SURSAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN

எனக்கு  கிருஷ்ணனையும்  அவனைப் பாடியவர்கள், அவனைப் பேசியவர்கள், அவனை எழுதியவர்கள்,  அவனை நினைக்கிறவர்கள் அனைவரையுமே  பிடிக் கும்.  நானும் அவர்களில் ஒருவனாக இருக்க  ரொம்ப  ஆசைப்படுகிறேன்.  இப்படி இருக்கும்போது இந்த மாயாவி  கிருஷ்ணன் என்னை கேட்கிறான் இப்படி, என்ன அநியாயம் இது?

”என்னடா,   என்னைப் பற்றி எழுதறதில்லை. மறந்து போய்விட்டாயா?  

 கிருஷ்ணன் கேட்கிறான். என்ன பதில் சொல்வேன்?  

 ”கிருஷ்ணா, யார் சொன்னது  நான் உன்னைப் பற்றி எழுதவில்லை. என்று?   உன்னைப் பற்றி நேரடியாக எழுத வில்லை வாஸ்தவம் தான். ஆனால்  நீ எதில் இல்லை,  எவரில் இல்லை? .  ஆகவே  மறைமுகமாக, எதிலும் எவற்றிலும் மறைந்திருக்கும், மறைகள் போற்றும் உன்னை ஏதோ விதத்தில் எழுதிக் கொண்டு தானே வருகிறேன்.

ஹரிவம்சம் உன்னுடையது இல்லையா, நீ  கருடனுக்கு நாராயணனாக சொன்னதை உன்னைப்  பற்றி இல்லையா?,

நீ  பிறந்த காவியமான  ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம் உன்னைப் பற்றியில்லையா?

இருந்தாலும் கிருஷ்ணா என்று உன் பெயர் கொண்ட விஷயமாக இனிமேல் தினமும் எழுதுகிறேன். அதற்கும் நான் ஸூர்தாசைப் பிடித்துக் கொள்கிறேன். அவர் போல் கண்ணில்லாமலேயே கண்ணனை நினைத்து, பார்த்து ரசித்தவர் வேறு யார்?
.
”கிருஷ்ணா , உன்னைக்   கண்ணற்ற பக்தர்  சூரதாஸர் அனுபவித்து சொன்னதையும் மறை முமாக  ரபீந்திர
நாத தாகூர்  உன்னை  கீதாஞ்சலி பாடல்களில்  காட்டுவதையும் எழுதப்போகிறேன்” .

ஒரு விஷயம்.  நான் எழுதும்  கீதாஞ்சலியோ,  சூர் சாகரமோ,  நேர்முக மொழி பெயர்ப்பு அல்ல .  அப்படி ஒன்றிரண்டு எழுதிப் பார்த்தேன்.  எனக்கே  படிக்க  ஆர்வமும்  இல்லை,பிடிக்கவும்  இல்லை. காரணம்.  புரிந்து கொள்ளும் ஞானம் இல்லை.

திருக்குறளை புரிந்து கொள்ள  பரிமேலழக உரை படிக்கப்போய்  ரெண்டுமே  புரியாமல் போனது மாதிரி கதை.

ஆகவே  யார்  எது சொன்னாலும் எனக்கு மனதில் பட்ட உன்னையே  எனக்கு தெரிந்த முறையில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தால் உனக்கு பிடித்த மாதிரி தானே. உன் எண்ணற்ற பக்தர்கள்  என் எநண்பர்கள்  முகநூல் வாட்ஸாப்பில்  என் BLOG ல் எல்லாம் படிக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காமலா தொடர்ந்து படிப்பார்கள்?

ஆகவே  புரியாதவர்கள் சங்கத்  தலைவனாக  எங்க ளுக்கு  தெரிந்த மொழியில் எழுதுகிறேன். இனி சூர்தாஸ்  தினமும் நம்மோடு  இருப்பார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *