RASA AASWATHA THARANGINI (RASA NISHYANDHINI) J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி –    நங்கநல்லூர்   J K  SIVAN
ஸ்ரீ C’  சுந்தரராமமூர்த்தி. 

ரஸ நிஷ்யந்தினி  என்ற  அற்புதமான  பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகலின் உபன்யாச  துளிகளை, ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி  ஆங்கிலத்தில்  ரஸ  ஆஸ்வாத  தரங்கிணி என்று  ஆங்கிலத்தில்  எழுதி அந்த  புத்தகத்தின் பிரதியை எனக்கு பிரத்யேகமாக  அவர் மகன் மூலம்  பரிசளித்தார்.  அற்புதமான  இந்த  நூல் விஷயங்களை  நான் ரசித்து சுருக்கமாக  உங்களுக்கும் சொல்ல விருப்பம்.கம்பீர ராஜரிஷி. கௌசிகன் என்கிற விஸ்வாமித்ரர் வருகை அயோத்தியில் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தந்தது. தசரதன்அளித்த சகல வித உபசாரங்களையும் பெற்று விஸ்வாமித்ரர் மெதுவாக பேச்சை ஆரம்பிக்கிறார்.
”தசரதா, உன்னை பார்க்க எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியுமா ?
”தாங்கள் அடியேனைப் பார்க்க விரும்பினது தெரிந்தால் நானே உங்களிடம் ஓடி வந்திருப்பேனே மஹரிஷி.
”இல்லை உன்னிடம் ஒரு விஷயம் பேச வந்தேன். அதற்காக  உன்னைத்தேடி  நானே  வந்தேன்”
”தங்கள் சித்தம் என் பாக்யம் மகரிஷி  கட்டளையிடுங்கள்  உடனே  அதை நிறைவேற்ற காத்திருக்கிறேன் ”
”தசரதா,  நான் காட்டில் ஒரு யாகம் நடத்தப்போகிறேன். சில ரிஷிகளும் என்னோடு அதில் பங்கு கொள்கி றார்கள். அந்த வனத்தில் சில ராக்ஷஸர்கள் நடமாட்டம் அதிகம், அவர்கள்  ரிஷிகளின் யாகத்தை  நிறைவேற்றவிடாமல்  கெடுக்க முயல்பவர்கள்.”
”ஓ அப்படியா, நான் உங்களோடு  வரட்டுமா?”சிரிக்கிறார்  விஸ்வாமித்ரர். ”குருநாதா  என்  சேனையை உங்களோடு அனுப்பட்டுமா ”மீண்டும் ரிக்கிறார் விஸ்வாமித்ரர்”தசரதா , நீ பேசுவது குழந்தைப் பேச்சு. உன் மகன் ராமனை என்னோடு அனுப்பு அது போதும்”
”மகரிஷி …. மகரிஷி…”
”என்ன தயங்குகிறாய் தசரதா.”
” மகரிஷி ராமனும் லக்ஷ்மணனும் சிறுவர்கள் பதினாறு வயது கூட ஆகாத பாலகர்கள். எவ்வாறு அவர்கள் பயங்கர ராக்ஷஸர்களை சமாளிக்கமுடியும். அவர்களுக்கு பதில் நானே உங்களோடு வருகிறேன்.”
விஸ்வாமித்ரர் நினைத்ததை முடிப்பவர்.
” தசரதா , உன்னால் முடியாததை உன் மகன் ஒருவனே முடிப்பவன். நீ அவனையே என்னோடு தயங்காமல் அனுப்பு.”
கலங்கிய தடுமாறிய தசரதனுக்கு வியர்த்துக் கொட்டியது தசரதன் சுற்று முற்றும் நீரில் மூழ்கியவன் உதவியை எதிர்பார்ப்பது போல் பார்க்கும்போது அவனுக்கு வசிஷ்டர் அருகே இருந்து தெம்பு கொடுக்கிறார்.
”தசரதா, கொஞ்சமும் யோசிக்காதே, உன் மகன்கள் ராமனையும் லக்ஷ்மணனையும் விஸ்வாமித்ர ரிஷியோடு அனுப்பு, அவர் உன்னைவிட ஜாக்கிரதையாக அவர்களைப்  பார்த்துக் கொள்வார்” என்று ஊக்கமளிக்கிறார்.
அப்போது நிலைமையை புரிந்து கொண்ட விஸ்வாமித்ரர் தசரதனுக்கு ராமன் யார் என்பதை எடுத்துரைக்கிறார்.
”தசரதா, ”என்” மகன் என் மகன் என்று  மூச்சுக்கு  முன்னூறு  தரம்  நீ சொல்லும்  உன்  மகன் ராமன் யார் என்று உனக்கு முதலில் தெரியுமா?  அவன்  உன் மகன்  என்ற அளவுக்கு தானே அவனைப் பற்றி உனக்கு தெரியும். ”அஹம்  வேத்மி”  அவன்  உண்மையில் யார்  என்று எனக்கு தெரியும். அவன் ஜகத் பிதா. இந்த பிரபஞ்சத்துக்கு ”அப்பன்” என்பது எனக்கு தெரியும்.உனக்குத் தெரியாது. 

நீ அவனை ” சிறு வயது” குழந்தையாக, சிறுவனாக பார்க்கிறாய். எனக்கு அவன் காலமே காணமுடியாத அனாதி பரமன் என்று தெரியும். அவனுக்கு வயதெது? வயதேது?’   ‘ம”  என்பது சிவ மந்த்ரம்.  ஓம்  நமசிவாய என்பதில் வருவது.  ”ரா”  என்பது மாதவ மந்த்ரம். ஓம்  நமோ நாராயணாய  என்பதில் அடங்குவது.  சகலமும் சர்வமும் அவனிலேதோண்றி  அவனிடத்தில்  மீண்டும்  அடைபவை என்று எனக்குத் தெரியும்”

”உன் பிரார்த்தனையால் யோகத்தால், வேண்டுதலால் விரதத்தால் பிறந்த மகன் ராமன் என்று தான் நீ நினைக்கிறாய், தசரதா, எனக்கு அவன் இந்திராதி தேவர்களின் பிரார்த்தனையால் , அவர்கள் தவத்தால், மஹான்கள், யோகிகள் வேண்டுதலால், அவனே அவ்வாறு விரும்பியதால் உனக்கு மகனாக பிறந்தவன் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

”ஏதோ கௌசலையிடம் பால் குடித்து, போஷாக்குடன் உணவளிக்கப்பட்டு வளர்ந்தவன் உன் மகன் ராமன் என்று நீ நினைக்கிறாய். எண்ணற்ற முன்னோர்கள் விரதமிருந்ததன் தவப்பயனாக, தேவர்களின் யாக பலனாக, விரத பயனாக பிறந்தவன் ராமன் என்பது எனக்கு தெரியும்.

”கோசலையின் மணி வயிற்றில் ராமன் பிறந்ததாக நீ எண்ணுகிறாய். அவள் கருவில் அவள் சுமந்தது இந்த பிரபஞ்ச ஜீவன்களை எல்லாம் ” என்று நீ அறிவாயா ?
நான் மேலே சொன்னது ஒரு நூறு வயசு அற்புத நூலிலிருந்து .
”ரஸ நிஷ்யந்தினி” என்ற ராமாவதார 100 காரணங்களை ”அஹம் வேத்மி” என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்.கொஞ்சம் கொஞ்சமாக   இந்த அற்புத நூலுக்குள்  செல்வோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *