ஒரு புறநானூற்று பாடல் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று ரொம்ப பழைய விஷயம் ஒன்று சொல்கிறேன். சங்ககாலம் எப்படி இருந்தது என்று நம் யாருக்கும் தெரியாது. பல புலவர்கள் பெயர்கள் மட்டும் படித்ததுண்டு. அதில் கபிலர் என்று ஒருவர். வாயில் அவசரமாக கூப்பிடமுடியாத சில பெயர்கள் கொண்டவர்களும் உண்டு. உதாரணம். , அணிவாடு முன்றிலார். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், போதும். ரொம்ப பெரிய லிஸ்ட் இருக்கிறது.பாரியென்னும் வள்ளல் இவர்கள் எல்லோருக்கும் நிறைய உதவியவ ராஜா.கபிலரும் பாரியும் நெருங்கிய நண்பர்கள். பாரியின் மகள்கள் ரெண்டு பெரும் கபிலரின் ஸ்டுடென்ட்ஸ். கபிலர் பாரியைப் பற்றி நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறார். படித்தால் புரியவில்லை.
‘முந்நூறே ஊர்களை உடைய பறம்பு நாட்டு ராஜா பாரி. அங்கே இருப்பது ஒரே ஒரு மலை.சில சிறிய அருவிகள். அவனுக்குள்ள புகழ் பில் பெரிய பெரிய ராஜ்யங்களை ஆண்ட ராஜாக்களுக்கு இல்லை. கபிலர் வேறு யாரையும் தேடி போகவில்லை.
ஒரு நாள் வேறு நாட்டிலிருந்து வந்த புலவர்களும் தனவந்தர்களும் நிறைந்திருந்த கூட்டத்திலே கபிலர் புகுந்தார். யாவரும் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது கபிலர் நடுவே “இந்தப் புலவர்கள் பைத்தியக்காரர்கள்” என்று சொன்னபோது எல்லோரும் திடுக்கிட்டனர். ஏன்? எதற்காக இப்படி கபிலர் கூறுகிறார்? இவரும் ஒரு புலவர் தானே?”
கபிலர் விளக்கினார்.”ஆமாம்; இந்த புலவர்கள் எல்லோருமே பைத்தியக்காரர்கள் தான். பாரியை இப்படி எல்லோரும் சேர்ந்து எப்போதும் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். பாரி, பாரி என்று அந்த ஒருவனையே இவர்கள் பாடுகிறார்கள். பாரியை விட்டால் இவர்களுக்கு வேறு ஒருவரும் கிடைக்க வில்லையா?பாரியையே இவர்கள் புகழ்வது எவ்வளவு பேதைமை! பாரிதானா இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான்? வேறு ஒருவரும் இல்லையா?” கபிலர் கேள்விக்கு யார் விடை சொல்வது?”பாரியைப் போன்றவர் ஒருவரும் இல்லையா? இல்லையென்று சொன்னால் அது பொய்யாகும். ஒருவரேனும் இல்லாமற் போய் விடுவாரா? இருக்கிறார்; உண்மையில் ஒருவர் இருக்கிறார்.” என்று கபிலர் சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.கூட்டத்தில் வியப்பு.”யார் அவர்?. அவரை ஏன் கபிலர் பாடவில்லை?” என்று சிலர் கேட்டனர்.
“ஆம், நான் உண்மையைத் தான் சொல்லுகிறேன். பாரி பாரியென்று பல ஏத்தி ஒருவனையே இச்செந்நாப் புலவர் புகழ்வர். பாரி ஒருவன் மாத் திரம் அல்லன்; இன்னும் கைம்மாறு கருதாமல் உலகு புரக்கும் தன்மையுடையார் ஒருவர் உளர். அவரை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.”
“உலகைப் பாதுகாக்கும் மாரி இல்லையா? பாரி ஒருவன்தானா? ஈண்டு உலகு புரப்பது பாரிக்கு மாத்திரந்தானா உரிமை? மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பது” என்று கபிலர் கூறி முடித்தார்.
அலையோய்ந்த கடலிலே திடீரென்று கொந்த ளிப்பு உண்டானது போல கூடியிருந்த புலவர்களின் மகிழ்ச்சி எல்லை மீறியது.
“ஓஹோ..மறுபடியும் பாரியின் புகழ்தானா?”எல்லோரும் செல்லும்போது ஒருவர் விடாமல் “பாரிக்காகவே கபிலர் பிறந்திருக்கிறார்; கபிலருக்காகவே பாரி பிறந்திருக்கிறான்” என்று பேசிக் கொண்டார்கள்.கபிலரின் பாடல் இது தான்:
“பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீன் டுலகுபுரப் பதுவே.” (புறநானூறு, 107.)
இதை நினைவு கூர்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. (என் தூரத்து உறவினர்)