிவோ நாம ரூபாப்யாம் யா தேவி ஸர்வ மங்களா.தயோ ஸம்ஸ்மரணாத் பும்ஸாம் ஸர்வதோ ஜய மங்களம்
“மங்கள ரூபமாக விளங்கும் ஈசுவரனையும், தேவியையும் ஆழ்ந்து ஸ்மரிக்கிற எல்லோருக்கும் எல்லா திசைகளிலேயும் மங்களம் உண்டாகும்,” என்று அர்த்தம். .
“மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தனூஜாய ஸார்வபௌமாய மங்களம்.”
“கோசலை வேந்தனும் உத்தம குணம் படைத்தவனு மான சக்ரவர்த்தித்திருமகன் ஸ்ரீ ராமனுக்கு மங்களம். சர்வ பூமியையும் அவன் ஆள்வதால் ஸார்வ பௌமன் எனப்படுபவனுக்கு மங்களம்”
பூமி எங்கும் மங்களம் பொங்க வேண்டும் என்று விரும்பி, அனைத்துலகில் உள்ளவர்களுக்கும் இந்த ஆசியை வழங்குகிறார் சுவாமிகள். அதற்காக எளிதாக சுலோகங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராஜ மாதா ஸ்வீடன் ராணி ஒருவேளை பூர்வ ஜென்ம புண்யா வினால் மஹா பெரியவா தரிசனம் பெற்றது மட்டு மில்லாமல் அவரிடம் கேட்டு ரெண்டு ஸ்லோகங் களையும் வாங்கிக்கொண்டு அதை எல்லோருக்கும் அறிவிக்க எண்ணம் கொண்டிருக்கிறாளே . எல்லாம் பெரியவா அனுக்ரஹம் என்று தான் சொல்ல வேண்டும்.
எங்கோ இருக்கிற ஒரு ஐரோப்பிய ராணிக்கு பெரியவா ஞாபகம் வருவானேன்?.
அவரை தரிசிக்க எண்ணுவானேன் ?
நாம் நினைக்கிறதெல்லாம் நடந்து விடுகிறதா?
அவள் விஷயத்தில் நடந்ததே.
பெரியவா சொல்லிக்கொடுத்த ஸ்லோகத்தின் அர்த்தம் ராணி மனதை குளிரச் செய்தது. நல்ல ஆத்மா அவள்.
பெரியவாளிடம் ஸ்லோகங்களை வாங்கிக் கொண்டு நமஸ்கரித்தாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பாரத தேசத்தில் புண்யபூமியில் பிறந்தும், தமிழகத்தில் காஞ்சிபுரம் தெரிந்தும், மஹா பெரியவா பற்றி அறிந்தும், லக்ஷியம் பண்ணாத ஹிந்துக்கள் இருக்கும்
போது எங்கோ ஐரோப்பாவில் ஹிந்துக்களில்லாத சில குழந்தைகளும் இந்தச் சுலோகங்களை இன்று சொல்லுகிறார்கள்.
பிரதி காலையும்,மாலையும் அறையில் அமர்ந்து மானசீக பூஜையாக இந்தச் ஸ்லோகங்களை வாய்விட்டுக் கூறாமல் மனதுக்குள் மன்னம் செய்து கொள்கிறார்கள்.
உலகெங்கும் மங்களம் பொங்க இப்படி ஒரு புண்ணிய காரியத்தை எனக்காக ஜகத்குரு செய்து அருளினார்!” என்று மனமுருகிக் கூறினாராம் அந்த மஹாராணி.
‘ஜகத்குரு’ என்ற பெயருக்கு வேறே எங்கு தேடினாலும் இவ்வளவு அருமையாக பொருத்தமாக ஒரு உம்மாச்சி தாத்தா நிச்சயம் கிடைக்க மாட்டார். அவரைப் பற்றி அறிந்தவர்கள் புண்யவான்கள். அவரைப்பார்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர் பேசுவதை கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவரோடு பேசி அவர் ஆசியைப் பெற்ற பாக்யசாலி களில் நானும் ஒருவன்.
புரசை வாக்கத்தில் எங்கள் தாத்தா வீட்டுக்கு மஹா பெரியவா அவரது 30-40 வயதுகளில் வந்திருக்கிறார். எங்கள் தாத்தாவை ராமாயணம் பிரசங்கம் சொல்ல சொல்லிக் கேட்டிருக்கிறார். \\புராண சாகரம்” என்று விருது வேறு கொடுத்து கௌரவித்திருக்கிறார் என்ற போது என் கண்களில் நீர் காவேரியாக கங்கையாக ப்ரவாஹிக்க வேறு ஏதாவது கரணம் வேண்டுமா.?