மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN
கம்பரசம்பேட்டை (புதுக்குடி) நடராஜ சர்மா
என் வாழ்வில் முதலாவதாக கம்பரசம்பேட்டைக்கு சென்றது 10.1.24 முதல் 12.1.24 வரை மூன்று நாட்கள். காவேரிக்கரை ஊர். அந்த ஊரில் புதுக்குடி நடராஜ சர்மா என்ற மஹா பெரியவா பக்தர் குடும்பம் வாழ்ந்தது. சர்மா திருச்சி பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் சமஸ்க்ரித பண்டிதர். அவரது புதல்வர்கள் P N . பரசுராமன், P N சங்கரராமன் P N ஜெயராமன் ஆகியோர் என் நண்பர் ராதாகிருஷ்ணனின் கம்பரசம் பேட்டை பால்ய நண்பர்கள். ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு அருகே வசித்தவர்கள்.
சர்மாவின் புதல்வர்கள் அப்பா நடராஜ சர்மாவின் மஹா பெரியவா நெருக்கத்தைப் பற்றி பல கட்டுரை கள் எழுதியுள்ளார்கள். அதில் ஒன்றை இன்று நான் படித்தேன். நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து அரை நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது.
திருச்சியில் காவிரி வடகரை கிராமம் ஒன்றின் பெயர் நத்தம் கிராமம். ஒரு முறை மஹா பெரியவா அங்கே முகாம் இருந்தார். எண்ணற்ற பக்தர்கள் குழுமி விட்டார் கள். மஹாபெரியாளின் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க நடராஜ சர்மா சென்றார். பள்ளிக்கூடம் மூன்று நாள் விடுமுறை முறை. ஆகவே வெள்ளிக் கிழமை ராத்திரியே நத்தம் சென்று பெரியவா பூஜை முடியும் வரை பார்த்தார். சர்மாவை எவருக்கும் தெரியாததால் யாரும் உபசரிக்கவில்லை. மகா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா. அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியேதான் கழிந்தன! பூஜைகளையும், ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். கொலை பட்டினி.
மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் மஹா பெரியவாளிடம் பிரசாதம் பெற அருகே சென்றார்.
‘‘ பெரியவா, நான் ஊருக்குப் போய்ட்டு வரேன் ’’
நிமிர்ந்து பார்த்தார் மஹா பெரியவா, ‘
‘ நீ முதல்லே பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துண்டு போய் , நிதானமா சாப்பிட்டப்புறம் வா. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்!’
‘ஊருக்குப் போய் வருகிறேன்’ ன்னு என்று ஒரு மரியா தை நிமித்தம் சொன்ன தற்கு ‘முதல்ல சாப்பிட்டு வா’ என்கிறாரே ஸ்வாமி கள்?! சர்மாவுக்கு பிரமிப்பு.
‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் மஹா பெரியவா சர்மாவை அழைத்தார்.
‘ நீ யார், உங்கப்பா பூர்வோத்தரம் எல்லாம் சொல்லு?
”’நா நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் ஸ்கூல்லே சமஸ்க்ரித பண்டிட். அப்பா லால்குடி தாலூகாவிலே புதுக்குடி சீனிவாச ஜோசியர் பிள்ளை வழி.”
பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை பெரியவாளுக்கு தெரியும் என்பதால் சில பழைய அரிய விஷயங்கள் சொன்னார்:‘
”‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதி ஷத் தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர், ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி, ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப்பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன், தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் சபைக்கு வரும்படி அறிவித்தார். பல ஜோசியர்கள் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து,
‘உங்களுக்கெல்லாம் இன்று நவாப் ஒரு போட்டி வைக்கப் போகிறார். இன்னிக்கு நம் நவாப், கோட்டை யில் இருந்து எந்த வழியாக வெளியேறி, வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத் தர வேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப் படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை பண்ணப்போறார்”!’
எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக் குள் போட்டுக் கொடுத்தார்கள்.
அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை. மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயி லுக் கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி, மேற்குத் திசை யில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு, வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக் கோட் டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு, கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக் கு வந்து விட்டார். வேட்டையாட போகவே இல்லை. நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின், ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப் பட்டு பிரிக்கப்பட்டு ஓலைகள் ஒவ்வொன்றா க படித்தார்.
”உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒண்ணுலே மட்டும் தான் துல்லியமா நவாப்பின் நடவடிக்கையை அப்படியே எழுதியிருந்தது. நவாப் ஆச்சரியத்தில் மூழ்கினார். உன் தாத்தாவின் ஓலை யை படிச்சு காட்டினார். கச்சேரில இருந்த அத்தனை பேரும் பிரமிச்சுப் போயிட்டா. அப்புறம் நவாப், உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார். உங்க தாத்தா அந்த 80 ஏக்கர் நிலம், மலைக் கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடு கள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங் களுக்கே செலவு பண்ணினார்’’
சர்மாவுக்கு மஹா ஸ்வாமிகள் சொன்ன விஷயம் ஆச்சர்யம் தாங்க முடியலே. கண்லே ஆனந்த பாஷ்பம். நமஸ்காரம் பண்ணினார். மஹா பெரியவா சர்மா வுக்கு பிரசாதம் தந்து ஆசிர்வதித்தார். சர்மா இந்த சம்பவத்தை வாழ்நாள் பூரா மறக்கவே இல்லை. பிள்ளைகள் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.