THE DRIED SANDAL WOOD J K SIVAN

காய்ந்த சந்தனக்கட்டை   –   நங்கநல்லூர்   J K  SIVAN
அர்ஜுனனுக்குகர்ணன் மேல்  ரொம்ப  ஆசையா  அல்லது பாசமா  என்று கேட்கவே தேவையில்லை.  கர்ணன் அவனுக்கு ஜென்ம  எதிரி.    எதிலும்  அவனோடு  போட்டி போடுபவன், தன்  கீர்த்தியை  அபகரிக்க தயாராக  உள்ளவன், தன்னை இகழ்வதில்   இன்பமடைபவன்  என்று தான்  அவனுக்கு தெரியுமே.
க்ரிஷ்ணனோடு  இருக்கும் வேளைகளில்  அடிக்கடி  கிருஷ்ணன்  “அர்ஜுனா, கர்ணனை  போல்  ஒரு  தர்மிஷ்டன்,  தானம் செய்பவன் ஒருவனை நான்  இன்னும்  பார்க்கவில்லை” என்று  சொல்லும்போதெல்லாம்  அர்ஜுனனுக்கு காதில் கொதிக்க காய்ச்சிய  ஈயம் ரெண்டு அவுன்ஸ் உள்ளே போகும்.   இது ஒன்று தான்  அர்ஜுனனுக்கு  கிருஷ்ணனிடம் பிடிக்காது.
ஒருநாள் அவர்கள்சந்திக்கும்போது, பேச்சு வாக்கில்   கர்ணனை பற்றி  கிருஷ்ணன்  “கர்ணன் தானம்  என்று  யாரவது இன்று என்னை தேடி வரமாட்டார்களாஎன்று  ஒவ்வொரு நாளும் காத்திருப்பவன்.  யோசிக்காமல்  கேட்டதை  கொடுக்கும் அவன்  தர்ம தேவதைக்கு  சமானம்” என்றான்.  எப்படி இருக்கும்  அர்ஜுனனுக்கு?
கிருஷ்ணா, இந்த்ரப்ரஸ்தம்  அரண்மனையில்  தர்ம ராஜா ஒவ்வொருநாளும்  எவ்வளவோ  பேருக்கும் தான தர்மம் வாரி வழங்குகிறார். வெறுங்கையோடு வருபவர்கள்  தூக்க முடியாமல்  தமக்கு கிடைத்த  தானங்களை   வண்டி வைத்துக்கூட எடுத்துச் செல்வதை  நீ  பார்த்ததில்லையா ?”
“ஆஹா,  நான்பார்த்திருக்கிறேனே”
“பின் எப்படி கர்ணனின் தானம்  உயர்ந்தது  என்று  சொல்கிறாய்  அடிக்கடி?“………..”“என்ன கிருஷ்ணா பதில் இல்லை. உண்மையை உணர்கிராயோ?””இல்லை.. இப்போது  என்னால்  இது பற்றி  பேச நேரமில்லை.  அர்ஜுனா என்னை  யாரோ  அழைக்கிறார்கள்  நாளை  இதைப்   பற்றி   பேசுவோம்.”    மறுநாள் கிருஷ்ணன் வரும் வரை இதைப்  பற்றியே  முழுதும்  மறந்து போனது அர்ஜுனனுக்கு.மறுநாள்  காலை  கிருஷ்ணன்  அர்ஜுனனிடம் வந்தான்.
“ அர்ஜுனா  இன்று  நாம் இருவரும்  வெளியே போவோம் வா.  நான் சொன்னபடி செய். புறப்பட்டு என்னுடன்.” கிருஷ்ணனோடு  அர்ஜுனன் புறப்பட்டு விட்டான்.அடிக்கடி கிருஷ்ணன் எங்கு சென்றாலும் அர்ஜுனனையும் அழைத்து செல்வது தான்  வழக்கமாச்சே. மூன்று நான்கு நாட்களாகவே  நல்ல மழை.  அன்றும் மழை விடாமல் பெய்தது..
 இந்த்ரப்ரஸ்தத்தில்  வழக்கம் போலவே  ராஜ   தர்பாரில் யுதிஷ்டிரன்  அமர்ந்திருக்க  ஏராளமானோர் வந்து போய்க் கொண்டிருந்தனர் சற்று நேரத்தில் இரு பிராமணர்கள்  யுதிஷ்டிரன் அரண்மனைக்கு  வந்தார்கள். காவலாளிகள்  அவர்களை தர்மனிடம்  அழைத்து செல்ல  யுதிஷ்டிரன்  அவர்களுக்கு  என்ன வேண்டும்  என்று கேட்க  அவர்கள்
“மகாராஜா  நீங்கள்  எங்களுக்கு  உதவி  தர்மம்  அளிக்க தகுதியானவர்.  ரெண்டு  நாளாக விடாத  மழை அல்லவா?  நாங்கள் இன்னும்  இரண்டு நாளில் ஒரு யாகம் செய்து ஹோமத்தில்  நிறைய ஹவிர்பாகம் அளித்து தேவர்களை ப்ரீதி  பண்ண வேண்டும்.  காய்ந்த சந்தனக் கட்டைகள்  நிறைய தேவை..தந்து உதவவேண்டும்.”
யுதிஷ்டிரன் ஆட்களை  நாடெங்கும்  அனுப்பி  சந்தன கட்டை சேகரிக்க  அனுப்பினான் பிராமணர்கள்  காத்திருந்தனர். சிறிது நேரத்தில் செய்தி வந்து விட்டது. எங்கும்சந்தனக்கட்டை இல்லை. இருக்கும்  சந்தன கோட்டைகளும் மழையில் நன்றாக நனைந்து ஈரமாகவே உள்ளன.”
ஆட்கள் சொல்லுவதை கேட்டுக்கொண்டிருந்த  யுதிஷ்டிரன்  பிராமணர்களை  நோக்கி வேறு ஏதாவது  காய்ந்த  கட்டைகள்  தரவா?  என்று கேட்டார்.
”வேண்டுமென்றால்  மீண்டும் வருகிறோம் ” என்று சொல்லி பிராமணர்கள்  நகர்ந்து விட்டார்கள்..
பிராமணர்கள்  என்ன செய்வது என்று  புரியாமல்  யோசித்து நடந்துகொண்டிருக்கும்போது  கர்ணன்  மாளிகையை கடந்தனர்.
“ஓ, கர்ணனைக்  கேட்டால்  எதாவது செய்வாரா  பார்க்கலாம்”  என்று  கர்ணன் மாளிகையில்  நுழைந்தனர்.  கர்ணன்  இருந்தான். அவர்கள்  யாசிப்பது  என்ன  என்று தெரிந்துகொண்டான். அவனும்  ஆளனுப்பி  எங்கெங்கோ தேடியும்  சந்தன கட்டைகள்  கிடைக்க வில்லை.செய்தி  ஏற்கனவே  கேட்ட செய்தியாச்சே.பிராமணர்கள் முகம் வாட ஆரம்பித்தது. ஆனால்  கர்ணனுக்கோ  முகம்  வாடவில்லை. மிக்க  மகிழ்ச்சியுடன்  எழுந்தான்  தனது வாளையும்  கோடாலியையும்    எடுத்தான். தனது  மாளிகையில் இருந்த  சந்தனக்கட்டையால் செய்த சாளரங்கள்,கதவுகள்,  சம்ப்ரமஞ்ச  கட்டில்கள்  எல்லாவற்றையும் உடைத்தான்  நிறைய  வாரி கட்டி கொணர்ந்தான். “இவை நன்றாக  காய்ந்து  இருக்கும்  சந்தன கட்டைகள். உங்களுக்கு உதவும். இது போதுமா இன்னும்  தரவா?”  என்றான்.    “பிரபு, இதுபோதுமானது. பிராமணர்கள்  மிக்க சந்தோஷத்தோடு அவனை வாழ்த்திவிட்டு சந்தனகட்டைகளோடு  சென்றனர்,   பிராமணர்கள் இந்த்ரப்ரஸ்தம் திரும்பியபோது  கிருஷ்ணன் மற்றொரு பிராமணனாக  பிரமித்துபோயிருந்த  அர்ஜுனனிடம்  ”அர்ஜுனா, நேற்று நீ கேட்ட கேள்விக்கு நான் ஏதாவதுவிளக்கம் கொடுக்கவேண்டுமா  அல்லது நீயே   புரிந்து கொண்டாயா”   என்று கேட்டபோது அர்ஜுனன் மௌனம் காத்தான்.  “இது போன்ற தான  தர்மிஷ்டன் அரிதானவன்” என்று  அவன்  மனம்  திரும்ப  திரும்ப அவனுக்கு வலியுறுத்திகொண்டிருந்ததோ என்னவோ”.      

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *