RAMANA MAHARSHI – J K SIVAN

ஞானிகளும்   ஆத்ம  பலமும்   –   நங்கநல்லூர்     J K  SIVAN 

”ரமணர் ஒரு பெரிய  மகரிஷி என்பது  சரியா?’
‘ அண்ணாமலை சாமி என்ற   ரமண பக்தரை  ஆஸ்ரமத்தில் ஒரு வெள்ளைக்காரர் இப்படி கேட்டார்.

அண்ணாமலை சாமி:    ”ஒரு பெரிய  தீபம் எரிகிறது.   பல பேரிடம்  அகல் விளக்கு  எண்ணெய்  திரி இருந்தும்  வெளிச்சம்  இல்லை. தீபம் எரியவேண்டும் என்றால் எப்படி?  ஒரு   பெரிய தீபம்  சுடர்  விட்டு  எரிகிறதே. அதிலிருந்து  தான் மற்ற  அகல் விளக்குகளின் திரிகள்  ஒளி பெறுகிறது.   எவ்வளவு  தான்  அகல் தீபங்கள் எரிந்தாலும்  பெரிய தீபத்தின் ஒளி இருக்கிறவரை  சின்ன அகல் விளக்கின் ஒளி   எடுபடாது.  தேவையும்  இல்லை. பெரிய  விளக்கிலிருந்து வெகு   தூரம்  போனதும்  கையிலே இருக்கிற  அகல் விளக்கின் ஒளியில் நான்  காலடி எடுத்து வைத்து  மெதுவாக போகிறேன்.  அடுத்தவர்களுக்கு ஒளி காட்ட  அது போதாது.  என்னை  முதலில் சரியாக  வழி நடத்த உதவினாலே  நான்  அதிர்ஷ் டசாலி.சிலருக்கு  அவர்களின் கையில் இருக்கும்   அகல் ஒளி  அவர்களுக்கு வழிகாட்டவே  போதவில்லையே.
 எத்தனையோ ஞானிகள் இருக்கிறார்கள். ஆத்ம ஞானம் பெற்று அமர்கிறார்கள், சிலர் மற்றவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்கிறார்கள். சிலர் ஒன்றுமே சொல்லாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நடுவே    அண்ணாமலை  தீபம்  போன்ற  பெரிய  ஞான  தீபம்  ரமண மகரிஷி.
தண்ணீர்  கிணற்றிலும் இருக்கிறது பெரிய ஏரியிலும்  இருக்கிறது.  அநேக  பிராணிகளின் தாகத்தை ஏரி  நீர் தான் தீர்க்கும்.  சின்ன விளக்கு  ஒரு சின்ன அறைக்கு மட்டுமே  முணுக் முணுக் னு வெளிச்சம் தரும்.  மகரிஷி  ரமணர்   சூரிய ஒளி மாதிரி. எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும்  எப்போதும்  பார்பக்ஷமின்றி ஞானம் தருபவர்.

வெள்ளைக்காரர்:   ”சில  ஞானிகள் பெரிய விளக்குகள் , மற்றும்  சிலர்  முணுக் முணுக் விளக்குகளா ? சின்ன விளக்குகள் பெரிதாகாதா? எப்போதுமே அப்படித்தான் இருக்குமா?

அண்ணாமலைசாமி:   ”விளக்கு எல்லாம் ஒண்ணு  தான்.   சில ஞானிகளால் தான்  நிறைய பேரை  ஞானம் பெற செய்ய முடியும்.  ஞானத்தை  தான் மட்டும்  பெறுவது வேறு.  மற்றவர்களை பெறச் செய்வது வேறு  ஸார். எல்லோராலும் மற்றவரை ஞானம் பெற செய்ய முடியாது.”

வெ.கா:  ”நான்  பகவான்  ரமண மஹரிஷி சொன்ன
தாக  எங்கோ படிச்சேன்.    ”ஞானிகளால்   ஜீவனின்
 மனதை  பரமாத் மாவின் மனதோடு  கலக்க செய்ய முடியும் ” னு  சொல்லி இருக்கார். 

அ .சா:  ”ஆமாம்   பெரிய  கப்பல்லே  பல பேரை
  அக்கரைக்கு  கொண்டு போய் சேரலாம். குட்டி படகுலே  சிலரை மட்டும் தான் கொண்டு சேர்க்கலாம்”

வெ .கா:  ”சில ஞானிகளால் யாரையுமே அக்கரை  கொண்டு சேர்க்க முடியாதா?

அ .சா:    ”சில  ஞானிகள் சிஷ்யர்கள்  இல்லாதவர்கள்.  அல்லது சிஷ்யர்களைத்  தேடாதவர்கள். தனித்திருப்
பவர்கள். அவர்கள் எவரையும் கரை சேர்ப்பதில்  கவனம் செலுத்துவதில்லை.   ஈடுபடுவதில்லை.  அவர்கள்  ஞான சக்தி குறிப்பாக சிஷ்யர்கள் என்று இல்லாமல் எல்லோ ருக்கும் பொதுவாக  லோக க்ஷேமத்துக்காக  ஏதாவது உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   சிலர்  சமாதியில் கரைந்து விடுபவர்கள். மற்றவரோடு  நேரடி  சம்பந்தமில்லாதவர்கள்.  பகவான் ரமணரோடு   ஆஸ்ரமத்தில்   லக்ஷ்மி  என்ற  ஒரு பசு இருந்தது. பூர்வ ஜென்ம  புண்யம் செய்த ஞானி அது  என்பார்  ரமணர்.
 பகவானின் தாயார் அழகம்மாள் அப்படித்தான்.  தான்  தியானம் செய்து கரை ஏறியவள் . அவளுக்கும் சேர்த்து தான் ரமணர்  உலகில்  அநேகரை கரை ஏற்றி விட்டார்.  இன்னும் ஏற்றுகிறாரே” . 

எல்லா ஞானிகளும்  சமம் தான்.   சிலர்  அதிக  சிஷ்யர்கள் கொண்டவர்கள்  என்பதால்  உயர்ந்த ஞானம் கொண்டவர்கள்  என்றோ  சிஷ்யர்களை அருகிலேயே   சேர்க்காத  சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்றோர்  குறைந்த ஞானம் கொண்டவர்கள்  என்றோ  ஒரு போதும்  தப்பாக  மதிப்பிடக்கூடாது. ராமணரையே உலகுக்கு அளித்தவர் சேஷாத்ரி ஸ்வாமிகள்.    பகவான் ரமண மகரிஷி ஒருபோதும்  ஞானிகளை  ஒப்பிட்டதில்லை.   ஆத்ம ஞானம் அடைந்த ஞானி என்பதற்கு மேல் உயர்ந்த ஸ்தானம் எதுவு மில்லை.  இதில்  இவர் உயர்ந்த ஞானி,  அவர்  ஞானம்
சற்று குறைந்தவர்  என்பதே தவறான  ஒப்பீடு.

ஒரு டம்ளரில்  நீர் இருந்தால் ஒருவர் தாகம் தீரும். ஒரு பெரிய  அண்டாவில் நீர் இருந்தால் பலரின் தாகம் தீருமல்லவா?  கிணற்றில்  நீர்  இருந்தால்  ஊருக்கே  தாகம் தீரும்.   மூன்றிலும்  உள்ள  நீர் ஒன்று தானே. அதுபோல் சில ஞானிகள் ஒதுங்கி தனித்து வாழ்வார் கள். சிலர்  பல லக்ஷம் சிஷ்யர்களோடு, வெளி உலகில் காண்பார்கள். உள்ளுலகில் இருவரும் சமம்.  சில ஞானிகள் தபஸ் இருந்து உலகில் பலரின் துன்பம் போக்குபவர்கள்.  காஞ்சி மகா பெரியவர்கள் போல் உள்ளவர்கள். சிஷ்யர்களை தேடுபவர்கள் அல்ல. வந்த  பக்தர்களை வெறுப்பதில்லை.  அனைவருக்கும் முடிந்தவரை உதவுபவர். 

தானாக  தனியே அமர்ந்து ஞானத்தை தேடி ஆத்ம விசாரத்தின் மூலம்  ஞானம் பெற்றவர்கள் சக்தி கொண்டவர்கள். எவ்வளவு தனித்து த்யானத்தில்  ஈடுபடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு  ஆத்ம பலம்  பெருகும்.  இந்த சக்தி மூலம் தான் குருமார்கள் சிஷ்யர்களுக்கு போதிக்கிறார்கள்.  எல்லோராலும் தனித்து அமர்ந்து த்யானம் செய்ய இயலாது. அது பூர்வ ஜென்ம  சுக்ருதம். ’

பகவான் ரமணர்  முதல் பத்து வருஷங்கள் போல  திருவண்ணாமலையில்  குகையில் அமர்ந்து தனித்து மௌனமாக  ஆத்ம  ஞானம் தேடி பலம் அடைந்தவர்.  தேகத்தை   புலன்களை வென்றவர். தேகபலத்தை வைத்துக்கொண்டு வாழ்வது ஒரு யானை சிறிய  குடிசைக்குள் புகுந்த கதை.  பகவான்  ரமணர்  தலை யை ஆட்டிக்கொண்டோ,  கைகளை கால்களை ஆட்டிக்கொண்டு  ஆடிக்கொண்டு  கொம்பை ஊன்றிக்கொண்டு  நடந்ததோ அவருக்கு எந்த  நரம்பு, வியாதியும் இல்லை.    ஆத்ம பலம்  கொந்தளிக்கும் போது அதை  தேகம்  தாங்காமல்  நடுங்குவது. இதுவும் ஒரு விதத்தில்  யானை தொத்தல் குடிசைக்குள் புகுந்த கதை தான். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *