PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை  231-245

231.  வேதனை, வலி எல்லாம் எதிலிருந்து வந்து சேர்கிறது?
இதிலென்ன அதிசயம் . இதற்கெல்லாம் காரணமே   செய்த பாபங்கள் தான். 

232.எவனை சிறந்தவனாக ஏற்கலாம்?
சங்கரனை  பக்தியோடு வணங்குபவனை.

233.  நல்லவர்களுக்கு எது பலம்?
தெய்வம் ஒன்றே. 

234. நல்லவர்கள் என்றால் யார்?
போதும் என்ற மனம் கொண்டு இருப்பதில் திருப்தி அடைபவர்கள். எதற்கும் ஆசைப்படாதவர்கள்.

235. எதை தெய்வீகம் எனலாம்?
நல்ல காரியங்களை.  அதனால் பலர்  பயன் அடைகி றார்கள்.வாழ்த்துவார்கள். 

236. கிரஹஸ்தனின்  தியாகம்  எது?
வேத சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட் டிருக்கிற தோ, அதை பின் பற்றி எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயல்களை  தன்னலமின்றி புரிவது. 

237.  எவன்  தற்கொலை  செய்து கொள்பவன்?தனக்கிடப்பட்ட  ஸ்வதர்ம  கர்மாக்களை, காரியங்க ளை, புரியாமல் காலம் வீணாக்கியவன். 

238. எவன் உயர்ந்தவன்?
அறிவுள்ளவனும்  நற்காரியங்களை மட்டுமே செய்பவன்.வணங்கத்தகுந்தவன்.

239. நாம்  எல்லோருமே  தேகத்தோடு உள்ளவர்கள், இதில் யார் அதிர்ஷ்டசாலி?
நல்ல ஆரோக்யமாக  உடலை வைத்துக்கொண்டு  அதன்மூலம்  பிறர்க்கு சேவை செய்பவன். 

240. எவன் உழைப்பின் பலனை அனுபவிப்பவன்.?உழவன்.

241.எவனை பாபம் அணுகுவதில்லை?
வேத நூல்களை  கற்று, இறைவனை மனதில் நிறுத்தி தியானம் செய்பவனை.

242. எவன் முழுமையான கிரஹஸ்தன்?
வம்சம்  பரம்பரை, வாரிசு உள்ளவன்.

243.  மனிதர்களுக்கு கஷ்டமானது எது?
தொடர்ந்து விடாமல்  மனதை கட்டுப்பாட்டில் வைத்தி ருப்பது. 

244. எவனப்பா  பிரம்மச்சாரி?
தனது உயிர்ச் சக்தியை வீணாக்காமல் வளர்த்துக் கொண்டே  போகிறவன். புலன்களை வென்றவன். 

245.உலகத்தை தொடர்ந்து பாதுகாத்து காப்பாற்றுவது யார்?
சூரியன்.   ஓய்வில்லாமல், சகல உயிர்களுக்கும் ஜீவ சக்தி அளிப்பவன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *