கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 261-275
261. எவை ரம்யமான அழகிய வார்த்தைகள் ?
பொய் கலக்காத உண்மை, சத்ய வார்த்தைகள்.
262. எப்போது செல்வந்தனை போற்றுவார்கள்?
செல்வம் பரம்பரை வம்சாவழியாக சேர்த்து வைத்திருப்பதால் பெருமை இல்லை. அதில் ஒரு பங்காவது இல்லாதவர் களுக்கு, எளியோர்க்கு தானம் செய்பவன் போற்றப்படுகிறான்.
263. எவன் கெட்டிக்காரன் எனப்படுபவன்?
பண்பும் எளிமையும் கொண்டவன் .
264. எவனை திருமகள் விரும்புவாள்?
நேர்மை நியாயம் கொண்ட மனதோடு ஒழுக்கமாக வாழும், பிறர்க்குதவும், நற்குணவானை மஹா லக்ஷ்மிக்கு பிடிக்கும். வாரிக் கொடுப்பாள்.
265. ஒவ்வொருவனும் எதைப் பெற பாடுபடவேண்டும்?ஞானம், தைர்யம், பரோபகாரம் இருந்தால் அதுவே புகழ், புண்யம் எல்லாம் கொண்டுவந்து தருமே.
266.எதைக் கண்டு அஞ்சவேண்டும்?
பணத்தைக் கண்டு.
267. ஒருவனின் சந்தோஷமான வாழ்க்கைக்கு எது காரணம்?
அவன் செய்த பூர்வ ஜென்ம புண்யம்.
268. நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்களுக்கு எது காரணம்?
வேறேது. எல்லாம் நாம் முன்பே செய்த பாபா காரியங்களின் பலன் தான்.
269. உண்மையான செல்வத்தை எவன் பெறுகிறான்?
பகவானை முழு மனதோடு நம்பி வழிபடும் பக்தன் முக்தி பெறுகிறான் அதல்லவோ நிறைந்த செல்வம்.
270. எவன் முன்னேறுபவன்.?
மனதில் தெய்வ பக்தியோடு உண்மையாக தனக்கும் பிறர்க்கும் பயனுள்ள காரியங்கள் செய்பவன்.
271. எப்போது பொய் பாபா கார்யமாகாது?
தர்மத்தை பாதுகாக்க சொல்லப்படும் பொய் .
272. நல்லோர்க்கு பலம் எதுவாக இருக்கிறது?
தெய்வ நம்பிக்கை.
273. எதைத் தெய்வம் என்று சொல்லலாம்?
ஒருவர் செய்யும் நல்ல பலன் தரும் காரியங்கள்.
274. எவன் நற்பணிகள் செய்பவன்?
நல்லோர்களால் போற்றப்படுபவன்
275. எவன் அதிர்ஷ்டக்காரன்?
சர்வ சங்க பரித்யாகிய பற்றற்ற சந்நியாசி. மஹா பெரியவர் போல் இன்னொருவரைப் பார்க்க முடியுமா?