ராமநவமி பரிசு….நங்கநல்லூர் J K SIVAN
ராம நவமி அருகில் வந்துவிட்டது. மனம் ராமனை எண்ணும்போது தானாகவே ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் க்ரிதிகளும் நினைவுக்கு வருகிறது.
சங்கீத மும்மூர்த்திகள் எவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டும் தனது பாடல்கள் பிரபலமடையவேண்டும் என்ற எண்ணமே கொண்டதில்லை. ஒவ்வொருவரின் பக்தியும் அவருடைய பாடல்களில் வெள்ளமாக பாய்ந்து பாடும், கேட்கும் நம்மை பக்தி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. என்றாலும் மூவரில் அதிகமாக மனம் நாடுவதை தியாகராஜ சுவாமி கீர்த்தனைகளே . அவை தான் அதிகம் பாடப்படுகிறது என்பதற்கு காரணம் என்ன?
தஞ்சாவூர் ஜில்லா திருவாரூரில் தியாகப்ரம்மம் முலக்கநாடு த்ரிலிங்கா தெலுங்கு பேசும் காகர்லா பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். (4.5.1767) . பரம ஏழை உஞ்சவிருத்தி ராம பக்தர். அவரது ஸ்வாஸமே ராம நாமம் தான். அப்பா ராமப்ரம்மம், அம்மா சீதம்மா. சீதம்மா மாயம்மா எனும் வசந்தா ராக MSS பாடிய பாட்டு இதை எழுதும்போது மனதில் ஒலிக்கிறது. தஞ்சாவூர் அரண்மனையில் அப்பா ஆஸ்தான பாடகர். தியாகப்ரம்மத்துக்கு பார்வதம்மா வோடு கல்யாணம் நடநத ஐந்தாவது வருஷத்திலே அவள் மறையவே அவள் சகோதரி கமலம்மாவோடு திருமணம் நடந்தது. குடும்பம் திருவையாற்றுக்கு மாறியது. ஐயாறு பஞ்ச நதிகள் கூடும் இடம். அப்பா ராமாயண உபன்யாசகர், அவரிடம் ராமாயணம், சங்கீதம், சாஸ்திரம் எல்லாம் கற்றுக்கொண்டார். அம்மாவிடம் புரந்தரதாசர், ஜெயதேவர் ராமதாசர் கிருதிகள் எல்லாம் கற்றுக்கொண்டார். வீணை விதவானிடம் வீணை கற்றுக்கொண்டார். மனம் ராமன்மேல் விடாமல் பற்று கொண்டது.ஒருநாளைக்கு ஒண்ணேகால் லக்ஷம் ராமநாமம் சொல்வார். 38வயதுக்குள் 96கோடி ராமநாம ஜபம் பண்ணியவர்.
நாரதரே ஒரு பிராமணராக வந்து ஒரு மூட்டையில் ஸ்வர்ணார்ணவ நூல் சுவடிகளை அளித்தார் என்று சொல்வதுண்டு. சிவன் பார்வதிக்கு சங்கீத மஹிமை ரஹஸ்யங்களை சொல்லிய விவரம் தான் ஸ்வர்ணார்ணவம். தியாகையாவுக்கு ராமனைத்தவிர வேறு நினைவே இல்லை. தியாகராஜஸ்வாமிகள் ஒவ்வொரு கீர்த்தனையிலும் ”ராமா வா வந்து தரிசனம் கொடு. வீட்டுக்கு வா ” எனும் வேண்டுகோள் தான் இருக்கும்.
ஒருநாள் சீதை ராமன் இருவரும் மாறுவேஷத்தில் சாப்பிட வந்தார்கள். சமையல் காரர் வேஷத்தில் வந்த ஹனுமான் தான் இருவருக்கும் வழக்கம்போல் பரிமாறினார். ”நீ தள்ளி இருப்பா, நானே பரிமாறுகிறேன்” என்று ராமரே அதிதிகளுக்கு பரிமாறினார். ஹநுமானுக்கு அதிர்ச்சி. ராமர் ”உன்னை மாதிரி ஐவரும் ஒரு தீவிர பக்தர்” என ஜாடை கட்டி பொறுமையாக இரு என்று தியாகராஜரே பரிமாற அனுமதித்தார்.
24000 கிருதிகளை தியாகராஜர் எழுதினர் என்கிறார்கள் கிடைத்துடன்நவோ 700 மட்டுமே. இதில் தெலுங்கு நாடக கீர்த்தனைகள் ரெண்டு. ப்ரஹ்லாத பக்த விஜயம். நௌக சரித்திரம்.
தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ, ஹிந்தியோ ஸமஸ்க்ரிதமோ , எந்த மொழியானால் என்ன. பக்தி பரவசமான எந்த இசையில் செவி வழியே புகுந்து மனதில் இனிக்கிறது. பக்தி பாவத்துக்கு அர்த்தம் தேவையல்ல
தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனைகளில் ஒரு சிலவற்றையாவது தினமும் ஒவ்வொன்றாக எழுதி அர்த்தம் சொல்லி அந்தப்பாடலையும் சிறந்த வித்வான் ஆணோ பெண்ணோ அற்புதமாக பாடியதோடு அளித்தால் என்ன? என்று இப்போது இதை எழுதும்போது என் மனதில்தோன்றுகிறது. எழுதலாமா? படிப்பீர்களா? என்னோடு சேர்ந்து நீங்களும் ரசித்து பக்தியோடு கேட்பீர்களா?