SILENT CONVERSATION J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மௌன சம்பாஷணை
‘சும்மா இருடா ” என்று அடிக்கடி ஒரு வார்த்தையை உபயோகிக்கிறோமே , நம்மால் ஒரு அரைமணி நேரம் பேசாமல் சும்மா இருக்க முடிகிறதா? முடியுமா? மௌனம் தான் சிறந்த சம்பாஷணை என்பது எப்படி சரியாகும்?. பேசினாதானே ஒரு த்தர் சொல்றது இன்னொருத்தருக்கு தெரியும், புரியும்? என்று கேட்டார் பால் ப்ரண்டன்.
ரமண மகரிஷி பதில் சொல்கிறார்:
‘ உன் கேள்வியை நீயே கொஞ்சம் யோசித்துவிட்டு கேள்.ஆறவிவு மனிதனை விட அறிவில் குறைந்தவை என்று நாம் சொல்லும் மிருகங்களும், பட்சிகளும், ஜீவராசிகளும் பேச்சு இல்லாமல் தானே தத்தம் உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்கின்றன.இதே பால் ப்ரண்டன் தான் பகவான் ரமணரிடம் நிறைய கேள்விகளைக் கேட்க பால் பிரண்டன் ஒரு நோட்டு பூரா எழுதிக்கொண்டு வந்தார். அவர் எதிரில் அமர்ந்து அவர் பார்வையில் மௌனமாக சில மணி நேரங்கள் அமர்ந்து விட்டு பிறகு எழுந்து போகும்போது அருகில் இருந்த நண்பர் S V வேங்கடரமணி என்ன கேட்டார்?
”என்ன ப்ரண்டன், பகவானை எதோ கேள்விகள் கேட்க வேண்டும் என்றீர்களே. அவர் இன்னும் கொஞ்சம் நேரத்தில் சென்று விடுவாரே அதற்குள் கேட்டுவிடுங்கள்”
‘தேவையில்லை ரமணி, நான் கேட்க வந்த கேள்விகளுக்கு எல்லாம் எனக்கு சரியான விடை விட்டது. கேட்க இனி ஒன்று மில்லை” என்றார் பால் ப்ரண்டன்.
மனம் பேசி விட்டால் வாய்க்கு வேலை இல்லை. மனம் கொள்ளை கொள்ளையாக பேசும் சக்தி கொண்டது.இங்கிருந்தே எங்கோ வெளி நாட்டில் இருப்பவரிடம் நம்மால் பேச முடியும். டெலிபோனிலோ, sms இலோ, chat டிலோ, கடிதத்திலோ இல்லை, வாயே திறக்காமல் , மனத்தால் பேச முடியும். பேச்சினால் மற்றவரை வெற்றி கொள்ளலாம். மௌனத்தால் தன்னையே கூட வெற்றி கொள்ள முடியும். எதிராளிக்கு அது பேசாமலேயே தெரியும் புரியும். டெலிபதி என்று அதற்கு பெயர்.
கல்லால மரத்தினடியில் பரமேஸ்வரன் தென் திசை நோக்கி அமர்ந்து தக்ஷிணா மூர்த்தி மௌன குருவாக சனகாதி முனிவர்களுக்கு ஞானம் உபதேசித் தது பேசாமலே தான். குரு தக்ஷிணாமூர்த்தி என்று அவருக்கு பெயர். அவருக்கு சுண்டல் மாலை போட்டு மஞ்சள் வஸ்த்ரம் சார்த்தி, குரு என்று ஒன்பது நவகிரஹங்களில் ஒன்றாக வேஷம் போட்டு நிற்க வைப்பவர்கள் நாம். மௌன குரு வேறே நவகிரஹ குரு வியாழன் என்கிற ப்ரஹஸ்பதி வேறே.
பேச்சு மானுடம், மௌனம் தெய்வீகம். வாய் மூலம் பேசும்போது மற்ற ஜீவராசிகள் கேட்கின்றன. மௌனத்தில் பேசும் போது பகவானே கேட்டு பதில் சொல்கிறான். மௌனத்தில் தான் மனம் ஆனந்திக்கிறது. தியானம் மௌனத்தில் அழகு, முழுமை பெறுகிறது.
மஹா பெரியவா அடிக்கடி மௌன விரதம் இருப்பவர்.
ஒரு நாள் பூஜை முடிந்து பிக்ஷாவந்தனமும் ஆயிற்று. வந்தவர்களுக்கு பிரசாதமும் .நிறைய பேர் பெரியவாளின் தரிசனத் துக்கு காத்திருந்தார்கள். இது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் நடந்த விஷயம்.
அருகில் இருக்கும் ஒருவரை திடீரென்று பெரியவா அழைத்தார்
‘எனக்கு திருவண்ணாமலை விசிறி சுவாமிகளை பார்க்கணும். நீ இப்பவே கிளம்பி பகவான் யோகி ராம்சுரத்குமாரை தெரியுமோல்லியோ, அவர் கிட்டே போ. நான் அவரைப் பாக்கணும்னு கூப்பிட்டேன் னு சொல்லி, முடிஞ்சா, கையோடு அழைச்சுண்டு வா ”.
அம்பு மாதிரி பறந்த அந்த அணுக்க தொண்டர் திருவண்ணாமலைக்கு சென்று யோகிஜியின் முன்பு நின்றார். சேதி சொன்னார். யோகி ராம் சூரத் குமாருக்கு ரொம்ப சந்தோஷம்.
‘இதோ, இப்பவே உங்க கூட உடனே வரேன். காஞ்சிபுரம் போகலாம்”
யோகி வந்தார். பெரியவாவும் யோகியும் எதிர் எதிரே அமர்ந்து ரெண்டு பெரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தாலும் ஒருத்தரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
நேரம் நழுவியது. சில மணிகள் ஓடின. திடீரென்று பெரியவா சிரித்துக்கொண்டே ”இந்தா இங்கே வா” என்று அணுக்க தொண்டரை அழைத்தார்.
”நீ எதுக்கு இவரை அழைச்சுண்டு வந்தியோ அந்த காரியம் முடிஞ்சுது. அவரை ஜாக்ரதையா வண்டிலே அழைச்சிண்டு திருவண்ணாமலையிலே கொண்டு விட்டுட்டு வா”
அப்போது அங்கே இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்தர்களுக்கு ஆச்சர்யம்.
”என்னது இது. இவர்கள் இரண்டு பேரும் ஒருவரை யொருவர் பார்ப்பதற்கா இவ்வளவு தூரம் பிரயாணம் செய் து யோகி வந்தார்? ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையே ”.
சில காலம் கழித்து இப்படி அதிசயித்தவர்களில் ஒருவர், யோகி ராம் சுரத் குமாரை திருவண்ணாமலையில் தரிசனம் செய்த போது ” சுவாமி அன்று காஞ்சி மடத்தில் என்ன நடந்தது. தாங்கள் ஒன்றுமே பெரியவாளுடன் பேசவில்லையே. அவரும் வாயைத் திறக்கவில்லையே. இருந்த போதிலும் பெரியவா ”காரியம் முடிஞ்சுது”என்று எதற்கு சொன்னார்?’ என கேட்டார் .
சிரித்துக்கொண்டே யோகி என்ன சொன்னார்?
”பேசவில்லை என்று யார் சொன்னது? நாங்கள் இருவருமே மனதால் விஷயங்களை பரிமாறிக்கொண்டோம்.
பெரியவா என்னிடம் ‘ ஆத்ம போதேந்திரா, இந்த மடத்திற்கு ஒருகாலத்திலே பீடாதிபதியா இருந்தவர். தனது வாழ்நாள் முழுதும் ராம நாமம் ஜபிச்சவர். பீடாதிபதியா இருந்தாலும் எங்கும் சென்று ராம நாமாவை எல்லோருக்கும் உபதேசம் பண்ணினார். அவர் கிட்டே ஜாதி வித்யாசம் எல்லாம் எப்பவும் என்னிக்குமே இருந்ததில்லே. ராம நாமா ஒண்ணு தான் இந்த கலியுகத்தில் நமக்கு ஒரே விடிமோக்ஷ கதி. இப்படியே ராம நாம ஜபத்தாலே அவர் உடம்பு தானாகவே ஒரு ”சித்த சரீரமாக” ஆயிடுத்து. காவேரிக்கரையிலே கோவிந்தபுரத்திலே முன்னூறு வருஷமா இன்னும் ”ஜீவ சமாதிலே இருக்கார். எப்பவும் ராம நாம ஜெபத்திலே தான் இருக்கார். நீங்க கோவிந்தபுரம் போகணும். போதேந்திராளுடன் இருக்கணும்”என்று உணர்த்தினார்.
அதுக்கு நான் ”இல்லை இல்லை, இந்த பிச்சைக்காரன் திருவண்ணாமலையே கதி, அதுவே போதும் என்று இருக்கிறவன்’ என்று சொன்னேன்.
பெரியவா யோசிச்சார் அப்பறம் ”அப்படின்னா சரி” என்றார்.
இது தான் நாங்க ரெண்டு பெரும் பேசியது என்றார் யோகி.
உங்க கிட்டே சொன்னது சாராம்சம். இதுக்கு நடுவிலே அவர் எத்தனையோ உபநிஷத விஷயங்களை சொன்னார் நான் கேட்டுண்டே இருந்தேன். என் மனதில் இருந்த சந்தேகங்களை எல்லாம் ஒண்ணு ஒண்ணாக நிவர்த்தி பண்ணினார்” என்றார் யோகி.
மௌன சம்பாஷணையின் வேகம், சக்தி புரிகிறதா?? ஆனால் நம்மைப்பொறுத்தவரை எல்லோரிடமும் நிறைய பேசினால் CHATTERBOX , வாயாடி, வம்புக்காரி, வம்புக்கு அலைபவன் என்று பட்டம். பேசாமல் இருத்தால்,திமிர், உம்மணா மூஞ்சி, ஜடம், என்று விருது, பட்டம். பேசினால் வாயாலே கெட்டான், வாயிலே அவனுக்கு சனி என்று பேர் வேறு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *