NARAYANA – J K SIVAN

ஆழ்வார் கொடுத்த ஒரு பரிசு.  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

சின்ன வயதில் அப்பா  அடிக்கடி  பாடுவதைக்  கேட்டி ருக் கிறேன். அப்புறம்  சில  பெருமாள் கோவில்களில் சுவற்றில் அதைப்  படித்திருக்கிறேன்… அற்புதமான அந்த பாசுரம்  என் மனதில் பதிந்து விட்டது.என்ன ஆழமான பக்தி பூர்வமான எளிமையாக  புரியும் பாடல். 

 ‘குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்  படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான்  கண்டுகொண் டேன்
நாராயணா என்னும் நாமமே”

இதைப் பாடிய  ஆழ்வார்  திருமங்கை ஆழ்வாராம் . அருமையான  கெட்டிக்கார  ஆழ்வார். நிறைய  பாசுரங் கள் திவ்யப்ரபந்தத்தில் பாடியவர்  இவர் தான்.  எண்ணற்ற  பெருமாள் கோவில்கள் சென்றவர். அவர் பார்க்காத  பெருமாள் கோவில்கள் நிறைய இருக்கிறது. அவர் ஏன் அந்தக் கோவில்களுக்கெள்ளாம்  போகவில்லை? முக்கியமான  காரணம், அத்தனை கோவில்களும் அவர் காலத்துக்கு அப்புறம் யார் யாராலோ  கட்டப்பட்டவை.  

நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?  உலகத்தில் உள்ள  அனைத்து தாவர ஜங்கம , உயிரினங்களையும்  தனக்குள் கொண்டவன். அவனையும்  தாங்குவதையும் தன்னில் கொண்டவன் திரு நாராயணன்.

நாராயணா  என்று ஓரே ஒரு தடவை சொன்னாலே போதும். ‘கப்’ பென்று நம்மை அப்படியே கருடனை விட்டு தூக்கிக் கொண்டு போய் வைகுண்டத்தில் இறக்கி விடுபவன்.   அது நாம்  இந்த பூலோகத்தை விட்டு சென்றபிறகு நடப்பதல்லவா? இருக்கும்போது  என்ன பலன்?  ஆஹா  அருமையான  மென்மை யான எல்லோரும் புகழும்   நல்ல  குலம்  நமக்கு அமையும்.  இக வாழ்வுக்கு தேவையான  செல்வத்தை அவன் மனைவி லக்ஷ்மி  தருவாள்.  ஒரு கஷ்டமும் வராது.  ஏற்கனவே சொல்லிவிட்டேன்  பரமபதம்  பர்மனெண்டாக காரண்டீ.  அம்மாவை விட  பெருமாள் நம்மை நன்றாக ஆசையாக பாசமாக பார்த்துக்  கொள்வான்.  நீ  மறக்காமல் செய்யவேண்டிய ஒரே  வேலை. ”நாராயணா” என்று ஒருநாளைக்கு ஒரு தடவையாவது சொல்வது தான். நிறைய குழந்தை களுக்கு நாராயணன் என்ற பெயர் அதற்கு தான் வைணவர்கள் வைப்பார்கள்.  நாராயணா  என்று  விஷமம் பண்ணும்போது  பிள்ளையைக் கூப்பிட்டு முதுகில் நாலு சாத்து  சாத்த   கத்தினாலும் கூட , நிஜமான நாராயணன்  நம்மை வைகுண்டத்துக்கு காசில்லாமலேயே  கருடன் மேல் அமர்த்தி  கூட்டிச் செல்வான். உடனே இந்த  பாசுரத்தை மனப்பாடம் பண்ணிவிட்டு வீட்டில் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *