அருமையான குரு அபிமான சிஷ்யன்-5
நங்கநல்லூர் J.K. SIVAN
கூரேசனின் குறை நீங்கியது. குருநாதர் ஸ்ரீ ராமானுஜரை மீண்டும் சந்தித்தாகிவிட்டது. ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் குருநாதரோடு இணைந்து ஸ்ரீவைஷ்ணவ தொண்டு துவங்கியாச்சு. அநேக சிஷ்யர்கள் இப்போது அவருக்கு உதவ சேர்ந்து விட்டார்கள். தினமும் அரங்கன் முன் கண்ணால் அவனைக் காண முடியாவிட்டாலும் மனதால் கண்டு தரிசிப்பதும் ப்ரார்த்திப்பதும் வழக்கமாகி விட்டது. வழக்கம்போல் ஒரு நாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு அங்கேயே வெகு நேரம் அங்கேயே அரங்கன் எதிரே நின்றார் கூரேசர். அரங்கன் ஆழ்வானைக் கேட்டான்:
“என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே,ஏதாவது குறை இருக்கிறதா என்னிடம் சொல்ல ?”
“குறை யொன்று மில்லை கோவிந்தா! ஏதோ உன் முன்னால் நின்று ஆத்ம திருப்திக்கு மனசுக்குள்ளேயே பாடவேண்டும் என தோன்றியது.”
“கூரேசா, எனக்கும் இன்று உன்னை கண்டதில் வழக்கத்தை விட ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எதாவது என்னிடம் கேளேன் ?”
“ரங்கா ! என்ன விளையாடுகிறாயா?எனக்கு தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லையே. நான் என்ன கேட்பது உன்னிடம்?”
“இல்லை கூரேசா, என்னிடம் நீ எதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ஆண்டாளுக்
காவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!”
“சரி, ரங்கா, கேட்டுவிடுகிறேன். நீ என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்து கொள்’.
”ஹும்” “ ஹும்”” வேறே எதாவது கேள் கூரேசா”
“வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்?”
“சரி, உன் விருப்பப்படியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, கூடுதலாக உன்னைச் சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம் அளிக்கிறேன்” என்றான் திருவரங்கன்.
பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார். ராமானுஜ ருக்கு மேற்கண்ட சம்பாஷனை தெரியவந்தது. ஆனந் தத்தில் கூத்தாடினார்.
ஒரு சிஷ்யன் கேட்டான்
”ஆசார்யரே என்ன ஆயிற்று உங்களுக்கு?
”ஸ்ரேஷ்டன் கூரேசனால் எனக்கும் நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனை சார்ந்தவனல்லவா” . ராமானுஜர் கூரேசர் வீட்டுக்கு நடந்தார்..
“கூரேசா, நீ என்ன கார்யம் செய்துவிட்டாய் உன் குரு
வாகிய என்னை கேட்காமலேயே?”
கூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை, பதில் சொல்ல
வில்லை விழியின்றி விழித்தார்
ஏன் பேசமுடியவில்லை உன்னால்? கூரேசா, நீ எதற்காக ரங்கனிடம் உடலிலிருந்து விடுபடவேண்டும் என கேட்டாய்?.
எனக்கு முன் எதற்காக நீ வைகுண்டத்தில் இடம் பிடிக்கவேண்டும். சொல் கூரேசா ஏன் அவ்வாறு கேட்டாய்?
“ஸ்வாமி, நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்”
“என்ன முறை? புரியும்படியாக சொல் கூரேசா. மழுப்பாதே””
“”நீங்கள் சொல்லிகொடுப்பீர்களே “பரம பதம் சென்ற மூத்தவர்கள், இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது வாசலில் நின்று வரவேற்பர் என்று ” எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று மூத்தவர்கள் அதுவும் என் குருவான தாங்கள் வருகை புரியும்போது முறையாக மரியாதை யுடன் முன்னின்று பணிந்து வணங்கி உங்களை வரவேற்க வேண்டும். ஆகவே நான் முன்பாக செல்ல வரம் கேட்டேன்”. என்றார் கூரேசர்.
ஆடிப்போனார் ஆசார்யன்.
” என்னருமை கூரேசா வைகுண்டத்தில் வயது ஏது? இளையவர் யார்? முதியவர் யார்? பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்? தெரிந்தும் கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உன் மனம் விழைந்தது புரிகிறது. என் பிரியமான கூரேசா, உனக்கு ஈடேது??”
ஆசார்யன் கண்களில் நீர்மல்க கூரேசனை தழுவிக்கொண்டார்
.”கூரேசா, நீ தான் என் ஆத்மா உன்னை நான் எப்படி பிரிய முடியும்? இந்த தள்ளாத 115 வயது கிழவனை விட்டு போக பார்க்கிறாயா? என்னையும் உன்னோடு கூட்டி செல்”. கூரேசன் சிலையாக நின்றார். இறைவன் முன்பு நின்றிருந்தபோதும் இந்த எண்ணம் தோன்றா மல் போனதே என சிந்தித்தார்
.”என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!!” என்று ராமனுஜரின் கால்களை பிடித்தார்.“கூரேசா உனக்கு வரமளித்த ரங்கநாதன் எனக்கும் வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன் எனக்கு முன் போகாமல் உன்னை தடுக்க வரம் தேடுகிறேன்—- இல்லை. தவறு. தவறு, ரங்கனின் ஆக்னையை மாற்ற நான் யார்?. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை”
ஒரு கணம் யோசித்த ஆசார்யன் தொடர்ந்தார்
“”கூரேசா!! நீ போய்விட்ட பிறகு நான் எப்படி இங்கு வாழ முடியும்? பரமபத நாராயணன் உன்னை கவர்ந்தான். நீ அங்கே செல். நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் சிலகாலம் இருக்கிறேன்.”
கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந்தனர். அவர்களில் ஒருவராவது கூரேசனாக முடியுமா?