PRASNOTHRA RATHNA MALIKA 26-40 J K SIVAN

கேள்வி பதில் ரத்ன மாலை – நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்

கேள்வி பதில் 26-40.

26. எதை   நிலையற்ற  தாமரை இலைத் தண்ணீரோடு ஒப்பிடலாம்?
இளமை, செல்வம்,   குறுகிய கால  பூலோக வாழ்க்கை.  நாம்  முட்டாள்தனமாக  இவை என்றும் சாஸ்வதம் என்றுநினைக்கிறோம். ஆதி சங்கரர்  நமக்கு நினைவூட்டுகிறார்.

27.  யாரை  சந்திர கிரணங்கள் போன்றவர்கள் என்று சொல்லலாம்?
குளு  குளு   என்று காற்றையே குளுமை யாக்கி  பால் போன்ற  கதிர்களை வீசி நம்மை கிறங்க, உறங்க செய்வது சந்திரனின்  கிரணங்கள்  நல்லவர்கள் அப்படிப்பட்டவர்கள்.  நல்ல விஷயங்களோ சொல்வது, செய்வது என்று பிறரை  சந்தோஷமடைய செய்பவர்கள். 

28.  நரகம் உண்மையில்  இருக்கிறதா?
சுதந்திரம்  இல்லாமல், மற்றவன்  பிடியில், அவன் ஆணைப்படி வாழ்ந்து  பிழைப்பை நடத்துவது  தான்  பூலோகத்தில் நரகம். 

29.  எல்லாமே  நல்லது  பயக்கும் என்று எதை சொல்லலாம்?
எளிமையான  வாழ்க்கை , இருப்பதை வைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கை  நன்மை பயக்கும். 

30. எதை ஒவ்வொருவரும் லட்சியமாக கொள்ள வேண்டும்?
எல்லோருக்கும் உதவி, நன்மைகளை செய்வதை.

31.  ஒவ்வொரு விலங்குக்கு எது அத்தியாவசியமானது?அதன்  ஆத்மா.   உயிர் என்று சொன்னாலும் இதை தான் குறிக்கவேண்டும். 

32 எது தப்பான பயனை,தீமையை தருகிறது?
கர்வம், அகங்காரம். மமதை. 

33. அப்படியென்றால் சந்தோஷம் தருவது எது?
நல்லோர் நட்பு. சத்சங்கம். 

34 எவன்  துன்பம் தீர்ப்பவன்?
பற்றற்றவன் தானும் இன்பம் அடைந்து பிறருக்கும்  இன்பம் ஊட்டுபவன். 

35.எது மரணத்துக்கு சமமானது?
முட்டாளாக அறியாமையில் வாழ்வது. 

36.  எது உயர்ந்தது, விலைமதிப்பற்றது?
யாருக்கு எது அவசியம் தேவையோ, அதை அந்த நேரத்தில் தானாகவே  அளிப்பது. 

37. எது சாகும் வரை  உறுத்தி  வாட்டிக்கொண்டே  இருக்கும்?
ரஹஸ்யமாக  நாம்  செய்யும்  பாபங்கள். 

38. எதைச் செய்ய  முயற்சி எடுக்க வேண்டும்?

நல்லவிஷயங்களை கற்க, ஆரோக்யமாக இருக்க, தான தர்மம் முடிந்தவரை செய்ய,   விடாமல்  முயல வேண் டும்.

39. எதை வேண்டாம்  என்று தள்ள வேண்டும்.?
தீயவர் நட்பு, மற்றவர் உடைமைகளை . 

40.இரவும் பகலும்  எதைப்பற்றி யோசிக்கவேண்டும்.?வேறென்ன  ஏற்கனவே நம் முன்னோர்,பெரியோர், நல்லோர்  வாக்கு :  பெண் பொன் மண் ஆசை நீக்கு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *