PRASNOTHRA RATHNA MALIKA – 291-310 J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை   –  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்  

பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா   291-310

291.  எவன் அழிவது உறுதி?
பிறரை ஏமாற்றுபவன்
292.  எவனது செயல்கள்  பயனளிப்பவை?
நற்குணமும்  இரக்க குணமும்  அன்பும் உடையவன் செயல்கள்.
293,  எவன்  தற்கொலை செய்து கொள்பவன்?
தனது ஸ்வதர்மத்தை மறந்து, கடமைகளிலிருந்து தவறுபவன்,
294.  உழைப்பின் பலனைக் கண்டு மகிழ்பவன் யார்?உழவன்
295.  எவராலும் முடியாதது என்ன?
எப்போதும்  மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.
296. எவன் ராஜா?
எல்லோரையும் சந்தோஷப்படுத் துபவன்.
297. உண்டா  இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாதது எது?
மனதை மயக்கும் மாயை.
298.  குடும்பம் அழிவதற்கு காரணம் எது?
பெரியோர் நல்லோர்  மனதை புண்படுத்தும் செயல்கள்
299. மனிதனின் முதல் எதிரி யார்?
சோம்பேறித்தனம்.
300. எது சுகமான உன்னதமான  வாழ்க்கை?
தவறுகள் இல்லாத  நேர்மையான  வாழ்க்கை
301. எது துயரமானது?
உலகில் வாழ்பவரின்  அறியாமை, மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்து முட்டாளாக வாழ்வது.
302.  மனிதனுக்கு எது அழகூட்டும்?
அவனது பொறுமை, நற்குணம்.
303.  எது ஒருவனுக்கு  பலம் தரும்?
அவனது அசராத  கடவுள் நம்பிக்கை, பக்தி.
304.  யார்  செல்வந்தன்?
இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்பவன்.
305. எது உண்மையில் அஞ்ஞானம்?
ஆத்மா இருப்பதையே  அறியாமல் இருப்பது.
306. எது கண்கட்டு வித்தை?
உலகம், அதில் வாழும் வாழ்க்கை.
307. பிறப்புக்கு  ஆதாரம் எது?
மேலும் மேலும் நாம் தேடும்  பற்றுக்கள்.
308. எது முக்தி, மோக்ஷம் எனப்படும்?
அஞ்ஞானத்தின் முடிவு, அழிவு.  அறியாமையின்  விலகல்.
309.எது கண்முன்னே  இரவும் பகலும்  தோன்றினாலும் நாம் உணராதது?
வாழ்க்கையின் அநித்தியம், மாற்றம்.
310. எது மனிதனை சித்ரவதை செயகிறது. தவிக்கி றான்?
எதற்கெடுத்தாலும்  அவனை வாட்டும் சந்தேகம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *