PRASNOTHRA RATHNA MALIKA 11-25 J K SIVAN

கேள்வி பதில் ரத்ன மாலை  –  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆதி சங்கரர்.
கேள்வி பதில்கள்  11-25 வரை 
11.  எது தம்பி, உலக வாழ்க்கையில் கெட்டியாக  நம்மை பிணைக்கிறது?
செடியை பார்த்திருக்கிறீர்களா? மெல்லிதாக பச்சையாக வளைந்து சுருண்ட கம்பி போன்ற ஒரு கொடி  காற்றில் அலைந்து அருகே உள்ள செடியின் கிளையை, தண்டை, பிடித்துக் கொள்ளும், அதன் மூலம் செடியும்  அதன் இலைகளும், காய்களும் வளரும். அப்படி நம்மை கெட்டியாக உலகத்தோடு பிணைப்பது ”ஆசை”.
12. உன் எதிரி யார் தெரியுமா?
சோம்பல். ‘அப்பறம்”  என்ற சொல்லுக்கே  இது தான் ஆதாரம். அப்பப்போவே  என்பதற்கு ஜென்ம வைரி .
13.  எல்லோருக்குமே  எது பயத்தை அதிகமாக  தருகிறது?
”மரணம்”  என்ற  சொல்லும், அதைப் பற்றி நினைப்பதும்  தான். 
14.  கண் பார்வை இல்லாத  குருடனை விட இன்னும் பெரிய குருடன் யார்?
”எல்லாம் எனக்கே வேணும்”  போதாது  இன்னும் கொஞ்சம்  என்று தவிக்கும், தேடும்,  ஆசை படுபவன். 
15.  எவன் வெற்றி சாலி?
மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். 
16. ‘ இன்பத்தேன் வந்து பாயுது  காதினிலே’  என்கிறோமே, அந்த தேன்  எது?
மூத்தோர், சான்றோர், அறிவுரை. 
17. பிறர்   நம்மை மதிக்கும்  அங்கீகாரத்துக்கு வேர்  எது ?
நாம் எவரிடமும் எப்போதும் எந்த தயவும் கேட்காமல்  இருப்பது.  
18.  எதை அளக்கவே முடியாது?
பெண்ணின் மயக்கும் தன்மை கொண்ட  கவர்ச்சியை  
19.எவன் அப்பா  புத்திசாலி?
பெண்களால் கவரப்படாத,   மனம் தளராத,  ஏமாறாத ஆண் .
20. துக்கம் துயரம்  என்றால் எது?
எதிலும் திருப்தி  அடையாத  மனத்தால் உருவாவது.   ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ‘ — படித்தால் மட்டும் போதாது. 
21. எது மோசமான, அருவறுப்பான செயல் ?
பிச்சை எடுப்பது, அதுவும்  கேடு கெட்டவனிடமிருந்து…
22. எது ஆனந்தமான உன்னத வாழ்வு? 
தவறுகள் தப்பு தண்டா  இல்லாமல் வாழ்வது. 
23.அறியாமை என்றால் என்ன?
எதையும் அறிந்து கொள்ளாமல் , தெரிந்துகொள்ளாமல்  , பயிற்சி இல்லாமல்  இருப்பது. 
24. எவன் விழித்துக்கொண்டிருப்பவன்?
அறிவாளி.  ‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’  என்று பாட்டே இருக்கிறதே 
25. துயரம் எது?
உலகத்தில் வாழும் ஜீவன்களின் முட்டாள்தனம். 
இன்னும் தருவேன்.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *