கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN
60. தினைச்சிலம்புவ. தம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ. நாகு இள வண்டு; பூம்
புனல் சிலம்புவ. புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ. மங்கல வள்ளையே.
கம்பர் காலத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கவில்லை. மாவுகள் எல்லாம் வீட்டில் கல்லுரல், அம்மி, உரலில் உலக்கையால் இடித்து தான். ஆகவே கோசலத்தில் எங்கு பார்த்தாலும் என்ன சத்தம் கேட்கும் தெரியுமா? வயல்களில் கிளிகளின் கீதம், மலர் செடி கோடிகளில் வண்டுகளின் ரீங்காரம், குளம் ஆறு ஏரி , குட்டைகளில் பறவைகளின் மிருகங்களின் விளையாட்டில் எழும் சந்தோஷ குரல்கள், எல்லோருக்கும் அன்னதானம் வழங்கும் தனவந்தர்கள் இல்லங்களில் உரலில் உலக்கையால் நெல், அரிசி பருப்பு இவற்றை பெண்கள் இடிக்கும் போது பாடும் உலக்கை பாடல்கள்…வளையல்கள் ஒலி போதுமா… கம்பா உனக்கு பெரிய கை தட்டல்.
64. வள்ளி கொள்பவர் கொள்வன. மா மணி;
துள்ளி கொள்வன. துங்கிய மாங்கனி;
புள்ளி கெள்வன. பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன. பங்கயதது அன்னமே.
உருளை, சேனை, கருணை, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, ஆகியவற்றை, நிலத்திலிருந்து தோண்டி எடுத்து உபயோகப்படுத்துகிறோம். கோசலத்தில் இப்படி கிழங்குகளை வயலில் நோண்டுபவர்கள் மண்ணைப் பறிக்கும்போது விலை உயர்ந்த மாமணிகள் அதாவது பலரது விலைமதிப் பான ஆபரணங்கள் கீழே விழுந்தது கூட தெரியாமல் போவார்கள். அவை மண்ணில் புதைந்து கிழங்கு தோண்டும்போது கிடைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம். தோட்டங்களில் நடக்கும்போது தலையில் மொட்டு மொட்டு என்று பெரிய தேன் சுவை மாம்பழங்கள் விழுந்து பரிசாக கிடைக்குமாம்.
65. கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை. கடைசியர்.
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும்-நுளைச்சியர் செவ்வழி.
கொன்றை மரம் குச்சைகளை தேர்ந்தெடுத்து, வளையாத நேரான குச்சிகளை, மூங்கில் கொம்புகளை வெட்டி சீர் படுத்தி, அவற்றில் துளை யிட்டு குழல் செய்வதில் கோசல நாடு ஆசாமிகள் பிரபலம். அதனால் அநேகருக்கு குழல்கள் இசைக்கத் தெரியும். அவர்களது ஏழிசை கீதங்கள் எங்கும் கேட்கும் என்கிறார் கம்பர். முல்லை மல்லி மலர்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றை மாலையாக்கி கம் என்று மணக்க அணிந்து கொள்வார்கள். ஆகவே நறுமணம் நல்ல சுவையான இசை எங்கும் பரவி இருக்கும்.
68. பிறை முகத் தலை. பெட்பின். இரும்பு போழ்.
குறை நறைக கறிக் குப்பை. பருப்பொடு.
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை.
உறைவ- கொட்பின் ஊட்டிடம் தோறெலாம்
கோசலத்தில் ஆங்காங்கே அன்ன சாத்திரங்கள் ஜாஸ்தி. அதில் ஜேஜே என்று கூட்டம். சத்திரம் அனைவருக்கும் சமையல் செய்பவர்கள். சாப்பிட வருவோர், சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்கள், சாப்பிட்டு முடித்து வெளியே செல்பவர்கள் என்று பலவிதமாக மக்கள் காணப்படுவார்கள். ஒருபக்கம் இலைகள் போடப்பட்டு பரிமாறுவார்கள். இன்னொரு பக்கம் சாப்பிட்ட இலைகளை எடுப்பவர்கள். வெளியே கொண்டு கொட்டுபவர்கள். நறுக்கிய சீவிய காய்கறி கள், மலையாக இருக்கும். அரிவாள்மணை சத்தம் கேட்கும். பருப்பு வெல்லம் அரிசி போன்றவை வகை வகையாக பல நிறங்களில் போராக குவிந்திருக்கும் என்கிறார் கம்பர்.
69. கலம் சுரக்கும். நிதியம்; கணக்கு இலா.
நிலம் சுரக்கும். நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும். ஒழுக்கம் -குடிக்கு எலாம்.
சரயு நதிக்கரையில் படகுகள் மரக்கலங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். எல்லா வித பொருள்களையும் கொண்டு சேர்ப்பதை, ஏற்று மதி இறக்குமதி செய்வதை இதனால் அறியலாம். வேளாண்மை சிறந்தோங்கியது. பொன் விளையும் பூமி. சுரங்கங்கள் செல்வத்தை நிரம்ப காட்சி அளிக்கும். எல்லோரும் அன்புடன் பண்புடன் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். ஒற்றுமை ஒழுக்கம் கூடிய வாழ்க்கை வாழும் கோசல மக்கள் நல்வாழ்வுக்கும், நற்பண்புக்கும், ஒழுக்கத்துக் கும் மறுபெயர் என்கிறார் கம்பர்.
70. கூற்றம் இல்லை. ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை. தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்.
ஏற்றம் அல்லது. இழித்தகவு இல்லையே.
எல்லோரும் திருப்தியாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். எவரிடமும் குறையோ குற்றமோ இல்லை. போலீஸ் கிடையாது.கோர்ட் இல்லை. சிறை இல்லை.லஞ்சம் ,திருட்டு, எதுவுமே தெரியாது. யமனுக்கு அங்கே வேலை இல்லை. ஏனென்றால் அற்பாயுளில் எவரும் சாகவில்லை. நீண்டகாலம் சந்தோஷமாக வாழ்ந்து மறைந்தவர்கள் தான் எல்லோருமே. எவரிடமும்
கோபமே காணமுடியாது. சிறந்த இல்லற தர்மம் எல்லோராலும் கடைபிடிக்கப்பட்டது. மேன்மை மிக்க மக்களாகவே அனைவரும் வாழ்ந்தனர்.
72. அகில் இடும் புகை. அட்டில் இடும் புகை.
நகல் இன் ஆலை நறும் புகை. நான்மறை
புகலும் வேல்வியில் பூம்புகையோடு அளாய்.
முகிலின் விம்மி. முயங்கின எங்கணும்.
கோசல நாட்டில் பலவித புகைகளை காணலாம். ஒவ்வொருவர் வீட்டு அடுப்புகளில் இருந்தும் அகில் கட்டைகளை எரிப்பதால் உண்டாகும் மணம் கமழும் புகை. சமையல் அறைகளில் இருந்து சுவையான உணவுகள் தயாரிக்கும்போது மணக்கும் புகை. கரும்பாலைகள் எங்கும் அதிகமாக காண்பதால் அதிலிருந்து வரும் இனிக்கும் புகை. இறைவனை தியானம் செய்து வேதியர்கள் மூட்டும் ஹோம யாகங்களில் நெய்யை ஊற்றி அது தீயில் கலந்து மணக்கும் புகை எங்கும் பரவி மேக கூட்டங்கள் போல் இருக்கும் என்கிறார் கம்பர்.