PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்.   —    நங்கநல்லூர்  J K  SIVAN 
 
”நரசிம்மா..”..
 

”அதிசயம்  நடக்கிறதா  …  சீ  சீ  எல்லாம்  அபத்தம்.  புருடா.  அதிசயமாவது மண்ணாங்கட்டியாவது,  நம்பமாட்டேன்”—  இப்படி  சொல்வதை, சொல்பவர்களை,   முதலில்  நம்பவேண்டாம்.  அதிசயங்கள்  நிச்சயம்  எங்கும் எப்போதும்  நடந்து கொண்டே இருக்கிறது. நாம் தான் உணர்வதில்லை. அதற்குரிய சக்தி இருந்தும் பயன்படுத்துவதில்லை.இது தான் உண்மை.

 
மஹா பெரியவா சம்பந்தமான  எண்ணற்ற அதிசயங்களை நாம் அறிகிறோம்.படிக்கிறோம்.சம்பந்தப் பட்டவர் கள் சொல்கிறார்கள். வேண்டுமென்று யாரும் கயிறு திரித்து  சொல்லவில்லை.
 
இதோ ஒரு சம்பவம்.
மஹா  பெரியவா மேல் அதீத பக்தி கொண்ட ஒரு தம்பதி. ஒவ்வொருநாளும்  அவருக்கு பூஜை செய்யாமல் எந்த காரியமும் நடக்காது அவர்கள் வீட்டில்.  அந்த வீட்டு அம்மாள் கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மஹா பெரியவாளை  தினமும் வேண்டிக்கொள்வார்கள்.  அவர்களுடைய குலதெய்வம்  நரசிம்மர்!
 
ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண்ணின்  தூக்கத்தில் நரசிம்மர்  கனவில் வந்தார்.
”உனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு  என்  பெயரை வை”    — நரசிம்மர்   உத்தரவிடுகிறார்.
அந்த  பெண்  நரசிம்மருக்கு பதிலளித்தாள் 
 “எங்களுக்கு  எல்லாமே காஞ்சி மஹா பெரியவா தான். அவர் தானே  வழி காட்டி. அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்”
ஆனால் நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.
காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.
“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?
அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காக  காஞ்சி புரம் போனார்கள். 
வரிசையில் மெதுவாக  நகர்ந்து மஹா பெரியவா அருகில் நின்றார்கள்.குழந்தையை  அவர் எதிரில் காலடி அருகில் போட்டார்கள். 
 
மஹா பெரியவா குழந்தையைப் பார்த்தவுடன்,   அவர்  முகத்தில் லேசான புன்னகை பிரகாசமாக வெளிப்பட்டது. 
 
 ‘பொதுவா குழந்தை பிறந்த உடனே  பண்ணவேண்டிய சடங்குகளுக்குப் பிறகு தான் அப்புறம்  நாமகரணம் பண்ணுவா ஆனால்  இவன் வயிற்றில் இருக்கும்போதே பகவான் சொன்னபடி அவர்  பெயரை வைச்சிண்டே  தான் பிறந்திருக்கான்.  இல்லையாடா  நரசிம்மா?” 
மஹா பெரியவா குழந்தையைப் பார்த்து இப்படி  கேட்டார். 
 பெற்றோர்களுக்கு   ஆச்சர்யம்,அதிர்ச்சி.  அவர்களின் எண்ணம் போலவே  எப்படி  மஹா பெரியவா  நரசிம்மன் பேரையே வைத்து குழந்தையை அழைத்தார்.  நாம் ஒன்றுமே அவரிடம் நமது  கனவைப்பற்றியோ,குலதெய்வம் நரசிம்மன்பற்றியோ  இன்னும்   பேசவே இல்லையே.  நாம் சொல்லாமலேயே அவரே  எல்லாம் சொல்கிறாரே. அதிசயமா இருக்கே”   பெற்றோர் திகைத்து அவரை வணங்கினார்கள்…
இது தான்  மஹா பெரியவா  அதிசயங்கள்  எண்ணற்றவைகளில்  ஒன்று.. 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *