RAMANASRAMAM WONDERS J K SIVAN

ரமணாஸ்ரம விஷயங்கள்  – நங்கநல்லூர் J K  SIVAN
குரங்கு ராஜா கதை

கிட்டத்தட்ட 25 வருஷங்கள்  ஆரம்பகாலத்தில்  1900  முதல்  குரங்குகள் நடமாட்டம் ஆஸ்ரமத்தில் இருந்தது.   நாய்கள் எப்படியோ அப்படி தான்  மகரிஷி குரங்குகளோடும்  அன்பாக பழகுவார்.  குரங்குகள் நாய்கள் போல் நெருங்கி பழகாது. மனிதர்களை தாக்கும்.  கடிக்கும்.
மஹரிஷி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அவருக்கு  குரங்குகளின் சேஷ்டை சப்தம் சைகை இதிலிருந்தே அவை என்ன சொல்கிறது  என நன்றாக புரியும்.  குரங்குகள் மனிதர்கள் போலவே  ஒரு தலைவனை பின்பற்றுபவை. கோஷ்டிகள் கொண்டவை.   கோஷ்டிகளுக்குள் சண்டை வரும். யார் தலைவன் என்ற போட்டியில் ஜெயிப்பவன் தலைவன்.
ஒரு சின்ன குரங்கை ஒரு பெரிய கடித்து தாக்கி கீழே தள்ளி விட்டதால் குட்டிக் குரங்கின்  கால் எலும்பு முறிந்து நொண்டியாகி விட்டது. அந்தக்குட்டி குரங்கு மெதுவாக விந்தி விந்தி ஆசிரமத்துக்குள் வந்து விட்டது.  மஹரிஷி  அதை எடுத்து வளர்த்தார். அதன் காலில் கட்டு போட்டு குணமாகியது. மனிதர்கள் தொட்ட  குரங்கை மற்ற குரங்குகள் பஹிஷ்கரிக்கும்.கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளாது.  ஆனால்  ரமணாஸ்ரமத்தில் இந்த விதி கிடையாது. எல்லா குரங்குகளும் வரும். அவரோடு பழகும்.  கோஷ்டியில் சச்சரவு சண்டை என்றால் இரு சாராரும் சமாதானத்துக்கு  மகரிஷியிடம் வருவார்கள். அவர்களுடைய ஜலக்ரீடை வேடிக்கையாக  பார்ப்பார். நீரில் குதிப்பது, நீந்துவது, மூழ்கி எழுவது எல்லாம் பார்ப்பார்.அவர் பார்ப்பது அவற்றுக்கு பிடிக்கும்.  ஆஸ்ரமத்தில் எல்லோரிடமும்  ”குரங்குகள் அவர்களில் ஒருவனாக  என்னை ஏற்றுக்கொண்டு பழகும். கால் சரி யானபின்   நொண்டி  தனது குழுவோடு சேர்ந்து கொண்டான். குரங்காடுகளுக்கு தனித்  தனியாக  தட்டுகளில் ஆகாரம் வைப்பது வழக்கம். வாரி இறைத்து அவை உண்ணும். நொண்டி அப்படியல்ல. தனது தட்டில் இருந்து ஒரு பருக்கை கூட கீழே விஷ  அனுமதிக்காது. முதலில் வெளியே விழுந்த  பருக்கையை தேடி பொறுக்கித்  தின்று விட்டு அப்புறம் தட்டில் உள்ளதை சாப்பிடும்.  அவனுக்கு ரோஷம் ஜாஸ்தி. ஒரு தடவை ஏதோ கோபத்தில் நொண்டி தட்டில் இருந்த  சாதத்தை வீசி எறிந்தபோது  ”ஏண்டா இப்படி  சாதத்தை வீணடிக்கிறாய் என்று மஹரிஷி  கேட்டதற்கு? அவர் கண்ணுக்கறுகில் அடித்து விட்டான்.  அப்புறம்  மஹரிஷி  அவனோடு ஒன்றும்  பேசாமல்  இருந்தது,அவனை மடிமேல் உட்கார அனுமதிக்காததும்  அவனால்  தாங்க முடியவில்லை. நொண்டி  ரொம்ப கெஞ்சி,குழைந்து அவரிடம் என்னென்னவோ மன்னிப்பு  கேட்பது போல் முனகுவது வருக்கு புரிந்து,  ”இனிமேல் இப்படி செய்யாதே ‘ மறுபடியும் நெருங்கி விளையாட,மடிமேல் அமர அனுமதித்தார்.
கிண்ணத்தில்  சூடான பாலை ஆசிரமத்து தொண்டர்  ஊற்றி நொண்டி எதிரே வைத்ததை மஹரிஷி  பார்த்து அந்த சூடான கிண்ணத்தை  எடுத்து வாயருகே வைத்து ஊதினதை நொண்டி தப்பாக புரிந்து கொண்டுவிட்டான். தனது பாலை கொடுக்காமல் அவன் குடிக்கிறார் என்று தோன்றிவிட்டதால் அவரை அடித்து விட்டான்.  அவர் சூடாற்றிவிட்டு பால்கிண்ணத்தை அவனருகில் வைத்ததும்  அவன் அவரை நடித்ததற்காக  மன்னிப்பு கேட்க  ஆட்டம் ஆடினான். முனகினான். மஹரிஷி  அவனை எப்போதோ மன்னித்துவிட்டார்.  ஒரு கோஷ்டியில் குரங்கு ராஜா, தனது அடுத்த  ரெண்டு  நெருங்கிய சகாக்களை  விரட்டிவிட்டான். அவர்களில் ஒருவன் தான்  அடுத்த  தலைவன்.   அந்த சமயத்தில் ராஜாவுக்கு  மரணம் நெருங்கிவிட்டது.  அவனை ஆஸ்ரமத்துக்கு  எடுத்து வந்தார்கள்.  மஹரிஷியின் மேலே சாய்ந்தவாறு குரங்கு ராஜா மரணம் அடைந்தான். வெளியே அனுப்பப்பட்ட ரெண்டு தலைவர்களும்  ஆசிரமம்  அருகே  ஒரு மரத்தில் உட்கார்ந்தார்கள். குரங்கு  சாகும்போது  ஏதோ ஓலம் இட்டது. அதைக் கேட்டு எல்லா குரங்குகளும் துன்பம் துயரத்தால் குதித்து கத்தின . இறந்து போன குரங்கு ராஜாவுக்கு மஹரிஷி  ஒரு துறவிக்கு அளிப்பது போல் மரியாதை அளித்தார். அதன் உடல் பாலால் அபிஷேகம் பண்ணப்பட்டு, நீரால் குளிப்பாட்டப்பட்டு, உடல் பூரா  விபூதி பூசி முகம் மட்டும் திறந்து உடல் பூரா புது வஸ்திரம் போர்த்தி, கற்பூர ஹாரத்தியோடு அடக்கம் செய்யப்பட்டு ஆதங்கள்வரை மேல் ஒரு கல் நடப்பட்டது. 

ரமணாஸ்ரம விஷயங்கள்  – நங்கநல்லூர் J K  SIVAN 

 
குரங்கு ராஜா கதை

 
கிட்டத்தட்ட 25 வருஷங்கள்  ஆரம்பகாலத்தில்  1900  முதல்  குரங்குகள் நடமாட்டம் ஆஸ்ரமத்தில் இருந்தது.   நாய்கள் எப்படியோ அப்படி தான்  மகரிஷி குரங்குகளோடும்  அன்பாக பழகுவார்.  குரங்குகள் நாய்கள் போல் நெருங்கி பழகாது. மனிதர்களை தாக்கும்.  கடிக்கும்.  
 
மஹரிஷி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அவருக்கு  குரங்குகளின் சேஷ்டை சப்தம் சைகை இதிலிருந்தே அவை என்ன சொல்கிறது  என நன்றாக புரியும்.  குரங்குகள் மனிதர்கள் போலவே  ஒரு தலைவனை பின்பற்றுபவை. கோஷ்டிகள் கொண்டவை.   கோஷ்டிகளுக்குள் சண்டை வரும். யார் தலைவன் என்ற போட்டியில் ஜெயிப்பவன் தலைவன்.  
 
ஒரு சின்ன குரங்கை ஒரு பெரிய கடித்து தாக்கி கீழே தள்ளி விட்டதால் குட்டிக் குரங்கின்  கால் எலும்பு முறிந்து நொண்டியாகி விட்டது. அந்தக்குட்டி குரங்கு மெதுவாக விந்தி விந்தி ஆசிரமத்துக்குள் வந்து விட்டது.  மஹரிஷி  அதை எடுத்து வளர்த்தார். அதன் காலில் கட்டு போட்டு குணமாகியது. மனிதர்கள் தொட்ட  குரங்கை மற்ற குரங்குகள் பஹிஷ்கரிக்கும்.கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளாது.  ஆனால்  ரமணாஸ்ரமத்தில் இந்த விதி கிடையாது. எல்லா குரங்குகளும் வரும். அவரோடு பழகும்.  கோஷ்டியில் சச்சரவு சண்டை என்றால் இரு சாராரும் சமாதானத்துக்கு  மகரிஷியிடம் வருவார்கள். அவர்களுடைய ஜலக்ரீடை வேடிக்கையாக  பார்ப்பார். நீரில் குதிப்பது, நீந்துவது, மூழ்கி எழுவது எல்லாம் பார்ப்பார்.அவர் பார்ப்பது அவற்றுக்கு பிடிக்கும்.  ஆஸ்ரமத்தில் எல்லோரிடமும்  ”குரங்குகள் அவர்களில் ஒருவனாக  என்னை ஏற்றுக்கொண்டு பழகும். கால் சரி யானபின்   நொண்டி  தனது குழுவோடு சேர்ந்து கொண்டான். குரங்காடுகளுக்கு தனித்  தனியாக  தட்டுகளில் ஆகாரம் வைப்பது வழக்கம். வாரி இறைத்து அவை உண்ணும். நொண்டி அப்படியல்ல. தனது தட்டில் இருந்து ஒரு பருக்கை கூட கீழே விஷ  அனுமதிக்காது. முதலில் வெளியே விழுந்த  பருக்கையை தேடி பொறுக்கித்  தின்று விட்டு அப்புறம் தட்டில் உள்ளதை சாப்பிடும்.  அவனுக்கு ரோஷம் ஜாஸ்தி. ஒரு தடவை ஏதோ கோபத்தில் நொண்டி தட்டில் இருந்த  சாதத்தை வீசி எறிந்தபோது  ”ஏண்டா இப்படி  சாதத்தை வீணடிக்கிறாய் என்று மஹரிஷி  கேட்டதற்கு? அவர் கண்ணுக்கறுகில் அடித்து விட்டான்.  அப்புறம்  மஹரிஷி  அவனோடு ஒன்றும்  பேசாமல்  இருந்தது,அவனை மடிமேல் உட்கார அனுமதிக்காததும்  அவனால்  தாங்க முடியவில்லை. நொண்டி  ரொம்ப கெஞ்சி,குழைந்து அவரிடம் என்னென்னவோ மன்னிப்பு  கேட்பது போல் முனகுவது வருக்கு புரிந்து,  ”இனிமேல் இப்படி செய்யாதே ‘ மறுபடியும் நெருங்கி விளையாட,மடிமேல் அமர அனுமதித்தார். 
 
கிண்ணத்தில்  சூடான பாலை ஆசிரமத்து தொண்டர்  ஊற்றி நொண்டி எதிரே வைத்ததை மஹரிஷி  பார்த்து அந்த சூடான கிண்ணத்தை  எடுத்து வாயருகே வைத்து ஊதினதை நொண்டி தப்பாக புரிந்து கொண்டுவிட்டான். தனது பாலை கொடுக்காமல் அவன் குடிக்கிறார் என்று தோன்றிவிட்டதால் அவரை அடித்து விட்டான்.  அவர் சூடாற்றிவிட்டு பால்கிண்ணத்தை அவனருகில் வைத்ததும்  அவன் அவரை நடித்ததற்காக  மன்னிப்பு கேட்க  ஆட்டம் ஆடினான். முனகினான். மஹரிஷி  அவனை எப்போதோ
 மன்னித்துவிட்டார். 
 
ஒரு கோஷ்டியில் குரங்கு ராஜா, தனது அடுத்த  ரெண்டு  நெருங்கிய சகாக்களை  விரட்டிவிட்டான். அவர்களில் ஒருவன் தான்  அடுத்த  தலைவன்.   அந்த சமயத்தில் ராஜாவுக்கு  மரணம் நெருங்கிவிட்டது.  அவனை ஆஸ்ரமத்துக்கு  எடுத்து வந்தார்கள்.  மஹரிஷியின் மேலே சாய்ந்தவாறு குரங்கு ராஜா மரணம் அடைந்தான். வெளியே அனுப்பப்பட்ட ரெண்டு தலைவர்களும்  ஆசிரமம்  அருகே  ஒரு மரத்தில் உட்கார்ந்தார்கள். குரங்கு  சாகும்போது  ஏதோ ஓலம் இட்டது. அதைக் கேட்டு எல்லா குரங்குகளும் துன்பம் துயரத்தால் குதித்து கத்தின . இறந்து போன குரங்கு ராஜாவுக்கு மஹரிஷி  ஒரு துறவிக்கு அளிப்பது போல் மரியாதை அளித்தார். அதன் உடல் பாலால் அபிஷேகம் பண்ணப்பட்டு, நீரால் குளிப்பாட்டப்பட்டு, உடல் பூரா  விபூதி பூசி முகம் மட்டும் திறந்து உடல் பூரா புது வஸ்திரம் போர்த்தி, கற்பூர ஹாரத்தியோடு அடக்கம் செய்யப்பட்டு ஆதங்கள்வரை மேல் ஒரு கல் நடப்பட்டது.
 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *