அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
கூற்றுவ நாயனார்
இந்த 84 வருஷங்களில் எனக்குத் தெரியாத ஒருவர் கூற்றுவ நாயனார். எப்படி மறந்தேன்? ஏன் மறந்தேன்? மறக்காவிட்டாலும் யார் இந்த கூற்றுவர் என்று ஏன் ஒரு கணம் கூட யோசிக்கவே இல்லை? எல்லாவற் றுக்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. அது இப்போது வந்துவிட்டதால் இவரைப் பற்றி அறிய ஒரு ஆவல் தோன்றியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?. சைவ மதத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் கூற்றுவ நாயனார்.
களந்தை என்னும் ஒரு ஊருக்கு ஒரு குட்டி ராஜா இந்த கூற்றுவர். களப்பாளர்கள் என்ற மரபை சேர்ந் தவர். அவர் ஒரு ராஜா என்பதைக் காட்டிலும் சிறந்த சிவ பக்தர் என்ற பெருமை தான் ஜாஸ்தி. சிவநாமத்தை ஒருபோதும் மறக்காதவர். ஓம் நமசிவாய என்பது தான் அவர் மூச்சு. சிவனடியார்களைத் தேடி அவர்களுக்கு சேவை செய்ய அலாதி பிரியம் கொண்டவர்.
எதிரிகளுக்கு யமன் போல் நல்ல சக்தி வாய்ந்த ராஜா என்பதால் கூற்றுவன் என்று பெயர். வளநாடுகளையெல்லாம் கவர்ந்து வென்றார். எவரும் தடுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. சகலரையும் வென்று சக்ரவர்த்தியாக முடி சூட்டுக்கொள்ள விரும்பிய கூறுவர் தில்லை வாழ் அந்தணர்களை தமக்கு முடி சூட்டும்படி கேட்டுக்கொண்டார்.
”மஹாராஜா, மன்னிக்கவேண்டும், சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி மற்றவர்க்கு நாம் முடி சூட்ட மாட்டோம்” என்று மறுத்துவிட்டார்கள். இப்படி பளிச்சென்று சொல்லிவிட்டோமே. ராஜா கோபத்தில் தீங்கிழைக்கலாம் என்ற பயத்தில் சிதம்பரத்தை விட்டு தில்லைவாழ் அந்தணர்கள் பலர் சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இதை கேள்விப்பட்ட ராஜா கூற்றுவர் மிகவும் மனம் தளர்ந்து சோகமுற்றார். அன்று இரவு கனவில் சிதம்பரம் நடராஜா காட்சி அளித்தார்.
‘பரமேஸ்வரா, எனக்கு சக்ரவர்த்தி கிரீடம் வேண்டாம், உனது திருப்பாதம் ஒன்றே என் சிரசில் நிலையாக பெற வேண்டும், அதுவே எனக்கு முடி, அதுவே என் முடிவு” என்று ஆடவல்லானைப் போற்றி வணங்கினார்.
அவ்வாறே ஆடல்வல்லான் தனது திருவடிகளை கூறுவர் சிரசில் வைத்து ஆசிர்வதித்தார்.
எங்கெல்லாம் சிவாலயங்கள் உண்டோ அங்கெல்லாம் சென்று சிவனை வணங்கி மகிழ்ந்தார். தனது சிரத்தை அங்கெல்லாம் சிவனடியில் வைத்து வணங்கினார். காலம் கடந்தது கூறுவர் தனது அந்திம காலத்தில் சிவனடியே சேர்ந்தார்.
சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயர் அறிய இதை எழுதும்போது வரை தெரியவில்லை. நிறைய பேர்களின் அப்பா அம்மா வைத்த இயற்பெயர் தெரியாமல், ஏதோ காரணப்பெயர்களில் தான் நாம் அறிகிறோம்.
அவரது வீரத்தால் அவருடைய தேர்ப் படை, காலாள் படை, குதிரைப் படை மற்றும் யானைப் படை என நால்வகையான படைகளும் சக்தி வாய்ந்து எதிரிகளுக்கு எமனாக, கூற்றுவனாக இருந்தார் என்று அறியப்பட்டவர். சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர்களையும் மேலும் பல மன்னர்களையும் போரில் வென்று சக்ரவர்த்தி என்று முடி சூட்டிக்கொள்ள தருணம் வந்தபோது எனக்கு சிதம்பரம் நடராஜன் எனும் என் சிவனின் பக்தர்கள் தில்லை வாழ் அந்தணர் தாம் முடிசூட்டவேண்டும் என்று விருப்பம் தோன்றியது. ஆனால் அவர்கள் தான் மறுத்து விட்டார்களே. மூவேந்தர்களின் வழியில் நாம் பிறக்கவில்லை என்ற குறை கூற்றுவ ராஜாவை வாட்டியது. மன்னர்கள் தாமாக முடி சூடிக் கொள்வதில்லை. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்கு மணிமுடியைச் சூட்டுவார்கள். சிதம்பரம், திருவாரூர், உறையூர் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்வார்கள் ளுவது வழக்கம். கூற்றுவ ராஜா சிதம்பரத்தை தேர்ந்தெடுத்தார். சோழ ராஜாக்களுக்கு கிரீடத்தை தில்லைவாழ் அந்தணர்கள் தாம் சூட்டினார்கள். ஆனால் கூறுவர் மூவேந்தர் பரம்பரை இல்லையே, அதுவும் சோழ ராஜ பரம்பரை இல்லையே. ஆகவே தான் சோழ ராஜாக்களுக்கு தவிர மற்றவை ராஜாக்களுக்கு மரபை மீறி திருமுடி சூட்டி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்து விட்டார்கள்.
‘தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூட வழி இல்லாவிட்டால் என்ன.பரவாயில்லை. அவர்களில் முதல்வனாகிய சிதம்பரம் நடராஜன் திருவடியே எனக்கு முடி என்று கூற்றுவ ராஜா முடிவெடுத்துவிட்டார். நடராஜன் திருவடியை விட, குஞ்சித பாதத்தை, முடியில் சூடிக்கொள்வதை விட வேறே கிரீடம் இருக்கிறதா? இதை கனவில் சிவனே உணர்த்த விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார். தில்லை வாழ் அந்தணர்கள் நான் உங்கள் அடிமை, எல்லோரும் திரும்பி வாருங்கள் என்று ஓலை அனுப்பி அவர்களும் சேரநாட்டிலிருந்து சிதம்பரத்துக்கு திரும்பி வந்தனர்.கூற்றுவ ராஜா இனி கூற்றுவ நாயனார்.
கூற்றுவ நாயனார் நிறைய சிவஸ்தலங்களுக்கு சென்றார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்து இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை அடைந்தார். குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்து வருகிறது.
திருத்தொண்ட தொகையில் ‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்‘ என்று சுந்தரர் போற்றுகிறார்