மயிலிறகு சாக்ஷியா? – நங்கநல்லூர் J K SIVAN
பச்சை புடைவை கோபியின் வீட்டில் கொள்ளையடித்த வெண்ணையை யமுனை ஆற்றங்கரையில் எல்லோ ரும் விழுங்கி விட்டு கிருஷ்ணனும் நண்பர்களும் ஆற்றில் குதித்து வெகுநேரம் விளையாடி விட்டு கரையேறி னார்கள்.
கிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பினான். கிருஷ்ணன் பார்வை எங்கு செல்கிறது என்று மற்ற பையன்களும்
கவனிக்கத் தவறவில்லை.
வீடு திறந்து கிடந்ததையும் மேலே உறியில் இருந்த வெண்ணெய் பானைகள் உடைந்து கிடப்பதையும், அத்தனை வெண்ணையும் பறிபோனதையும் பார்த்து பதைத்த கோபியின் வீட்டில் என்ன நடக்கிறது என்றும் சேதி வந்தது.
வெளியே ஒளிந்துகொண்டு அந்த கோபி வீட்டில் நுழைந்து என்ன செயகிறாள் என்று ஒரு சில பையன்கள் நோட்டம் விட்டனர். அவள் கோபமாக தனக்குத் தானே பேசிக்கொண்டாள். ”கிருஷ் ணன் கிருஷ்ணன்” என்ற பெயர் அவள் கோபமாக பேசும்போது வெளிப்பட்டது. சற்று நேரத்தில் வெளியே வந்தாள் . அவள் கையில் ஒரு மயிலிறகு. ஒருவன் ஓடிப்போய் கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டான்.
”கிருஷ்ணா, நாம வெண்ணெய் இன்னிக்கு எடுத்
தோமே அந்த வீட்டு மாமி உங்க வீட்டுக்கு கையில் ஒரு மயிலிறகோடு வேகமாக உடைஞ் ச வெண்ணை சட்டைகளையும் எடுத் துண்டு போயிருக்கா. நிறைய கோபி மாமிகள் உங்க வீட்டுக்குள்ளே உட்கார்ந்து உங்கம்மா கிட்டே என்னமோ பேசறாங்கடா’
‘ ”ஆமாம் அந்த பச்சை புடவை கோபி வீட்டிலே நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே வெண்ணை எடுத்தோ மே அந்த மாமி தான் ரொம்ப கோபமா உரக்க பேசறா. உங்கம்மா பதில் சொல்றது காதிலே கேட்டுதுடா ”
”உங்கம்மா யசோதை , ”அந்த பயல் வரட்டும் விசாரிக் கிறேன். இன்னிக்கு இருக்கு அவனுக்கு சரியான பூஜை’/ நீ கவலைப்படாம போ. இனிமே அவனை வெளியி லேயே விடமாட்டேன். நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” என்று சொல்றாடா.’
”’கிருஷ்ணா, நீ வகையாக மாட்டிக்கொண்டாய். அது சரி, கிருஷ்ணா, உன் தலையில் நீ செருகி வைத்திருப் பாயே அந்த மயிலிறகு எங்கே காணோம் ?” என்று கேட்டான். கிருஷ்ணன் தனது தலையை தொட்டுப் பார்த் துக் கொண்டவன் சிரித்தான்.
”ஓஹோ என் தலையிலிருந்து தான் நான் உறியை காலி பண்ணிவிட்டு கீழே குதிக்கும்போது அங்கே விழுந்திருக் கிறது. நான் தான் அவள் வீட்டுக்கு வந்திருந்தேன் என்பதற்கு சாக்ஷி என்று சொல்ல அந்த மயிலிறகை எடுத்து ண்டு என் வீட்டுக்கு போனாள் போல் இருக்கி றது ”என்றான் கிருஷ்ணன்.
”கிருஷ்ணா உன்னை எப்படி காப்பாற்றுவது ன்னு எங்களுக்கு தெரியலடா. நாம பண்ணது தப்பு தானேடா. உன்னோடும் நாங்களும் அங்கே சென்று வெண்ணெய் சட்டியை உடைத்தது. வெண்ணெய் எடுத்து தின்றது எல்லாம் வெளியே வரப்போகிறது. இப்போ என்ன பண்றது?’ என்று கவலைப்பட்டான் கிருஷ்ணனின் பால்ய நண்பன் விஜயாக்ஷன்.
ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் சுற்று முற்றும் பார்த்தான் . வசந்தகாலத்தின் எழிலில் மரங்களும் கொடிகளும் செடிகளும் பூத்து குலுங்குகின்றன. யமுனையில் கரை புரண்டு குளுமையான நீர் ஓடுகிறது.. . கிருஷ்ணன் இடுப்பில் செருகி இருந்த புல்லாங்குழலை எடுத்து இதழ் ஓரம் கொண்டு போனான். கண நேரத்தில் இன்னிசை வெள்ளம் பெருகியது. மழை வரலாம் என்று அறிவிக்க கார்முகில் கூட்டம் மெல்ல மெல்ல கவிந்து வர அந்த பிரதேசத்தில் உள்ள மயில்களுக்கு கொண்டாட்டம். இந்த சூழ்நிலை யில் தானாகவே தோகை விரித்தாடும், மயில்களை கண்ணனின் குழலோசையின் பதங்கள் சற்று அதிக சந்தோஷத்துடனேயே ஆட வைத்தது.
“என்னமாக வாசிக்கிறான் இந்த கிருஷ்ணன் பார்த்தா யா?” என்றது மயில் கூட்டத்தின் தலைவன் மயில் ராஜா தன் ராணியிடம்.
“நீ எப்போதும் தப்பாகவே தான் எதையும் செய்வாய், சொல்வாய்” என்றது மயில் ராணி.
” நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன்” என்று ஆட்டத்தை நிறுத்தி கேட்டது ராஜா மயில்.
” பின்னே என்ன, கிருஷ்ணன் குழல் ஓசையை பார்த்தாயா, என்கிறாயே. கேட்டாயா என்று தானே சொல்லணும்.
”ஓ, நீ அப்படி சொல்கிறாயா?? என்ன செய்வது சொல்; கிருஷ்ணனைப் பார்த்தால் எல்லாம் மறந்து விடுகிறதே. அப்பறம் எப்படி கேட்பது?”
உனக்கு எப்போதும் எங்கோ எதிலோ யார் மேலோ தான் ஞாபகம் என்று என்று ராணி மயில் வழக்கம் போல் சொல்லவே “ஆமாம் நீ எப்பவும் எதிலும் சரியே” என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது ஆண் மயில்.
“இவ்வளவு அழகாக இன்னிசை பொழிந்த கண்ணனுக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?” என்று கேட்டது தலைவன். எதாவது தப்பாக சொல்லி மாட்டிக் கொள்வதை விட ராணியையே யோசிக்க வைக்கலாமே என்று சாமர்த்தியமாக கேட்டது.
“நீ தான் நம் கூட்டத்திலேயே அழகன், உன்னிடம் என்ன அழகான பொருளோ அதையே அவனுக்கு கொடேன்” என்றது ராணி மயில்.
யோசித்து பார்த்த ராஜா மயில் நடமாடிக் கொண்டே கிருஷ்ணனை அணுகியது. அவன் மடியில் தன் தலையை வைத்து கொண்டது. குழலை வாயிலிருந்து எடுத்து விட்டு கிருஷ்ணன் கேட்டான்.
“அழகிய மயிலே எதற்கு என்னிடம் வந்தாய்.சொல்.”
“கிருஷ்ணா, எங்களை உன் கீதத்தால் பரவசப் படுத்திய, ஆடவைத்த நீ எல்லோரையும் பரவசப் படுத்த வேண்டும் என்பதற்காக உனக்கு நாங்கள் மயில்கள் எல்லாரும் சேர்ந்து எங்களால் இயன்ற ஒரு பரிசு தருகிறோம் ஏற்றுக் கொள்வாயா சொல் ?”
“மிக சந்தோஷமாக பெற்றுகொள்கிறேன் மயில் ராஜா “
” இந்தா” என்று அந்த அழகு ஆண் மயில் தன்னி டத்தில் இருந்த ஒரு அழகிய இறகை கண்ண னுக்கு பரிசாக கொடுத்து ” என்னிடம் பெருமைப் பட இருப்பது இது ஒன்றுதான்; இதை எப்போதும் உன்னிடம் வைத்துக் கொள்வாயா?” என்றது
” அப்படியே அழகு மயிலே, இந்த உன் அழகிய மயில் இறகு இந்த கணம் முதல் என்றும் என் தலையில் செருகப்பட்டு இருக்கும் திருப்தியா” என்றான் கிருஷ்ணன்.
எல்லோரும் வீடு திரும்பினார்கள். கிருஷ்ணன் வீடு திரும்பியபோது கோபிகள் போய் விட்டார் கள். யாரும் இல்லை என்று அவன் நினைத்தது தப்பு. ”அம்மா.. அம்மா” என்று தேனொழுக குரல் கொடுத்தான் கிருஷ்ணன். யசோதை வெளியே வந்தாள் . அவளோடு வெண்ணெய் பறி கொடுத் த பச்சை புடவை கோபியும் இருந்தாள் .
இருவர் கண்களும் கண்ணனின் முகத்தை பார்க்க வில்லை. அவன் தலையில் செருகி இருந்த மயிலிறகை மட்டுமே பார்த்தன.
”கண்ணன் தலையில் மயிலிறகை பார்த்தாயா.. இருக்கிறதா இல்லையா ?” என்றாள் யசோதை.
”ஆமாம் ..
அவன் ஒரு மயிலிறகுக்கு மேல் செருகிக் கொள்வ தில்லையே…அது தெரியுமல்லவா உனக்கு ?”.. யசோதை கோபியிடம் கேட்டாள் .
”என்ன அம்மா என் தலை மயிலிறகு பற்றி பேச்சு. நீ தானே இன்று காலை இதை வழக்கம்போல் செருகி விட்டாய்.”
”அப்போது…. நான் பார்த்த என் வீட்டில் இருந்த மயிலிறகு….பச்சை புடவை கோபி தயங்கினாள்.
”காற்றில் எங்காவது பறந்து வந்திருக்கும்… உன் வீட்டைச் சுற்றி மயில்கள் நடமாட்டம் அதிக மாச்சே.” என்றாள் யசோதை. பச்சை புடவை ஒன்றும் புரியாமல் தனக்குத் தானே ஏதோ சொல் லிக்கொண்டு வேகமாக வீட்டுக்கு புறப்பட்டாள்”
கேட்க வேண்டிய கேள்வி எதுவும் யசோதை கேட்கவில்லை. கண்ணனை வாரி அணைத்துக் கொண்டாள் .”கிருஷ்ணா, எங்கேடா இத்தனை நேரம் போயிருந்தே ””அம்மா நான் யாரோடும் பேசவில்லை, யார் வீட்டுக்கும் போகவில்லை மா. பேசாம, நண்பர் களோடு யமுனைக்கரையில் புல்லாங்குழல் மட்டும் வாசித்துக்கொண்டு இருந்தேன்.. மான்கள் பறவைகள், ராதை, அவள் தோழிகள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தோம். பசிக்கிறது மா. ஏதாவது சாப்பிடக் குடுக்கிறீயா?”
கபட நாடக சூத்ரதாரிக்கு உணவு கொண்டுவர யசோதை உள்ளே ஓடினாள்.