PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

குலதெய்வத்தின் அருள் வேண்டும். 

மஹா பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த சமயம்.   ஏதாவது ஊரில்  போய்  தங்குவார்.  அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவாளை  மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார்.

 அந்த விவசாயியின் முகத்தில்  துளியும் உற்சாகம் இல்லை. இருளடைந்து இருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைப் பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின்  கஷ்டம், துன்பம்   மஹா பெரியவாளுக்கு  தெரிந்து விட்டது. இருந்தும் அந்த விவசாயி  அருகில் வந்தபோது

” சாமீ … ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்குங்க.  . பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக் கலாமா ன்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்குங்க ” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

“’உன் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?”\

குலதெய்வமா.. அப்படின்னா என்னாங்க சாமி ?”‘
 ”சரிதான் …. உங்க குலதெய்வம் எதுன்னே  உனக்குத் தெரியாதா?”
”ஆமாம் சாமி .. வியாபார விஷயமா எங்க முன்னோர்
கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லிங்க.   அவங்க பிள்ளைகளும்  அப்படியே வளந்துட்டாங்க. நாங்கள் ளாம் அந்த வழில வந்தவங்கதான்  சாமி ” 

”உன் முன்னோர்கள், பெரியவங்க  யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”
”ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழித் தாத்தா அவர்”

“அவர்  கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு வா”

”ஏன் சாமீ …. அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாத் தான் என் பிரச்சனை தீருமா?”
”அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”
” ஏன்  சாமி . ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லீங்களா?”
“நான் அப்படிச்சொல்லவே இல்லை யே!”
”அப்ப இந்த சாமில ஒண்ணக் கும்பிடச்சொல்லாம, குல தெய்வத்த தெரிஞ்சிட்டு வான்னு  சொல்றீங்களே!”

”காரணமாத்தான் சொல்றேன்.ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ் வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான்.எனக்குப் பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம் தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தா தானே எதையும் அதுலே போட்டு வைக்க முடியும்?
அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப்போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா.. போகாதா?

”சாமி அப்போ குலதெய்வம்தான் பாத்திரமா … அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?

”நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” 

விவசாயி   தலையாட்டி வணங்கிவிட்டு  சென்று விட்டார். .
ஒரு பத்துநாள் கழித்து விவசாயி  திருவந்தார்

”சாமீ! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் ‘பேச்சாயி’  ங்கற ஒரு அம்மன். அதோடக் கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சிபோய் கிடந்தது. யாருமே போகாம விட்டதால, கோயில் புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய்ப் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடுகல் தான் ’பேச்சாயி!’ ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு தான் வரோம் இங்கே ” .  

”சபாஷ் .. அந்தக்கோயிலை நல்லபடியா எடுத்துக்   கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக் கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

”சாமீ! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங் களே … எதுவுமே சொல்லலியே?”
”அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல் றேன். நான் சொன்னதை மறந்துடாதே .. பேச்சாயியை விட்டுடாதே!”

விவசாயி  வணங்கிவிட்டு  போய்விட்டார்.  பெரியவா சொன்னபடியே  பக்தியோடு  கைங்கர்யம் பண்ணி னார். ஒரு வருடமும் ஓடியது.  ஒருநாள் மீண்டும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்தமுறை அவரிடம் ஓர் செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார்.  அவரை  மஹா பெரியவா ஏற இறங்க பார்த்தார்.

“சாமீ ! இப்போ நான் நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்தில பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க … இந்த அதிசயம் எப்படி நடந்ததுங்க  அதைச் சொல் லுங்க?

”ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்கார
விவசாயி யிடம்  ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாக அனைவருமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். அதன் சாராம்சம்: 

’’நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்  தான்  நமது குலதெய்வமாகும்.
முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான்.
ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தந்தை வழிப் பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் “கோத்திரம்” என்னும் ஒரு ரிஷியின் வழி வழிப்பாதை.
பிற கோத்ரத்திலிருந்து பெண்கள் வந்து இந்த வழி வழிப்பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரை யானது சங்கிலித் தொடர்போல்  அறுபடாமல், ஒரே சகோதரத் துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்யமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே  நக்ஷத்திரம் வேறாக,உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும்.

அதுதான் இயற்கையும் கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி  இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி  நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல் பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகில் ஆயிரம் கோயில்கள் இருக்கலாம். அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம். போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆனால் குல  தெய்வக்கோயில்களுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு  செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம்.    இதன்படிப் பார்த்தால், குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை  வேறு எங்காவது, எந்த விதத்திலா வது உருவாக்க முடியுமா?”  

”அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்  பிறப்பதற்கு முன்
 இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக் கூடத் தெரியாமல், அதிக பக்ஷம்  ரெண்டு  தாத்தா பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமலேயே  நமது  வாழ்க்கை உள்ளது. ஒரு குடும்பத்தைப்  பொறுத்தவரையில் அந்த பகவான் சக்தி  குல தெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்பட  நம்  முன்னோர்களால்  வகை செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்….   நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி ! மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.இந்த  வம்சா வழிப்போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப்  புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.  இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம்  அங்கே   போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப் படும் அந்த இறைசக்தியைத் தொழும்போது, அவர் களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து  பார்க்கிறார் கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். ”பெரியவர் விளக்கிச் சொன்னதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் மெய்  சிலிர்த்
துப் போனார்கள் .

”இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் இருக்கிறது.  சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அல்லது, பல்வேறு காரணங் களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத  கடவுளை நான்  நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று அவர் வீராப்பாகப்  பேசி, நாத்திகத்தில் நம்பிக் கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தா லும் பெரிதாய் தோஷ மில்லை.

அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும்
  முன்பே,  பரம்பரை   பரம்பரையாக  முன்னோர்களால்  வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிரு ப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள்  தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.  

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய்விடுவார் களே என்று ஒரு கேள்வி எழலாம்.

பெரும்பாலும் ஒருவழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வரவே வராது  என்பதுதான் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவது போல,
மனதுக்கு   பகவான் அருளால் சக்தி ஏற்படுகிறது”.
ஒரு குலதெய்வத்தின் பின்னால். இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளன. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங் களுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.  ஆகவே  நம்  வாழ்வும் சுபிக்ஷம் பெறுகிறது  மேலே சொன்ன  பர்மாக்கார  விவசாயி  விஷயத்திலும்  அது தான் நிகழ்ந்தது.

எனக்கும் குல தெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தை மனதுக்குத் தந்தது. நான் எங்க குலதெய்வக் கோயிலான தஞ்சாவூர் புன்னைநல்லூர்  மாரியம்மன் கோவிலுக்குச் சென்றபோது  எண்ணி அறியாமல்  ஒரு  அதிர்வு என்னுள்ளே  ஏற்பட்டதை  உணர்ந்தேன். கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும் போது, என்  பாட்டன்  முப்பாட்டன் தொட்ட தூண் …. என் முன்னோர்கள் நின்று  மூச்சு விட்ட சந்நிதி  அவர்கள் விழுந்து  நமஸ்கரித்த  தரை . அவர்களைப் பார்த்து அருள் புரிந்த  அம்பாள்  என்னையும் பார்க்கிறாள் , அவள் அருள் எனக்கும் உண்டு  என்ற பெருமிதம் மனதில்  உருவானது. அவர்கள் பாரத்தை தாயை  நானும் பார்க்க  கொடுத்து வைத்தவன்  என்ற   பெருமை யா? ஒன்று உறுதி, அம்பாள்  வம்சத்தை வழிநடத்து வாள்  இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன் னோர் கள் மேல் நாம் வைக்கும்  பெரும்  மரியாதையை  அதிகரிக்கச் செய்கிறது இல்லையா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *