கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 176-190
176. எவன் ரொம்ப த்ருப்தியாக காணப்படுகிறவன்?
நல்ல சத் புத்திரர்களை பெற்ற தந்தை.
177. எது ஒருவனுக்கு செய்வதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ?
ஐயோ, இந்த பொல்லாத மனதை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கு முடியவில்லையே.. எவ்வளவு முயன்றாலும் எங்கோ ஓடிவிடுகிறதே.
178. பிரம்மச்சாரி என்கிறோமே அவன் யார்? பெண்களோடு பழகி உறவு,தொடர்பு, வைத்துக் கொள்ளாத ஒழுக்கமான கட்டுப்பாட்டில் இருப்பவன் தான் உண்மையில் பிரம்மச்சாரி. சும்மா கல்யாணம் ஆகாதவன் எல்லாம் ப்ரம்மசாரி ஆகமாட்டான்.
179. பரதேவதை என்று யாரை போற்றுகிறோம்?அம்பாள் பார்வதி தேவியை மட்டும் தான் அப்படி போற்றுகிறோம். அவள் தான் ஞானாம்பிகை.
180.லோகநாதன் யார் ?சூரியன் ஒருவனே. அவன் தான் அன்றாடம் உலகில் சகல ஜீவன்களுக்கும் உணவு படியளக்கிறான் .
181.ஓஹோ அப்படியா, சரி உலகில் ஜீவராசிகல் உயிரோடு இருக்க யார் காரணம்?மழை நீர். வருணன்.
182.யார் தைரியசாலி?பயப்படுபவர்களைத் தேற்றி பயமில்லாதபடி ஆக்குபவன். காப்பவன்.
183. யாரை ஜகதகுரு என்கிறோம்?பரமேஸ்வரன் அவன் அவதாரங்களான ஆசார்யர்கள்.
184. எங்கிருந்து எல்லோரும் ஞானம் பெறமுடியும்?பரமேஸ்வரன் தான் தக்ஷிணாமூர்த்தியாக ஞானம் அளிப்பவன்.
185. முக்தி அளிப்பவன் யார்?முக்தி அளிப்பவன் முகுந்தன்.
186.யாரை முகுந்தன் என்கிறோம்?அஞ்ஞானத்திலிருந்து நம்மை விடுவிப்பவன்.
187. எது அஞ்ஞானம் ?ஆத்மாவை, ஆத்ம ஞானத்தை அறியாமல் இருப்பது.
188. யார் கவலைகள் அற்றவன்?கோபத்தை ஒழித்தவனுக்கு கவலையே இல்லை.
189. எது உண்மையான சுகம்?போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அறிந்து. இருப்பதில் மகிழ்வது. ஆசைப்படாதது.
190. எது மாஜிக், செப்பிடு வித்தை?இந்த உலகம் தான் சதா வித்தை காட்டும் அரங்கம்.