கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 201-215
201 எது முக்தி எனப்படுகிறது?
அஞ்ஞானத்தின் முடிவே ஞானத்தின் மூலம் முக்தி தருவது.
202 வேதங்கள் எங்கேயிருந்து உருவானவை?
பிரணவ சப்தமான ‘ஓம்’ எனும் அக்ஷரத்திலிருந்து
203. எதை அப்படியே கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், தடையில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்?””குருவின் வாக்கை, உபதேசத்தை, அறிவுரையை”
204. மானிடர்களுக்கு எது அவசியம் ?தனக்கும் பிறருக்கும் நல்லதே விளைவிக்கும் வாழ்க்கை.
205. எது புத்திசாலித்தனம் இல்லை?தெரிந்ததையே திருப்பி தெரிந்து கொள்வது.
206. எவன் உஷாரானவன்?நல்லது கெட்டது, நன்மை தீமை என்ற பாகுபாடு உணர்ந்து திடமானத்தோடு வாழ்பவன்.
207. வாழ்வில் சந்தோஷத்தை அளிப்பது எது?
நல்லோர் நட்பு
208 யார் புத்திசாலித்தனமாக சந்தோஷத்தை கெடுப்பவற்றை அழிப்பவனவிருப்பங்கள், ஆசைகள் அற்றவன் .209. எது மரணத்துக்கு சமமானதுமுட்டாள்தனம். அறியாமை.
210. எது கடைசிவரை ஒருவனை உறுத்திக்கொண்டே இருக்கும்?ரஹஸ்யமாக அவன் செய்த பாபங்கள்.
211. ரொம்ப பிரியத்தோடு செய்ய வேண்டிய பழக்கம் எது?
ஏழை எளியவர்க்கு, தேவைப்படுபவர்களுக்கு காட்டும் கருணை. நல்லோர் நட்பு.
212 எவனை நல்லவன் என்பது?பிறர்க்கு உதவும் குணம் உடையவனை.
213.இந்த உலகத்தையே ஜெயிப்பவன் யார்?உண்மையாக, சத்தியமாக, நேர்மையோடு, நாணயத்தோடு பொறுமையோடு உள்ளவன்.
214. எதில் ஒருவகன் உறுதியாக இருக்கவேண்டும்.?நேர்மையான உண்மையான பாதையில் செல்பவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் நன்மைகள் சேரும்.
215. கலியுகத்திலும் யார் நல்ல குணத்தோடு, பண்போடு வாழ்பவர்கள்?இறைவனிடம் பக்தி,உண்மையை, சத்யம், நேர்மை, நாணயத்திலிருந்து பிறழாதவர்கள்.