SURI NAGAMMA J K SIVAN

ரமணர்  நினைவுகள்     –    நங்கநல்லூர்  J K  SIVAN

சூரி நாகம்மா  கடிதங்களில் படித்தது
1945ல்   நவம்பர்  வாக்கில்,  அடிக்கடி  மஹரிஷிக்கு   சரியாக   நடக்க முடியவில்லை,  முடக்கு வாதம்  என்று  சில பக்தர்கள் ஏதோ  ஆயுர்வேத எண்ணெய்    தடவி அவர்  காலை  நன்றாக  உருட்டி,பிசைந்து,  பிடித்து, உருவி விட்டார்கள்.  ரெண்டு  மூன்று மாசம்  இப்படி சென்றது.  ”நாங்களும்  இந்த  சேவை செய்ய வேண்டும்”  என்று இன்னும் சிலரும்  முன்வர  ஆளுக்கு அரை  மணி நேரம்  பங்கு பிரித்துக்  கொண்டு  விட்டார்கள். மகரிஷி  தனக்கும்  இதற்கும்  சம்பந்தமே இல்லாமல்  ஒன்றும்  பேசமாட்டார்.”எனக்கும்  புண்யம் வேண்டாமா?”  என்று  தனது  காலை தானே   மகரிஷி  சில சமயம்  பிடித்துக்கொண்டு   அவர்களை தடுப்
பார்.   ஒய்வு பெற்ற  நீதிபதி  ஒருவர்  ”சுவாமி எனக்கும் கொஞ்சம்  புண்யத்தில் பங்கு வேண்டும் ” என்று கேட்டார்.”உனக்கே இப்போ  70க்கு  மேலே. நீ  எனக்கு சேவை பண்ணனுமா? நீ  பேசாமல் மௌனமாக  தியானம் பண்ணினால் போதும் ” என்று சொல்லிவிட்டார் மஹரிஷி . 

ரெண்டு வருஷம் முன்னாலே  அதாவது  1943ல்  ஒரு தெலுங்கு தம்பதி குண்டூரிலிருந்து வந்தார்கள்.  அடிக்கடி வ ஆஸ்ரமம் வரும் பக்தர்களில் அவர்க ளும் ஒருவர்.   ஒவ்வொரு முறியும்  ஆஸ்ரமத்தில்  ரெண்டு மாசம் இருப்பார்கள்.

ஒரு தடவை  அந்த பக்தர்  மஹரிஷியிடம் ”சுவாமி  இவள்  தொல்லை தாங்கமுடியவில்லை. நீ வராதே  என்றால் கேட்ப தில்லை.கூடவே  வருகிறாள். வந்தால்  ரெண்டு மாதம் கூட முழுசாக  உங்களோடு தங்கி  இருக்க முடியவில்லை.  ஊருக்கு போகலாம், அங்கே நிறைய வேலை குடும்பத்தில் இருக்கிறது என்கிறாள்.  நீ  மட்டும்  திரும்பிப் போ  என்றால்  போகமாட்டேன் என்கிறாள்.  நீங்களாகவே  அவளை அழைத்து  ”நீ மட்டும் போ,அவர் இங்கே இருக்கட்டும் என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார்.”
”அவளை  போகச் சொல்லிவிட்டு   நீ  எங்கே  பறந்து போவாய்? நீ எங்கே இருந்தாலும்  அங்கே உன் குடும்பம்  இருக்குமே.   நானும் உன்னைமாதிரி குடும்பத்தை விட்டு வந்தவன் தான்.  உன் குடும்பத்தை  விட  என் குடும்பம் நூறு மடங்கு  பெரிசு. உன் மனைவி  ”நான் எங்கே போவேன், இங்கேயே  நானும்  இருந்து விடட்டுமா? என்றால்  நான்  என்ன பதில் சொல்வேன்.
இந்த ஆஸ்ரமம் அதில் உள்ளவர்கள்  எல்லாரும் என்குடும்பம்.   இவர்களை விட்டு நான் எங்கே போக முடியும் ? சொல் ”

 ”சுவாமி  நீங்கள்  பற்றற்றவர்.  எவ்வளவு பெரிய  குடும்பமாக இருந்தாலும் எதிலும் ஒட்டாதவர்” என்று தலையசைத்தார் அந்த பக்தர். 

இன்னொரு  பக்தர்  மஹரிஷியிடம்  வந்து  ஒருநாள்  ”என் கண் பார்வை மங்கலாக  இருக்கிறது. பகவான்   அளிக்க வேண்டும்” என்கிறார்”  மகரிஷி  தலையசைத் தார்.  நீ  நம்பிக்கையோடு   என்னிடம் வருகிறாய்.  நான்  என்  கால்  முட்டி வலிக்கு   யாரிடம் செல்வது? என்று சொல்லி  சிரித்தார். 

 ஒருநாள் மத்தியானம் 3 மணி இருக்கும்.  ஒரு  பக்தர் வந்தார் 

 ”சுவாமி, நான்   காலை  மாலை  ரெண்டு வேளையும்  ராமநாமம் ஜெபம் பண்ணுகிறேன்.  ஆனால்  என்னன்னவோ எண்ணங்கள்  குறுக்கே  வந்து தொலைக்கிறது. என்னால்  ஜெபத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை.  நாம ஜபம் பண்ணுகிறேன் என்பதே மறந்து போகிறது.  என்ன செய்வது?”

”என்னென்னவோ  எண்ணங்கள்  நடுவிலே  எப்போவாவது ராமநாமம்  கிடைத்தால் அதை கெட்டியாக பிடித்து வைத்துக் கொள் ”

”சுவாமி, இந்தஇடையூருக்கு காரணம்  ”ஸம்ஸாரம்  தானே ? ஆகவே  நான் குடும்பத்தை விட்டு விலகி விடலாம்  என்று நினைக்கிறேன்’

”ஓஹோ. சம்சாரம் என்றால்  என்ன? உள்ளே இருப்பதா  வெளியே இருப்பதா?”

”மனைவி குழந்தைகள் மற்ற உறவுகள், அப்பா அம்மா…இதெல்லாம்  தானே  சுவாமி சம்சாரம்..’

.”ஓஹோ அவர்கள் தான் சம்சாரமா?  உனக்கு என்ன தடை செய்கிறார்கள் அவர்கள்? முதலில் சம்சாரம் என்றால் என்ன என்று புரிந்து கொள்.அப்புறமாக  அதிலிருந்து தப்பிக்க வழி தேடலாம்”

அந்த பக்தர் தலையைத்  தொங்கப் போட்டுக்கொண்டு  பேசாமல் சிலையாக உட்கார்ந்தார். 

”நீ  உன் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு  இங்கே வந்தால் இது இன்னொரு  விதமான சம்சாரமாக போய்விடுமே. ஒருவேளை சன்யாசியாகி விட்டால்?  என்று நினைக்கலாம்.  அப்போது இன்னொரு சம்சார  பந்தமும்  தொற்றிக்கொண்டு விடும்.  கைத்தடி,  கமண்டலம், தீர்த்த பாத்திரம்,   கப்பரை   … எதற்கு அதெல்லாம்? 

”சம்சாரம் என்றால்  மனதில் உருவாகும்  சமாசாரங்கள். அதன்  பந்தம்.   அந்த பற்றினை  விலக்கிவிட்டால்,  நீ எங்கே இருந்தாலும்  ஒன்று தான்.  எதுவும் உன்னை  எப்போதும் தொந்தரவு செய்யாது” என்றார்  மஹரிஷி .
பாவம்  அந்த பக்தர். ஒருவாறு  தைரியம் வரவழைத்துக் கொண்டு   

”ஆமாம்  சாமி,  ஆனால்  எப்படி சாமி அந்த மனதில் இருக்கிற  சம்சாரத்தை  விட்டு விடுவது?”

 “அது கஷ்டமே இல்லை.  நீ தான் ராம ஜபம் பண்ணு கிறேன் என்று சொன்னாயே.  குறுக்கே  எண்ணங்கள் வருகிறது. ராமநாம ஜபம் பண்ணுவதே  மறந்து போகிறது என்றாயல்லவா ?  இது  மாதிரி  வேறே எண்ணங்கள்  வருகிறது என்பதை  ஞாபகம் வைத்துக் கொண்டு  ராம நாம ஜபம் பண்ணுகிறேன் என்ற நினைப்போடு அடிக்கடி  உன்னை நீயே கண்காணித் துக் கொண்டு வா. மற்ற எண்ணங்கள்  மெதுவாக  உன்னை விட்டு  வெளியேறிவிடும் .”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *