கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 191-200
191. எது கனவாக கருதப்பட வேண்டியது?
விழிப்பு நிலையில் நாம் காண்பது அனுபவிப்பது எல்லாமே உண்மையில் மாயை, கனவு தான்.
192. எது நிஜம்,சாத்தியமானது?.
பரப்ரம்மா. எங்கும் நிறை பராபரமே. ப்ரம்மம்.
193. எது பொய் ஞானத்தை பெறும்போது தானாகவே மறைவது, அழிவது எல்லாம் பொய் .
194. மாயை எதை கற்பிக்கிறது? ரெட்டை வேஷத்தை. பகவானையும் அவன் ஸ்ரிஷ்டிகளையும் வேறு வேறாக காட்டுகிறது.
195. அஞ்ஞானம் எங்கிருந்து பிறக்கிறது?
தப்பான கேள்வி. எங்கும் அது தான் வியாபித்து இருக்கிறது. இருள் போல. அதை சூரியன், தீப ஒளி அகற்றுவது போல் ஞானம் அறியாமையை அகற்றுகிறது.
196 . நாம் கடவுளை பார்க்க முடியுமா?
ஓ முடியுமே. தினமும் பார்க்கிறோமே. ஆனால் கடவுள் என்று நம் கண்ணுக்கு தெரியாதவள் அம்மா தான்.
197. வணங்கத்தக்க நல்லாசிரியர் யார் ?
அடாடா. அப்பாவை த் தவிர வேறு யார்.?
198.பிறப்புக்கு காரணம் எது?
நமது பந்தம், பற்றுக்கள் தான்.
199.எவன் அழைக்காமல் வரும், கட்டாய, தவிர்க்க முடியாத விருந்தாளி?
எம தர்மன்.
200. கடவுள் பக்தியால் நமக்கு கிடைக்கும் பலன் எது? பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தம் தான். சர்வேஸ்வரனை சகலத்திலும் காணமுடியும்